Latest Updates
-
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்..
இந்த 5 பொருட்களை கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணருக்கு வைத்து வழிபடுவது உங்கள் பாவங்களை நீக்குமாம்...!
Krishna Jayanthi 2023: இந்தியாவின் முக்கியமான விழாக்களில் ஒன்று கிருஷ்ண ஜெயந்தி. இந்த பண்டிகை மக்களுக்கு உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் கொடுக்க கூடியது. ஸ்ரீ கிருஷ்ணரின் பிறந்த நாளைக் கொண்டாடும் நாளாக கிருஷ்ண ஜெயந்தி குறிக்கப்படுகிறது.
பகவான் கிருஷ்ணர் பாத்ரபத மாத அஷ்டமி திதியில் பிறந்தார் மற்றும் ரோகிணி நட்சத்திரத்துடன் இணைந்தார். கிரிகோரியன் நாட்காட்டியின்படி, இது வழக்கமாக ஆகஸ்ட் - செப்டம்பர் மாதங்களில் வரும். இந்த வருடம் கிருஷ்ண ஜெயந்தி செப்டம்பர் மாதம் 6 ஆம் தேதி வருகிறது.

ஸ்ரீ கிருஷ்ணரின் வாழ்க்கை மற்றும் போதனைகள் இந்த பூமியில் உள்ள ஒவ்வொரு நபரிடமும் பச்சாதாபத்துடன் இருக்கவும், நம் வாழ்க்கை முறையில் முதலில் மனிதாபிமானத்துடன் இருக்கவும் சொல்கிறது.
ஸ்ரீ கிருஷ்ணர் அன்பு, நம்பிக்கை மற்றும் நேர்மறை நோக்கத்துடன் தனக்கு வழங்கப்படும் எதையும் நேசிக்கிறார். இருப்பினும், அவர் மிகவும் விரும்பும் சில விஷயங்கள் உள்ளன, இந்த பொருட்களை அவருக்கு கிருஷ்ண ஜெயந்தி நாளில் வழங்குவது அவரது ஆசீர்வாதங்களை பெற உதவும்.
வெண்ணெய்
வெண்ணெய் மீது கிருஷ்ணருக்கு இருக்கும் பிரியம் நாம் நன்கு அறிந்ததுதான், மேலும் அவரது கிருஷ்ண லீலை முழுவதும் வெண்ணெயுடன் அவருடைய பிணைப்பு நிறைந்துள்ளது . இது ஸ்ரீ கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்தமான விஷயங்களில் ஒன்றாகும், மேலும் இது பக்தருக்கும் பகவானுக்கும் இடையே ஒரு அழகான மற்றும் உயிரோட்டமான தொடர்பை ஏற்படுத்துகிறது.
கிருஷ்ண ஜெயந்தி அன்று ஸ்ரீ கிருஷ்ணருக்கு அதை வைத்து வழிபடுவது உங்களின் அறிவுசார் திறனை மேம்படுத்துகிறது மற்றும் வாழ்க்கையில் நிம்மதியை ஏற்படுத்துகிறது.
மக்னா அல்லது தாமரை விதைகள்
தாமரை விதை சேர்க்கப்பட்ட பாயாசம் என்பது ஸ்ரீ கிருஷ்ணருக்கு பிடித்த மற்றொரு இனிமையான பொருளாகும். எண் கணிதத்தின் படி, மக்னா வியாழன் மற்றும் சுக்கிரனால் ஆளப்படுகிறது, மேலும் ஸ்ரீ கிருஷ்ணருக்கு அதை வழங்குவதன் மூலம் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் நீங்கள் பெயர், புகழ் மற்றும் செல்வத்தால் ஆசீர்வதிக்கப்படுவார்கள்.
ரக்ஷா சூத்ரா
பெயரில் குறிப்பிட்டுள்ளது போல, இது மனிதனைச் சுற்றி தெய்வீக பாதுகாப்பை வழங்கும் ஒரு புனிதமான பாதுகாப்பாகும். மகாபாரதத்தில், திரௌபதி ஸ்ரீ கிருஷ்ணருக்கு ஒரு துணியை (ரக்ஷா சூத்திரத்தின் வடிவத்தில்) கட்டினார்.
அதை ஸ்ரீ கிருஷ்ணருக்கு சமர்ப்பிப்பது ஸ்ரீ கிருஷ்ணருடன் ஒரு வலுவான உறவை ஏற்படுத்துகிறது மற்றும் நம்பிக்கை இல்லாத எல்லா சூழ்நிலைகளிலும் கடவுள் வந்து காப்பாற்றுவார் என்று நம்பிக்கையை அளிக்கிறது. சர்வவல்லமையுள்ள இந்த புனிதமான பந்தம் உங்களுக்கு வலிமையான பாதுகாப்பை ஏற்படுத்துகிறது.
பஞ்சாமிர்தம்
'பஞ்சாமிர்தம்' என்பது பசுவின் பால், தயிர், நெய், தேன் மற்றும் வெல்லம் ஆகியவற்றைக் கலந்து செய்யப்படும் புனிதமான பிரசாதம். பஞ்சாமிர்தத்தை பிரசாதமாக வழங்குவதுடன், தக்ஷிணவர்த்தி சங்கை கொண்டு ஸ்ரீ கிருஷ்ணருக்கு அபிஷேகம் செய்வதற்கும் பயன்படுத்தலாம். மேலும், ஸ்ரீ கிருஷ்ணரின் பஞ்சாமிர்த அபிஷேகத்திற்குப் பிறகு, ரோஜா இதழ்கள் மற்றும் துளசி இலைகளுடன் கங்கை நீரையும் கலந்து அபிஷேகம் செய்யலாம்.
ஸ்ரீ கிருஷ்ணருக்கு பஞ்சாமிர்தத்தை அபிஷேகம் செய்வதும், பிரசாதமாக சமர்பிப்பதும் அவர்களுக்கு வாழ்க்கையில் தேவையான அனைத்தையும் ஆசீர்வதிக்கிறது. இது அவர்களின் வாழ்க்கைப் பயணத்தை அடுத்த நிலைக்கு எடுத்துச்செல்ல உதவுகிறது.
மஞ்சள் நிற பழங்கள் மற்றும் துணி
மஞ்சள் என்பது வியாழனால் ஆளப்படும் நிறமாகும், மேலும் ஒரு நபரின் வாழ்க்கையில் அறிவுசார் திறன் மற்றும் ஞானத்திற்கு வியாழன் பொறுப்பு. கிருஷ்ண ஜெயந்தி அன்று ஸ்ரீ கிருஷ்ணருக்கு மஞ்சள் பழங்கள் மற்றும் வஸ்திரங்களை சமர்பிப்பது வேலை மற்றும் வியாபாரத்தில் வெற்றி பெற உதவுகிறது.
மாம்பழம், வாழைப்பழம் போன்ற மஞ்சள் பழங்களையும், மஞ்சள் நிற வேட்டி, மஞ்சள் துண்டு போன்ற மஞ்சள் ஆடைகளையும் ஸ்ரீ கிருஷ்ணருக்கு வைத்து வழிபடலாம்.
பூஜைக்குப் பிறகு, இந்த பொருட்களை சிறு குழந்தைகளுக்கு தானமாக வழங்க வேண்டும், மேலும் இது தனிப்பட்ட வாழ்க்கையில் அதன் நேர்மறையான விளைவுகளை அதிகரிக்கும்.



Click it and Unblock the Notifications












