Latest Updates
-
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்..
வெங்காயம் சாப்பிடுவதை தடைசெய்த வினோதமான இந்திய நகரம்... இங்க வெங்காயம் சாப்பிடுறது பெரிய குத்தமாம்...
இந்தியா அதன் மொழி மற்றும் கலாச்சாத்தில் மட்டுமல்ல அதன் உணவுப்பழக்கத்திலும் பன்முகத்தன்மையை கடைபிடிக்கிறது. இந்திய மக்களின் உணவுப் பழக்கவழக்கங்கள் மாநிலத்திற்கு மாநிலம் பரவலாக வேறுபடுகின்றன, இது நாட்டின் கலாச்சார பன்முகத்தன்மை, புவியியல் அமைப்பு மற்றும் காலநிலை மற்றும் பிராந்திய மற்றும் பருவகால உணவுப் பொருட்கள் மற்றும் அந்த மாநிலத்தில் அதிகம் விளையும் பொருட்களின் கிடைக்கும் தன்மையைப் பிரதிபலிக்கிறது.
இந்திய மக்கள் தொகையில் பெரும்பாலான மக்கள் அசைவ உணவு உண்பவர்களாக இருக்கிறார்கள், அதேசமயம் குறிப்பிட்ட அளவிலான மக்கள் சைவ உணவு உண்பவர்களாகவும் இருக்கிறார்கள். சைவ உணவு உண்பவர்களிலேயே சிலர் வெங்காயம் மற்றும் பூண்டை கூட தங்கள் உணவில் சேர்த்து கொள்ளாதவர்களும் இருக்கிறார்கள்.

வெங்காயம் தடைசெய்யப்பட்ட நகரம்
வெங்காயம் கிட்டத்தட்ட அனைத்து இந்திய சமையலறைகளிலும் தவிர்க்க முடியாத ஒரு முக்கிய மூலப்பொருளாக உள்ளது, ஆனால் எந்த வகையான வெங்காயத்தையும், ஏன் ஒரு வெங்காயத்தோலைக் கூட அனுமதிக்காத ஒரு இடம் உள்ளது, அதுதான் கத்ரா. இது ஜம்மு காஷ்மீரில் உள்ள இந்தியாவின் ஒரு அசாதாரண மற்றும் தனித்துவமான நகரம், அங்கு எந்த வகையான வெங்காயத்தையும் சாப்பிட அனுமதி இல்லை.
இந்த வினோதமான நகரம் எங்கு உள்ளது?
ஜம்மு காஷ்மீரில் உள்ள கத்ரா நகரம் மட்டுமே இந்தியாவில் வெங்காயம் மற்றும் பூண்டை முற்றிலுமாக தடை செய்த ஒரே நகரமாகும். வெங்காயம் மற்றும் பூண்டை வளர்ப்பதற்கோ அல்லது விற்பனை செய்வதற்கோ இங்கு அனுமதியில்லை. ஹோட்டல்களிலும் உணவகங்களிலும் கூட அவற்றைப் பார்க்க முடியாது, இவை அனைத்தும் மத நம்பிக்கைகள் மற்றும் பக்தியின் அடிப்படையில் கடைபிடிக்கப்படுகின்றன், இது நம்பிக்கை மற்றும் ஒழுக்கத்தின் அடிப்படையில் செய்யப்படுகிறது.
புனித யாத்திரை
வெங்காயம் இல்லாமல் சமைப்பது என்பது மிகவும் கடினமானதாகும். குழம்பு வகைகள், காய்கறி பொரியல் முதல் சாலடுகள் மற்றும் சட்னிகள் வரை, அனைத்திலும் வெங்காயம் சேர்க்கப்படுகிறது. இருப்பினும், கத்ராவில் வெங்காயத்தை வளர்ப்பது, விற்பது மற்றும் சாப்பிடுவது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது. ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் கூட வெங்காயம் அல்லது பூண்டு சேர்க்கப்பட்ட உணவுகள் எதையும் பரிமாறுவதில்லை, அதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது.
மலைகள் வழியாக சுமார் 14 கிலோமீட்டர் நீளமுள்ள புனித மாதா வைஷ்ணோ தேவி யாத்திரைக்கான தொடக்கப் புள்ளி கத்ரா ஆகும். மேலும் புனித யாத்திரைப் பகுதியின் புனிதத்தை பாதுகாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, அனைத்து வகையான வெங்காயம் மற்றும் பூண்டுகளும் இந்த நகரத்தில் தவிர்க்கப்படுகின்றன.
இந்த நகரம் வெங்காயத்தை முற்றிலுமாக தடை செய்யக் காரணம் என்ன?
இந்து மதத்தில், வெங்காயம் மற்றும் பூண்டு ஆகியவை தாமச உணவுகளாகக் காணப்படுகின்றன, அவை சோம்பல், கோபம் மற்றும் மனதிலும் உடலிலும் எதிர்மறை தாக்கங்களை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. இதனால் பிரார்த்தனை செய்யும்போதோ, உண்ணாவிரதம் இருக்கும்போதோ அல்லது சடங்குகளைச் செய்யும்போதும் அவற்றை உட்கொள்ள கூடாது. கத்ரா என்பது மாதா வைஷ்ணவ தேவி கோவிலின் முக்கிய நுழைவாயிலாகும், எனவே இந்த தளம் சாத்வீக சூழலைக் கொண்டிருப்பது கட்டாயமாகும். இதனால்தான் கத்ராவில் வெங்காயம் மற்றும் பூண்டைப் பயன்படுத்துவது உறுதியாக தடைசெய்யப்பட்டுள்ளது, இந்த பாரம்பரியம் இன்றுவரை தொடர்கிறது.
வெங்காயம் அல்லது பூண்டு கொண்ட மெனுவைக் கொண்ட ஹோட்டல்கள், தாபாக்கள் அல்லது உணவகங்கள் எதுவும் கத்ராவில் இல்லை. ஆனால் அதற்காக இங்கு கிடைக்கும் உணவுகள் சுவையற்றது என்று அர்த்தமல்ல. இங்கு வழங்கப்படும் உணவு சாத்வீகமானது, வெங்காயம் மற்றும் பூண்டைப் பயன்படுத்தாமல் சுவை மற்றும் ஊட்டச்சத்து நிறைந்ததாக உள்ளது, மேலும் பக்தர்கள் இந்த உணவை விரும்புகிறார்கள். இந்த நகரம் மாதா வைஷ்ணவ தேவி கோவிலுக்கு நுழைவாயில் மட்டுமல்ல, இது நம்பிக்கை மற்றும் பக்தியின் அடையாளமாகவும் நிற்கிறது



Click it and Unblock the Notifications
