Latest Updates
-
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா? -
ஆண்களே! உங்க விந்துவை கெட்டிபடுத்தணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவிலிருந்து ரகசியமாக கொண்டுவந்த பொருட்கள் இப்ப கிடைச்சிருக்கு - அதுல என்னென்ன இருக்கு? -
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது! -
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்..
இனி ஜெயிலில் பானிப்பூரி, ஐஸ் கிரீம் கிடைக்குமா? மஹாராஷ்டிர சிறைத்துறை போட்ட புது அசத்தலான ஆடர் என்ன தெரியுமா?
சிறைச்சாலைகளில் கைதிகளுக்கு என்ன மாதிரியான தண்டனைகள் கொடுக்கப்படுகிறது? கைதிகள் சிறையில் எவ்வளவு துன்பப்படுகிறார்கள்? அவர்களுக்கு அங்கு அத்தியாவசிய தேவைகள் கிடைக்கிறதா? போன்ற பல கேள்விகள் பொதுமக்களிடையே எழலாம்.
சிறைச்சாலையில் கைதிகளுக்கு கொடுக்கும் உணவுகள் தரமாக இருக்கிறதா? நல்ல உணவுகள் அவர்களுக்கு சாப்பிட கொடுக்கப்படுகிறதா? என்ற கேள்விகள் தொடர்ந்து கேட்கப்படும் சூழலில், இந்தியாவையே திரும்பி பார்க்க வைக்கும் அளவிற்கு மகாராஷ்டிர சிறைத்துறை ஓர் அசத்தலான விஷயத்தை செய்துள்ளது.

ஆம், மஹாராஷ்டிர மாநிலத்தில் சிறை கைதிகளுக்கு கேன்டீனில் வழங்குவதற்காக பாணி பூரி, ஐஸ்கிரீம் மற்றும் கடலை மிட்டாய் போன்ற உணவு பொருட்களும், அத்தியாவசிய பொருட்களும் சேர்த்து மொத்தம் 173 பொருட்கள் கொண்ட அட்டகாசமான பட்டியலை அம்மாநில சிறைத்துறை நிர்வாகம் தயார் செய்துள்ளது.
கைதிகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் உட்பட பொழுதுபோக்குப் பொருட்களும் இந்த பட்டியலில் உள்ளன. சாட் மசாலா, ஊறுகாய், தேங்காய் தண்ணீர், சதுரங்க பலகைகள், ஓட்ஸ், காபி தூள், கடலை மிட்டாய், சர்க்கரை இல்லாத இனிப்புகள், ஐஸ்கிரீம், ஆர்கானிக் பழங்கள், வேர்க்கடலை, பானி பூரி, கலை புத்தகங்கள், வண்ண பொருட்கள் போன்றவை சிறை அட்டவணையில் சேர்க்கப்பட்டது.
அதுமட்டுமல்லாமல், சில ஆடைகள் மற்றும் உடல் பராமரிப்பு பொருட்களான ஃபேஸ் வாஷ், ஹேர் டைஸ், டி-ஷர்ட்கள் போன்ற பொருட்களும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. புகையிலைக்கான தூண்டுதலை குறைக்க, நிகோடின்-பிஆர்டி மாத்திரைகளும் சிறைக்குள்ளே அனுமதிக்கப்பட்டுள்ளன.
கைதிகளுக்கு வழங்கப்படும் சிறைப் பொருட்களில் ஏன் மாற்றங்கள் செய்யப்படுகின்றன என்பது பற்றி, ஏடிஜிபி (சிறைத்துறை அதிகாரி) அமிதாப் குப்தா செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, 'கட்டுப்பாடுகள் பெரும்பாலான கைதிகளின் மனநிலையை மாற்றுகிறது' என்று கூறினார்.
மேலும், 'கைதிகளின் மன ஆரோக்கியத்தை நிர்ணயிக்கப்பட்ட ஒழுங்குமுறை அளவுருக்களுக்குள் பராமரிப்பது அவர்களை சீர்திருத்துவதற்கான ஒரு முக்கிய அம்சமாகும். கைதிகளின் உணவு விருப்பங்களை விரிவுபடுத்துவதன் மூலம் அவர்களின் ஒட்டுமொத்த நல்வாழ்வில் இது சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும்," என்று அவர் தெரிவித்திருந்தார்.
சந்தர்ப்ப சூழ்நிலையால் தவறுகளை செய்து தண்டை அனுபவிக்கும் கைதிகள் ஏராளம். நான்கு சுவருக்குள் பூட்டப்பட்ட சிறைக்குள் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளின் வாழ்க்கை அதிக மன அழுத்தம் நிறைந்ததாக இருக்கலாம். மன அழுத்தத்துடன் போராடும் பல கைதிகளுக்கு உணவு போன்ற அத்தியாவசிய பொருட்களை வழங்குவதன் மூலம், சிறிது குறைக்கலாம்.
மகாராஷ்டிர சிறைத்துறையின் இந்த செயல், மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக இருக்கிறது. கைதிகளின் உணர்வுகளை புரிந்து கொண்டு அத்தியாவசிய தேவைகளை கொடுப்பதன் மூலம், அவர்களின் வாழ்க்கையை மன அழுத்தம் இல்லாததாக மாற்றி, நல்ல மனிதர்களாக அவர்களை மாற்றும் இந்த முன்னெடுப்பு பாராட்டுக்குரியது.



Click it and Unblock the Notifications
