Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
விநாயகர் சதுர்த்தி 2023:வீட்டுக்கு விநாயகர் சிலை வாங்க போறீங்களா? இப்படி வாங்குங்க...நினைச்சதெல்லாம் நடக்கும்!
Ganesh Chaturthi 2023 in Tamil: வினைதீர்க்கும் விநாயகர் தனது பக்தர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், வெற்றியையும், செழிப்பையும் தருகிறார். அவர் உங்கள் வாழ்க்கையில் இருந்து வரும் அனைத்து தடைகளையும், சிக்கல்களையும் தடுக்கிறார்.
புதிதாக ஒன்றைத் தொடங்குவதற்கு முன் அல்லது பெரிய பூஜை விழாவிற்கு முன் விநாயகரை முதலில் பிரார்த்தனை செய்வதற்கு இதுவும் ஒரு காரணம். விநாயகரை குதூகலமாக்கும் விநாயகர் சதுர்த்தி நெருங்கி விட்டது.

விநாயகர் சதுர்த்தி அன்று அனைத்து பக்தர்களும் அவரது சிலையை தங்கள் வீடுகளில் வைக்கின்றனர். ஆனால், எப்படிப்பட்ட விநாயகர் சிலையை வீட்டில் வைக்க வேண்டும்,எந்த நிற சிலையை வைக்க வேண்டும் மற்றும் எங்கு வைக்க வேண்டும் என்பது பலரும் அறியாதது. இந்த பதிவில் வீட்டில் எந்த வகையான விநாயகரை வைக்க வேண்டுமென்று தெரிந்து கொள்ளலாம்.
வெள்ளை விநாயகர்
நீங்கள் மகிழ்ச்சியான, அமைதியான மற்றும் வெற்றிகரமான வாழ்க்கையை எதிர்பார்க்கும் ஒருவராக இருந்தால், நீங்கள் வெள்ளை விநாயகர் சிலையை வீட்டிற்கு கொண்டு வர வேண்டும். வெள்ளை விநாயகரின் புகைப்படத்தை தொங்கவிடுவதும் நீங்கள் விரும்பும் அனைத்து காரியங்களையும் அடைய உதவும்.
சிவப்பு விநாயகர்
உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் நீங்கள் முன்னேறவும், புகழ் பெறவும் நீங்கள் விரும்பினால், சிவப்பு நிற விநாயகரை வீட்டிற்கு கொண்டு வர வேண்டும். விநாயகரின் சிலைக்கு தினமும் தவறாமல் பிரார்த்தனை செய்வது முக்கியம்.
உட்கார்ந்த நிலையில் இருக்கும் விநாயகர்
விநாயகர் சிலையை வீட்டிற்கு கொண்டு வர நீங்கள் திட்டமிட்டால், நீங்கள் எப்போதும் அமர்ந்திருக்கும் விநாயகர் சிலையை தேர்வு செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது. இது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் வெற்றியையும் செழிப்பையும் தரும்.
மேலும், இந்த விநாயகரின் சிலையை பிரார்த்தனை செய்யும் போது நீங்கள் கடுமையான சடங்குகளைப் பின்பற்ற வேண்டியதில்லை. இந்த விநாயகர் சிலையை காருக்கும் பயன்படுத்தலாம். இந்த வழியில், நீங்கள் எப்போதும் பாதுகாப்பான மற்றும் அமைதியான பயணத்தை அனுபவிப்பீர்கள்.
இடதுபுறம் தந்தம் இருக்கும் சிலை
நீங்கள் வீட்டிற்கு அல்லது பூஜைக்கு விநாயகர் சிலை வாங்கும்போது, தந்தம் இடதுபுறமாக இருக்கும் சிலையை எப்போதும் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த பிள்ளையாரை நீங்கள் எளிதாகப் பிரியப்படுத்தலாம், அவர் உங்கள் எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றுவார்.
தந்தம் வலதுபுறமாக இருக்கும் விநாயகரை மகிழ்விப்பது மிகவும் கடினம் என்றும், நீங்கள் அவரை வீட்டிற்கு அழைத்து வரும்போது கண்டிப்பான சடங்குகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
நிற்கும் விநாயகர்
உங்கள் அலுவலகத்தில் விநாயகரின் சிலையை வைக்க விரும்பினால், எப்போதும் நிற்கும் விநாயகரின் சிலையை வைக்கவும். இது வேலை செய்யும் போது மிகுந்த உற்சாகத்தையும் ஆற்றலையும் தருவதாகக் கூறப்படுகிறது. மேலும், இது உங்களுக்கு மன அழுத்தத்தை குறைக்கவும் உங்கள் வேலையில் அதிக கவனம் செலுத்தவும் உதவும்.
மோதகம்
விநாயகரின் பர்பெக்ட் சிலையில் எப்போதும் ஒரு எலியும், மோதகமுமும் இருக்கும். இந்த முழுமையான சிலை மிகவும் மங்களகரமானது மற்றும் அதிக நன்மை பயக்கும் என்று கூறப்படுகிறது.
ஒரு சிலையை மட்டுமே வைக்க வேண்டும்
உங்கள் பூஜையறையில் விநாயகர் சிலையை வைக்கும்போது, ஒரு விநாயகர் சிலையை மட்டுமே வைக்க வேண்டும். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சிலைகள் வைக்கப்படும் போது, அது விநாயகரின் மனைவிகளான ரித்தி மற்றும் சித்தி ஆகியோரின் சாபத்தை உங்களுக்கு பெற்றுத்தரும் என்று கூறப்படுகிறது.
அருகம்புல்
விநாயகப் பெருமானுக்கு அருகம் புல்லை தினமும் சமர்ப்பிப்பது மிகவும் நன்மை பயக்கும். இருப்பினும், இதனுடன் நீங்கள் கணபதி மந்திரத்தை உச்சரித்து வணங்கும் போது உங்களின் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும் என்று கூறப்படுகிறது.



Click it and Unblock the Notifications
