Latest Updates
-
இன்றைய ராசிபலன் 27 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க! -
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க -
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்! -
5 லட்சம் ஆண்டுகளுக்கு ஆதி மனிதர்கள் இந்தியாவில் வாழ்ந்த 5 இடங்கள் - தமிழ்நாட்டின் ஒரு இடமும் இதில் இருக்காம்
உலகின் விலையுயர்ந்த காரான ரோல்ஸ் ராய்ஸ் காரை இந்தியாவில் குப்பை வண்டியாக பயன்படுத்திய வினோத அரசர்...!
இந்திய மன்னர்கள் பல்வேறு விதங்களில் தனித்துவமானவர்களாக விளங்கினார்கள். ஆங்கிலேயர்களின் ஆட்சியில் பல அரசர்கள் அவர்களுக்கு அடிபணிந்து வாழ்ந்தார்கள், ஆனல் சில அரசர்கள் அவர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார்கள்.
அல்வாரின் முன்னாள் மன்னர் ஜெய் சிங் பிரபாகர், ஆங்கிலேயர்கள் அவரை அவமதித்ததற்கு பதிலடி கொடுப்பதற்காக, உலகின் மிகவும் ஆடம்பரமான மற்றும் விலை உயர்ந்ததாக அறியப்பட்ட 10 ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வாங்கினார். இது அவரின் பழிவாங்கல் சம்பவத்தின் ஒரு பகுதியாகும்.

இந்த குறிப்பிடத்தக்க சம்பவம் 1910 களின் முற்பகுதியில் மகாராஜா ஜெய் சிங் இங்கிலாந்துக்கு சென்ற போது சொகுசு கார்கள், குறிப்பாக ரோல்ஸ் ராய்ஸ் மீது விருப்பத்தை வளர்த்துக் கொண்டார். ஒரு நாள் அவர் சாதாரண உடையில் ஒரு ரோல்ஸ் ராய்ஸ் ஷோரூமிற்குச் சென்றார், அங்கு அவர் ஏழை இந்தியர் என்று தவறாகக் கருதப்பட்டார் மற்றும் அவரை வெளியேறச் சொன்ன ஊழியர்களால் அவமானப்படுத்தப்பட்டார்.
இதற்கு உடனடியாக பதிலடி கொடுப்பதற்குப் பதிலாக, மகாராஜா ஜெய் சிங் தனது ஹோட்டலுக்குத் திரும்பி, அரச உடைகளை அணிந்துகொண்டு, 10 ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வாங்கப் போவதாக அறிவித்து ஷோரூமுக்கு செய்தி அனுப்பினார். திடீரென ஏற்பட்ட உடை மாற்றத்தால் அதிர்ச்சியடைந்த ஷோரூம் ஊழியர்கள் அவர் வந்தவுடன் சிவப்பு கம்பளத்தை விரித்தனர்.
10 ரோல்ஸ் ராய்ஸ் கார்களும் இந்தியாவுக்குக் கொண்டு செல்லப்பட்டவுடன், நகரின் தெருக்களைத் துடைக்க இந்தக் கார்களைப் பயன்படுத்துமாறு நகராட்சிக்கு மன்னர் உத்தரவிட்டார். மேலும், நகரின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் குப்பைகளை சேகரித்து கொண்டு செல்ல இந்த கார்களைப் பயன்படுத்துமாறு அவர் கேட்டுக் கொண்டார். சிறிது காலத்திலேயே இந்த செய்தி உலகம் முழுவதும் பரவியது மற்றும் நம்பர் ஒன் கார் உற்பத்தியாளர் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் மொத்தமாக அதிர்ச்சியில் உறைந்தது.
அவர்களின் நற்பெயரும் வருவாயும் வேகமாகக் குறைந்தது. இறுதியாக, ரோல்ஸ் ராய்ஸ் இந்திய அரசர் ஜெய் சிங்கிற்கு தங்களின் நடத்தைக்காக மன்னிப்புக் கேட்டு தந்தி அனுப்பியது.
பிரிட்டிஷ் அதிகாரிகள் அவரை வேறுவிதமாக வற்புறுத்துவதற்கு பல முயற்சிகள் செய்த போதிலும், மகாராஜா ஜெய் சிங் தனது முடிவை மாற்றிக்கொள்ளவில்லை, ஏனெனில் அவர் ரோல்ஸ் ராய்ஸுக்கு ஒரு பாடம் கற்பிக்க விரும்பினார்.
வேறு வழியின்றி, ரோல்ஸ் ராய்ஸ் நிறுவன அதிகாரிகள் இந்தியாவுக்குச் சென்று, மகாராஜா ஜெய் சிங்கிடம் மன்னிப்புக் கேட்டு, குப்பை லாரிகளுக்குப் பதிலாக புதிய கார்களை வழங்க முன்வந்தனர் என்று அறிக்கை மேலும் கூறியது. ஆனால், அவர் அந்த வாய்ப்பை மறுத்துவிட்டார். இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க செயல், அடக்குமுறைகளை எதிர்கொண்ட இந்திய மக்களின் பெருமையை நினைவூட்டுவதாக அமைந்தது.



Click it and Unblock the Notifications
