Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
இனி ஜெயிலில் பானிப்பூரி, ஐஸ் கிரீம் கிடைக்குமா? மஹாராஷ்டிர சிறைத்துறை போட்ட புது அசத்தலான ஆடர் என்ன தெரியுமா?
சிறைச்சாலைகளில் கைதிகளுக்கு என்ன மாதிரியான தண்டனைகள் கொடுக்கப்படுகிறது? கைதிகள் சிறையில் எவ்வளவு துன்பப்படுகிறார்கள்? அவர்களுக்கு அங்கு அத்தியாவசிய தேவைகள் கிடைக்கிறதா? போன்ற பல கேள்விகள் பொதுமக்களிடையே எழலாம்.
சிறைச்சாலையில் கைதிகளுக்கு கொடுக்கும் உணவுகள் தரமாக இருக்கிறதா? நல்ல உணவுகள் அவர்களுக்கு சாப்பிட கொடுக்கப்படுகிறதா? என்ற கேள்விகள் தொடர்ந்து கேட்கப்படும் சூழலில், இந்தியாவையே திரும்பி பார்க்க வைக்கும் அளவிற்கு மகாராஷ்டிர சிறைத்துறை ஓர் அசத்தலான விஷயத்தை செய்துள்ளது.

ஆம், மஹாராஷ்டிர மாநிலத்தில் சிறை கைதிகளுக்கு கேன்டீனில் வழங்குவதற்காக பாணி பூரி, ஐஸ்கிரீம் மற்றும் கடலை மிட்டாய் போன்ற உணவு பொருட்களும், அத்தியாவசிய பொருட்களும் சேர்த்து மொத்தம் 173 பொருட்கள் கொண்ட அட்டகாசமான பட்டியலை அம்மாநில சிறைத்துறை நிர்வாகம் தயார் செய்துள்ளது.
கைதிகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் உட்பட பொழுதுபோக்குப் பொருட்களும் இந்த பட்டியலில் உள்ளன. சாட் மசாலா, ஊறுகாய், தேங்காய் தண்ணீர், சதுரங்க பலகைகள், ஓட்ஸ், காபி தூள், கடலை மிட்டாய், சர்க்கரை இல்லாத இனிப்புகள், ஐஸ்கிரீம், ஆர்கானிக் பழங்கள், வேர்க்கடலை, பானி பூரி, கலை புத்தகங்கள், வண்ண பொருட்கள் போன்றவை சிறை அட்டவணையில் சேர்க்கப்பட்டது.
அதுமட்டுமல்லாமல், சில ஆடைகள் மற்றும் உடல் பராமரிப்பு பொருட்களான ஃபேஸ் வாஷ், ஹேர் டைஸ், டி-ஷர்ட்கள் போன்ற பொருட்களும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. புகையிலைக்கான தூண்டுதலை குறைக்க, நிகோடின்-பிஆர்டி மாத்திரைகளும் சிறைக்குள்ளே அனுமதிக்கப்பட்டுள்ளன.
கைதிகளுக்கு வழங்கப்படும் சிறைப் பொருட்களில் ஏன் மாற்றங்கள் செய்யப்படுகின்றன என்பது பற்றி, ஏடிஜிபி (சிறைத்துறை அதிகாரி) அமிதாப் குப்தா செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, 'கட்டுப்பாடுகள் பெரும்பாலான கைதிகளின் மனநிலையை மாற்றுகிறது' என்று கூறினார்.
மேலும், 'கைதிகளின் மன ஆரோக்கியத்தை நிர்ணயிக்கப்பட்ட ஒழுங்குமுறை அளவுருக்களுக்குள் பராமரிப்பது அவர்களை சீர்திருத்துவதற்கான ஒரு முக்கிய அம்சமாகும். கைதிகளின் உணவு விருப்பங்களை விரிவுபடுத்துவதன் மூலம் அவர்களின் ஒட்டுமொத்த நல்வாழ்வில் இது சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும்," என்று அவர் தெரிவித்திருந்தார்.
சந்தர்ப்ப சூழ்நிலையால் தவறுகளை செய்து தண்டை அனுபவிக்கும் கைதிகள் ஏராளம். நான்கு சுவருக்குள் பூட்டப்பட்ட சிறைக்குள் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளின் வாழ்க்கை அதிக மன அழுத்தம் நிறைந்ததாக இருக்கலாம். மன அழுத்தத்துடன் போராடும் பல கைதிகளுக்கு உணவு போன்ற அத்தியாவசிய பொருட்களை வழங்குவதன் மூலம், சிறிது குறைக்கலாம்.
மகாராஷ்டிர சிறைத்துறையின் இந்த செயல், மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக இருக்கிறது. கைதிகளின் உணர்வுகளை புரிந்து கொண்டு அத்தியாவசிய தேவைகளை கொடுப்பதன் மூலம், அவர்களின் வாழ்க்கையை மன அழுத்தம் இல்லாததாக மாற்றி, நல்ல மனிதர்களாக அவர்களை மாற்றும் இந்த முன்னெடுப்பு பாராட்டுக்குரியது.



Click it and Unblock the Notifications












