Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
விநாயகர் சதுர்த்தி 2023:வீட்டுக்கு விநாயகர் சிலை வாங்க போறீங்களா? இப்படி வாங்குங்க...நினைச்சதெல்லாம் நடக்கும்!
Ganesh Chaturthi 2023 in Tamil: வினைதீர்க்கும் விநாயகர் தனது பக்தர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், வெற்றியையும், செழிப்பையும் தருகிறார். அவர் உங்கள் வாழ்க்கையில் இருந்து வரும் அனைத்து தடைகளையும், சிக்கல்களையும் தடுக்கிறார்.
புதிதாக ஒன்றைத் தொடங்குவதற்கு முன் அல்லது பெரிய பூஜை விழாவிற்கு முன் விநாயகரை முதலில் பிரார்த்தனை செய்வதற்கு இதுவும் ஒரு காரணம். விநாயகரை குதூகலமாக்கும் விநாயகர் சதுர்த்தி நெருங்கி விட்டது.

விநாயகர் சதுர்த்தி அன்று அனைத்து பக்தர்களும் அவரது சிலையை தங்கள் வீடுகளில் வைக்கின்றனர். ஆனால், எப்படிப்பட்ட விநாயகர் சிலையை வீட்டில் வைக்க வேண்டும்,எந்த நிற சிலையை வைக்க வேண்டும் மற்றும் எங்கு வைக்க வேண்டும் என்பது பலரும் அறியாதது. இந்த பதிவில் வீட்டில் எந்த வகையான விநாயகரை வைக்க வேண்டுமென்று தெரிந்து கொள்ளலாம்.
வெள்ளை விநாயகர்
நீங்கள் மகிழ்ச்சியான, அமைதியான மற்றும் வெற்றிகரமான வாழ்க்கையை எதிர்பார்க்கும் ஒருவராக இருந்தால், நீங்கள் வெள்ளை விநாயகர் சிலையை வீட்டிற்கு கொண்டு வர வேண்டும். வெள்ளை விநாயகரின் புகைப்படத்தை தொங்கவிடுவதும் நீங்கள் விரும்பும் அனைத்து காரியங்களையும் அடைய உதவும்.
சிவப்பு விநாயகர்
உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் நீங்கள் முன்னேறவும், புகழ் பெறவும் நீங்கள் விரும்பினால், சிவப்பு நிற விநாயகரை வீட்டிற்கு கொண்டு வர வேண்டும். விநாயகரின் சிலைக்கு தினமும் தவறாமல் பிரார்த்தனை செய்வது முக்கியம்.
உட்கார்ந்த நிலையில் இருக்கும் விநாயகர்
விநாயகர் சிலையை வீட்டிற்கு கொண்டு வர நீங்கள் திட்டமிட்டால், நீங்கள் எப்போதும் அமர்ந்திருக்கும் விநாயகர் சிலையை தேர்வு செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது. இது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் வெற்றியையும் செழிப்பையும் தரும்.
மேலும், இந்த விநாயகரின் சிலையை பிரார்த்தனை செய்யும் போது நீங்கள் கடுமையான சடங்குகளைப் பின்பற்ற வேண்டியதில்லை. இந்த விநாயகர் சிலையை காருக்கும் பயன்படுத்தலாம். இந்த வழியில், நீங்கள் எப்போதும் பாதுகாப்பான மற்றும் அமைதியான பயணத்தை அனுபவிப்பீர்கள்.
இடதுபுறம் தந்தம் இருக்கும் சிலை
நீங்கள் வீட்டிற்கு அல்லது பூஜைக்கு விநாயகர் சிலை வாங்கும்போது, தந்தம் இடதுபுறமாக இருக்கும் சிலையை எப்போதும் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த பிள்ளையாரை நீங்கள் எளிதாகப் பிரியப்படுத்தலாம், அவர் உங்கள் எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றுவார்.
தந்தம் வலதுபுறமாக இருக்கும் விநாயகரை மகிழ்விப்பது மிகவும் கடினம் என்றும், நீங்கள் அவரை வீட்டிற்கு அழைத்து வரும்போது கண்டிப்பான சடங்குகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
நிற்கும் விநாயகர்
உங்கள் அலுவலகத்தில் விநாயகரின் சிலையை வைக்க விரும்பினால், எப்போதும் நிற்கும் விநாயகரின் சிலையை வைக்கவும். இது வேலை செய்யும் போது மிகுந்த உற்சாகத்தையும் ஆற்றலையும் தருவதாகக் கூறப்படுகிறது. மேலும், இது உங்களுக்கு மன அழுத்தத்தை குறைக்கவும் உங்கள் வேலையில் அதிக கவனம் செலுத்தவும் உதவும்.
மோதகம்
விநாயகரின் பர்பெக்ட் சிலையில் எப்போதும் ஒரு எலியும், மோதகமுமும் இருக்கும். இந்த முழுமையான சிலை மிகவும் மங்களகரமானது மற்றும் அதிக நன்மை பயக்கும் என்று கூறப்படுகிறது.
ஒரு சிலையை மட்டுமே வைக்க வேண்டும்
உங்கள் பூஜையறையில் விநாயகர் சிலையை வைக்கும்போது, ஒரு விநாயகர் சிலையை மட்டுமே வைக்க வேண்டும். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சிலைகள் வைக்கப்படும் போது, அது விநாயகரின் மனைவிகளான ரித்தி மற்றும் சித்தி ஆகியோரின் சாபத்தை உங்களுக்கு பெற்றுத்தரும் என்று கூறப்படுகிறது.
அருகம்புல்
விநாயகப் பெருமானுக்கு அருகம் புல்லை தினமும் சமர்ப்பிப்பது மிகவும் நன்மை பயக்கும். இருப்பினும், இதனுடன் நீங்கள் கணபதி மந்திரத்தை உச்சரித்து வணங்கும் போது உங்களின் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும் என்று கூறப்படுகிறது.



Click it and Unblock the Notifications












