Latest Updates
-
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்?
சொன்னா நம்பமாட்டீங்க.. இந்த ஹோட்டலில் பிளாஸ்டிக் குப்பைக்கு இலவச சாப்பாடு குடுப்பாங்களாம் - எங்கன்னு தெரியுமா?
Free Meals For Plastic Waste: மனிதன் உயிர் வாழ உணவு மிகவும் அவசியம். எனவே தான் உலகின் எந்த மூலை முடுக்கில் ஹோட்டல் வைத்தாலும், அந்த ஹோட்டல் தொழில் சிறப்பாக நடக்கிறது. அதுவும் உணவை சுவையாக வழங்கினால், எத்தனை கிலோமீட்டர் தூரம் இருந்தாலும், மக்கள் தேடி வந்து சாப்பிடுவார்கள். குறிப்பாக சாப்பிடும் சாப்பாட்டிற்கு காசு கொடுக்க தேவையில்லை என்றால், அங்கு கூட்டம் அலை மோதும் அல்லவா?
அப்படி சாப்பிடும் உணவுக்கு காசு வாங்காத ஒரு கஃபே உள்ளது. அதுவும் இந்த கஃபே சத்தீஸ்கரில் உள்ள அம்பிகாபூர் மாவட்டத்தில் உள்ளது. இந்த கஃபேயின் பெயர் Garbage Cafe ஆகும். இதன் ஸ்பெஷல் என்னவென்றால் பிளாஸ்டிக் கழிவுகள் அல்லது பிற பொருட்களை வழங்கினால் இலவச உணவு வழங்கப்படுவதாகும்.

கஃபேயின் நோக்கம்
இந்த கஃபேயின் நோக்கம் மக்களின் பசியை ஆற்றுவது மட்டுமின்றி, பிளாஸ்டிக் மாசுபாட்டை எதிர்த்துப் போராடுவதையும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை மேம்படுத்துவதுமாகும். தூய்மை பிரச்சாரத்தின் ஒரு முயற்சியாக தொடங்கப்பட்ட இப்படியான உணவகம் இந்தியாவில் முதன்முறையாக தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள மிகவும் தூய்மையான நகரங்களுள் ஒன்றான அம்பிகாபூர், அந்த நகரத்தை பிளாஸ்டிக் இல்லாத நகரமாக மாற்றும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த உணவகம் தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அறிக்கைகளின் படி, இந்த கஃபேயில் ஒருவர் 1/2 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளைக் கொடுத்தால், காலை உணவை இலவசமாக சாப்பிடலாம். இந்த காலை உணவில் ஆலு சாப், இட்லி, சமோசா, பிரட் சாப் போன்றவைகள் இருக்கும். அதேப் போல் 1 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை கொடுத்தால், மதிய உணவை இலவசமாக சாப்பிடலாம். இந்த மதிய உணவில் 4 ரொட்டிகள், 2 வகையான காய்கறிகள், 1/2 கப் சாதம், தால், சாலட், தயிர், ஊறுகாய், மற்றும் அப்பளம் போன்றவை இருக்கும்.
மலிவு விலையில் உணவு
ஒருவேளை பிளாஸ்டிக் கழிவுகள் எதுவும் இல்லாவிட்டால், அவர்களுக்கு இந்த கஃபே குறைந்த விலையில் உணவுகளை வழங்குகிறது. காய்கறிகள், சாதம், தால், ஊறுகாய் மற்றும் சாலட் அடங்கிய ஒரு அளவு சாப்பாட்டின் விலை ரூ.40 ஆகும். அதேப் போல் ரூ. 50 தாலியில் 2 வகையான காய்கறிகள், 4 ரொட்டிகள், தால், சாதம், சாலட், அப்பளம், ஊறுகாய் போன்றவை இருக்கும். ரூ.70 தாலியில் பன்னீர் மசாலா, 2 வகையான காய்கறிகள், சாதம், தால், ஊறுகாய் மற்றும் சாலட் போன்றவை அடங்கும்.
உண்மையில், பிளாஸ்டிக் மாசுபாட்டை தவிர்க்க இது ஒரு நல்ல முயற்சி தான். இப்படியான முயற்சியை நாட்டின் பிற பகுதிகளிலும் மேற்கொண்டால், பிளாஸ்டிக் குப்பைகள் கண்ட இடங்களில் பரவி சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்க்கலாம் அல்லவா? இப்படியான முயற்சி குறித்த உங்களின் கருத்து என்னவென்பதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications











