Latest Updates
-
'சீனாவின் நோஸ்ட்ரடாமஸ்' கணிப்பின் படி அமெரிக்க-ஈரான் போரில் ஜெயிக்கப் போவது யார்? போர் இப்படித்தான் முடியுமாம் -
கவலையற்ற ஆன்மாவாக எப்போதும் மகிழ்ச்சியாக வாழ பிறந்த 4 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
4 முட்டை இருந்தா இந்த முகலாய முட்டை குருமாவை செஞ்சு பாருங்க... பைவ் ஸ்டார் ஹோட்டலில் சாப்பிட மாதிரி இருக்கும்! -
சனிப்பெயர்ச்சி 2026: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், எந்த ராசிக்கு ஆபத்தாகவும் இருக்கப்போகுது தெரியுமா? -
4 வெங்காயம் இருந்தா.. இட்லிக்கு இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம்...! -
கேதுவின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்... உங்க ராசி என்ன? -
ஹோட்டல் ஸ்டைல் ராயல் தேங்காய் சட்னி ரெசிபி... இந்த பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க... செமையா இருக்கும்...! -
புடலங்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க...எல்லாத்துக்கும் செம சைடிஷா இருக்கும்! -
ஆரோக்கியமான விந்தணுவின் அறிகுறிகள்... உங்ககிட்ட இந்த அறிகுறிகள் இருக்கா? செக் பண்ணிக்கோங்க...!
விநாயகர் சதுர்த்தி அன்று இந்த 4 பொருட்களால் விநாயகரை செய்து வழிபட்டால், வீட்டில் செல்வம் பெருகுமாம்...
Ganesh Chaturthi 2023: அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த விநாயகர் சதுர்த்தி வரவுள்ளது. 10 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பலரும் தங்களின் வீடுகளில் விநாயகரின் சிலையை வைத்து, விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டை, மோதகம், லட்டு மற்றும் பல உணவுப் பொருட்களை செய்து படைத்து, விநாயகரை மகிழ்வித்து, அவரது அருளைப் பெற முயற்சிப்பார்கள்.
இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியானது செப்டம்பர் 18 ஆம் தேதி வருகிறது. இந்த கொண்டாட்டமானது செப்டம்பர் 28 ஆம் தேதி வரை இருக்கும். பெரும்பாலும் விநாயகர் சதுர்த்திக்கு களிமண்ணால் ஆன விநாயகரை வாங்கி வைத்து வழிபடுவார்கள்.

ஆனால் களிமண் விநாயகரை விட, ஒருசில மங்களகரமான பொருட்களைக் கொண்டு செய்யப்பட்ட விநாயகரை வைத்து வழிபட்டால், விநாயகரின் அருளால், வீட்டில் செல்வம் பெருகும். இப்போது விநாயகர் சதுர்த்திக்கு எந்த பொருட்களால் ஆன விநாயகரை வாங்கி வழிபடுவது நல்லது என்பதைக் காண்போம்.
மரத்தாலான விநாயகர்
உங்கள் வீட்டில் ஒரு அழகான விநாயகர் சிலையை நிறுவ விரும்பினால், மரத்தாலான விநாயகர் சிலையை வையுங்கள். அதுவும் அரச மரம், மாமரம் அல்லது வேப்ப மரத்தாலான சிலைகளை வீட்டில் வையுங்கள். ஏனெனில் இந்த மரங்கள் அனைத்துமே இந்து மதத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த புனிதமான மரங்களாக கருதப்படுகின்றன. ஆகவே இந்த மர விநாயகர் சிலைகளை வீட்டில் வைக்கும் போது, வீட்டில் நேர்மறை ஆற்றல் ஓட்டம் நிரம்பி, செல்வம் பெருகும்.
மஞ்சள் விநாயகர்
மஞ்சள் ஒரு மங்களகரமான பொருள். பொதுவாக ஒரு பூஜை செய்யும் போது, அங்கு மஞ்சளைக் கொண்டு விநாயகரைப் பிடித்து வைத்து தான் அந்த பூஜையையே செய்வார்கள். அப்படிப்பட்ட மஞ்சளை எடுத்து நீர் சிறிது சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து விநாயகர் உருவத்தை செய்ய வேண்டும். மஞ்சளை அரைக்க முடியாதவர்கள், மஞ்சள் தூள் சேர்த்து கெட்டியாக பிசைந்து செய்யலாம். சொல்லப்போனால் கடைகளிலேயே மஞ்சள் கட்டிகளில் விநாயகர் உருவம் செய்து விற்கப்படுகிறது. அதை வாங்கி வைத்தும் வழிபடலாம்.
மாட்டு சாணத்தால் ஆன விநாயகர் சிலை
பசுவின் சாணத்தால் செய்யப்பட்ட விநாயகர் சிலை மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. அதுவும் அதை வீட்டில் வைப்பது இன்னமும் நல்லது. ஏனெனில் மாட்டு சாணத்தில் லட்சுமி தேவி வசிப்பதாக கூறப்படுகிறது. எனவே வீட்டில் செல்வம் பெருக விரும்பினால், களிமண்ணால் ஆன விநாயகருக்கு பதிலாக, மாட்டு சாணத்தால் ஆன விநாயகரை வீட்டில் வைத்து வழிபடுங்கள்.
உலோக சிலை
விநாயகர் சதுர்த்தியின் போது வீட்டில் உலோகத்தால் ஆன விநாயகர் சிலையை வைத்து வழிபடுவது மிகவும் நல்லது. அதுவும், உங்களால் முடிந்தால் வெள்ளி அல்லது பித்தளையால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை வாங்கி வைத்து வழிபடுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











