இந்தியாவின் இந்த இடத்தில் பெண்கள் எத்தனை கணவர்களை வேண்டுமென்றாலும் திருமணம் செய்து கொள்ளலாமாம்..எங்க தெரியுமா?

உலகில் எந்த நாடாக இருந்தாலும் சரி, கலாச்சாரம் அல்லது மதமாக இருந்தாலும் சரி ஆண்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகளைக் கொண்டிருப்பது என்பது மிகவும் சாதாரணமானதாகக் கருதப்படுகிறது. இந்தியாவில் கூட ஆண்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகளைக் கொண்டிருப்பது சட்டப்படி குற்றமாகக் கருதப்பட்டாலும், சமூகரீதியாக அது அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகவே இருக்கிறது.

ஆண்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மணிவிக்களைக் கொண்டிருப்பது எவ்வளவு சாதாரணமானதாகக் கருதப்படுகிறதோ அதேயளவிற்கு பெண்கள் ஒன்றுக்கு மேற்பட்ட கணவர்களைக் கொண்டிருப்பது அசாதாரண ஒன்றாகக் கருதப்படுகிறது. ஆனால் இப்போதும் பெண்களுக்கு பலதார மணத்தை ஆதரிக்கும் சில நாடுகளும், கலாச்சாரங்களும் உள்ளது.

Countries Where Women Can Have Multiple Husbands

சொல்லப்போனால் இந்தியாவிலேயே சில சமூகத்தினர் மற்றும் பழங்குடியின பெண்கள் பல கணவர்களை மணந்து கொள்கிறார்கள். பல கணவர்கள் என்பது ஒரு பெண் ஒரே நேரத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கணவர்களை எடுக்கும் பலதார மணத்தின் ஒரு வடிவமாகும். இந்த பதிவில் எந்தெந்த நாட்டில் பெண்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட கணவர்கள் உள்ளார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

நைஜீரியா

பெண்களுக்கான பலதார மணம் நைஜீரியாவில் பொதுவாக அசாதாரணமானது என்றாலும், நைஜீரியாவில் பலதார மணத்தை அனுமதிக்கும் பழங்குடியினர் உள்ளனர். வடக்கு நைஜீரியாவின் இரிக்வே பழங்குடியினரில் பெண்கள் பாரம்பரியமாக "இணை கணவர்கள்" என்று அழைக்கப்படும் ஏராளமான துணைவர்களை பெற்றுள்ளனர்.

நைஜீரியாவின் இரிக்வே மக்கள், 1968 ஆம் ஆண்டு தங்கள் கவுன்சில் அதை சட்டவிரோதமாக்க வாக்களிக்கும் வரை, ஒரு பெண் இணை கணவர்களைக் கொண்டிருப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அதுவரை, பெண்கள் வீடு வீடாகச் சென்று, பல துணைவர்களை ஏற்றுக்கொண்டனர், மேலும் குழந்தைகளின் தந்தைவழி உரிமை அந்த நேரத்தில் அந்தப் பெண் வசித்த வீட்டில் இருந்த கணவருக்கு வழங்கப்பட்டது.

இந்தியா

இது கேட்பதற்கு வினோதமாக இருந்தாலும் 'ஒருவனுக்கு ஒருத்தி'என்று கூறப்படும் இந்தியாவில் கூட பெண்களுக்கு பலதார மணத்தை அனுமதிக்கும் சில பழங்குடியினர் உள்ளனர். இந்தியாவில் ஒன்றுக்கும் மேற்பட்ட பழங்குடியின பெண்கள் பலதார மணம் செய்து கொள்கின்றனர்.

வட இந்தியாவின் சில பகுதிகளில் ஜான்சர்பவர் பகுதியில் பஹாரிகளிடையே பலதார மணம் பரவலாக உள்ளது, அதே நேரத்தில் ஹிமாச்சலப் பிரதேசத்தின் கின்னாரில் ஒரு சிறுபான்மை மக்கள் பெண்களுக்கு பலதார மணத்தை கடைப்பிடிக்கின்றனர். பஞ்ச பாண்டவர்களின் வழித்தோன்றல்களாக, அவர்கள் பாரம்பரியத்தை தொடர வேண்டும் என்று நம்புகிறார்கள். மேலும் தோடா பழங்குடியினரான நீலகிரிஸ், திருவிதாங்கூரின் குறிப்பிட்ட அமைப்பினர் பலதார மணத்தை கடைப்பிடிக்கின்றன.

Countries Where Women Can Have Multiple Husbands

கென்யா

ஆகஸ்ட் 2013 இல், கென்யாவில் இரண்டு ஆண்கள் தாங்கள் இருவரும் காதலிக்கும் ஒரு பெண்ணுக்கு கணவர்களாக இருக்க முடிவு செய்து, ​​பலதார மணத்தை மேற்கொண்டனர். கென்ய சட்டங்கள் பல கணவர் மணத்தை வெளிப்படையாகத் தடை செய்யவில்லை என்பதும், அதை செய்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது. கென்யாவின் மசாய் மக்களிடையே பல கணவர் மணம் நடைமுறையில் உள்ளது.

சீனா

சீனா மற்றும் இந்தியாவின் நேபாளப் பகுதிகளில் உள்ள திபெத் மக்களிடையே சகோதரத்துவ பலதார மணம் என்ற நடைமுறை பொதுவானது. ஒரு குழந்தைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட தந்தைகள் இருக்க முடியும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இந்த முறை கடைபிடிக்கப்படுகிறது, இந்த முறையில் பொதுவாக இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சகோதரர்கள் ஒரு பெண்ணை மணக்கும்போது, ​​அவர்கள் அனைவரும் அந்தப் பெண்ணை சமமாக பாலியல்ரீதியாக அணுக முடியும்.

ஒரு குடும்பம் ஏழ்மையாக இருந்தால், தனித்தனி தந்தையின் சந்ததியினரிடையே அவர்களின் சொத்துக்களைப் பிரிக்க முடியாத போது இந்த நடைமுறை ஊக்குவிக்கப்படுகிறது. எனவே அவர்கள் ஒரே பெண்ணை திருமணம் செய்து கொள்வதன் மூலம் தங்கள் சிறிய விவசாய நிலங்களையும் சொத்துக்களையும் பிரிக்காமல் ஒன்றாக வைத்திருக்கிறார்கள்.

தென் அமெரிக்கா

தென் அமெரிக்காவில் உள்ள பழங்குடியினரிடையேயும் பெண்களுக்கான பலதார மணம் நடைமுறையில் இருந்தது, ஏனெனில் போரோரோக்கள் பாலியண்ட்ரியை கடைப்பிடித்தனர், அதே நேரத்தில் அமேசானிய கலாச்சாரங்களில் 70 சதவீதம் பேர் பல தந்தைவழி கொள்கையை நம்பியிருக்கின்றனர்.

Desktop Bottom Promotion