Latest Updates
-
அடுத்த 6 மாதம் இந்த 3 ராசிக்காரங்க தொழில் மற்றும் பண விஷயத்தில் கவனமா இருக்கணும்.. -
Actor Bhagyaraj Death: வாக்கிங் சென்ற பின் காலமான நடிகர் பாக்யராஜ்! உண்மையில் வாக்கிங் மாரடைப்பை ஏற்படுத்துமா? -
சத்தான.. எலுமிச்சை இஞ்சி ரசம் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
வெறும் தோசையை விட முட்டை தோசை ஏன் சிறந்தது? - விளக்கும் டாக்டர்.பிரகாஷ்மூர்த்தி! -
ஜூன் இறுதியில் உருவாகும் அங்காரக யோகம்: டிசம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்! -
1/2 கப் வேர்க்கடலை இருந்தா.. இப்படி சட்னி அரைங்க.. வீட்டுல எல்லாரும் எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 27 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
புதன் வக்ர பெயர்ச்சியால் ஜூன் இறுதியில் இந்த 3 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
சுக்கிரன்-கேதுவின் இணைப்பால் ஜூலை மாதம் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
அடர்த்தியான தலைமுடியை பெற உதவும் செம்பருத்தி எண்ணெய் - எப்படி தயாரிக்கணும் தெரியுமா?
ஆள் நடமாட்டமே இல்லாத சீனாவின் பேய் நகரம் பற்றி உங்களுக்கு தெரியுமா?
அழகிய தீவாக மாறிய சீனாவின் "பேய்" நகரம் : இயற்கை செழிப்பின் மாயாஜாலம்!!!
சீனாவின் ஓர் கடற்கரை தீவு தான் அந்த பகுதி. மீன் பிடித்தல் தான் அப்பகுதியின் முக்கிய தொழில். சரியான வியாபாரம் இல்லாதால், அப்பகுதியை சேர்ந்த மக்கள் அனைவரும் அருகாமையில் இருந்து முக்கிய பகுதிகளுக்கு குடிப் பெயர்ந்து போய்விட்டனர்.
பேய்கள் மற்றும் ஆவிகள் பற்றிய வேடிக்கையான 10 தகவல்கள்!!!
காலப்போக்கில் ஆட்களே இல்லாமல் வெறிச்சோடி இருந்ததால், அந்த பகுதி பேய் நகரம் என்றும் அழைக்கப்பட்டு வந்தது. ஆனால், இயற்கையின் மாயஜாலத்தினால், இன்று சேங்ஸி (Shengsi) எனப்படும் அந்த தீவு பச்சைப் பசேலென காட்சியளிக்கிறது.
மக்கள் இறந்த பிறகு பேயாவதற்கான சில காரணங்கள்!!!
யாரும் இனி இங்கு குடிப் பெயர்ந்து வர முடியாது. ஆனால், இது ஓர் அழகிய சுற்றுலா தளமாக மாற நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. ஆயினும், மக்கள் இன்றி இருந்த காரணத்தினால், பேய் நகரம் என்று கூறப்பட்டு வந்ததால் என்னவோ, அதிகமாக யாரும் இங்கு வர ஆர்வம் காட்டுவதில்லை...

அனாதையாக இருக்கும் பகுதி
பச்சை நிற போர்வை போத்தியது போல அழகாக இருப்பினும், மக்கள் ஆள் நடமாட்டம் இன்றி அனாதையாக இருக்கிறது இந்த தீவு.

சுவர்களெங்கும் பச்சை நிறம்
ஒரு சென்டிமீட்டர் அளவு கூட அளவு விடாமல், டைலர் கட்சிதமாக துணி தைத்தது போல பச்சை செடிகள் கட்டிடங்களை அரவணைத்து இருக்கிறது.

பேய் நகரம் - சோலைவனம்
பேய் நகரில் இருந்து, வியக்க வைக்கும் அளவில் ஓர் இரம்மியமான சோலைவனமாக மாறி காட்சியளிக்கிறது இந்த தீவு.

சுவர்களிலும் முளைத்த செடிகள்
சுவர்களின் துவாரங்கள், விரிசல்களில் கூட செய்தால் முளைத்திருக்கின்றன.

புகைப்படம் எடுப்பதற்கு ஏற்ற இடம்
இயற்கையை விரும்பும் புகைப்படக் கலைஞர்களுக்கு இந்த தீவு ஓர் வரபிரசாதம்.

தீவின் வரைப்படம்
சீனாவின் கடற்கரை பகுதியில் இருக்கும் சேங்ஸி (Shengsi)தீவின் வரைப்படம்

கடற்கரை ஒட்டிய அழகு தீவு
ஹாலிவுட் படங்களில் கிராபிக்ஸ் செய்து காண்பித்தால் கூட இப்படி ஓர் அழகை கொண்டுவர முடியாது போல. இயற்கை செய்த அற்புதம்.

இயற்கையின் ஓவியம்
ஒரு வேளை, மனிதர்கள் அழிந்துவிட்டால், பூமி திரும்பவும் அழகாக மாறிவிடும் என்பதற்கு இந்த தீவு ஓர் நல்ல உதாரணம்.

பாதைகள் எங்கும் புல்வெளி
தீவினுள் பெரும்பாலும் கற்களால் ஆன பாதைகளும், படிக்கட்டுகளும் தான் இருக்கிறது, அவைகளிலும் கூட புல், செடிகள் முளைத்திருக்கின்றன.

வீடுகளின் வெளிப்புற தோற்றம்
தீவில் இருக்கும் வீடுகளின் வெளிப்புற தோற்றம் இவை.

சொர்க்க வாசல் இப்படி தான் இருக்குமோ..
ஒருவேளை சொர்கத்திற்கு செல்லும் வழி கூட இவ்வாறு தான் மிக அழகாக இருக்கும் போல. இவ்வளவு அழகான இடத்தை காண மக்கள் வராமல், அஞ்சி நடுங்குவது தான் ஆச்சரியமாக இருக்கிறது.

மீண்டும் மக்கள் வராமல் இருப்பதே நல்லது
மீண்டும் மக்கள் வந்தால் ஒருவேளை, இந்த தீவு பழையபடி பேய் (மக்கள்) நகரமாக கூட மாறிவிடலாம். எனவே, மக்கள் வராமல் இருப்பதே நல்லது. ஆயினும், இந்த அழகை காண ஒருமுறையாவது இந்த தீவிற்கு சென்று வர வேண்டும். மற்றும் இந்த இடத்தை மீட்டெடுக்க சீனா அரசு பரிசீலித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.



Click it and Unblock the Notifications