Latest Updates
-
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...! -
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்... -
திரிகிரக யோகம் கும்ப ராசியில் உருவாவதால் இந்த 3 ராசிக்காரர்களை தோல்வியும், துரதிர்ஷ்டமும் துரத்தப்போகுதாம்...! -
1 கப் கோதுமை ரவா இருந்தா இந்த மாதிரி அடை செஞ்சு பாருங்க... சூப்பரான காலை உணவா இருக்கும்... ட்ரை பண்ணுங்க...! -
இந்தியாவின் முதல் பெண்களுக்கான பள்ளி எப்போது திறக்கப்பட்டது? எந்த ஊரில் திறக்கப்பட்டது தெரியுமா? -
உருளைக்கிழங்கை ஒருதடவை இந்த மாதிரி கொங்குநாடு ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க...டக்கரான சைடிஷா இருக்கும்...! -
அமெரிக்க-ஈரான் போரால் துபாயில் சரசரவென குறையும் தங்கம் விலை...இந்தியாவிலும் தங்கம் விலை குறையுமா? உண்மை என்ன? -
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன?
மனித மாமிசம் சாப்பிடும் பழக்கம் இப்போதும் வழக்கத்தில் உள்ள நாடுகள்... இங்க போனா பத்திரமா இருங்க...!
நரமாமிசம் சாப்பிடுவது என்பது மனித குலத்திற்கு எதிரான கொடுஞ்செயல்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த கொடுஞ்செயல் கடந்த காலத்தில் மட்டும்தான் நடந்தது, ஆனால் விஞ்ஞானமும், நாகரிகமும் பெரிதும் வளர்ந்து விட்ட தற்போதைய காலக்கட்டத்தில் இது நடப்பதில்லை என்று நீங்கள் நினைத்தால் உங்கள் எண்ணம் முற்றிலும் தவறானதாகும்.
மனநோய் அல்லது போதைப்பொருளால் கேள்விப்படுகிறோம், ஆனால் உலகெங்கிலும் உள்ள பழங்குடியினர் தங்கள் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக நரமாமிசம் சாப்பிடுவதை இப்போதும் வழக்கமாக வைத்திருக்கின்றனர். இந்த பதிவில் இப்போதும் நரமாமிசம் சாப்பிடும் பழக்கம் உள்ள இடங்கள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.

பப்புவா நியூ கினி
மேற்கு நியூ கினியாவில் ந்தீராம் கபூர் ஆற்றங்கரையில் கொரோவாய் என்ற பழங்குடியினர் வாழ்கின்றனர். இந்த பழங்குடியினர் மர்மமான மரணமடைந்தவர்கள் மனித உருவத்தை எடுக்கும் பேய்களாக மாறுவார்கள் என்று நம்புகிறார்கள், மேலும் மரணத்திற்குப் பழிவாங்குவதற்காக இறந்த மனிதனின் சடலத்தை சாப்பிடுவது அவர்களின் கடமையாகக் கருதுகிறார்கள்.
நைஹே குகைகள் - சிகடோகா, பிஜி
பிஜி தீவு "நரமாமிச தீவு" என்று அழைக்கப்பட்டது. பிஜி தீவு அதன் நரமாமிசம் உண்பதற்கான நீண்டகால வரலாற்றிற்கு பிரபலமானது. தற்போது பிஜி தீவின் கடைசி மனித உண்ணும் குழுவின் தாயகமாக நைஹே குகைகள் உள்ளது, இந்த இடம் தவிர சமீபத்திய ஆண்டுகளில் நரமாமிசம் சாப்பிடும் நடைமுறைகள் இங்கு கிட்டத்தட்ட அழிந்துவிட்டன.
காங்கோ
2003 இல் ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தில், Mbuti Pygmies இன் பிரதிநிதியான சினபாசி மகேலோ, Ituri மாகாணத்தைச் சேர்ந்த காங்கோ கிளர்ச்சியாளர்கள் தனது மக்களை உயிருடன் சாப்பிடுவதாகக் கூறினார்.
கிளர்ச்சியாளர்களின் தளபதிகள் மனித உறுப்புகளை சாப்பிடுகிறார்கள் என்ற செய்திகளை நாங்கள் கேள்விப்படுகிறோம், இது அவர்களுக்கு பலத்தைத் தரும் என்று அவர்கள் நம்புகிறார்கள்" என்று அவர் கூறினார்.
கம்போடியா
கெமர் ரூஜ் கிளர்ச்சியில் போராடிய கம்போடிய வீரர்கள், போரில் கொல்லப்பட்ட கெமர் ரூஜ் வீரர்களின் உடல்களில் இருந்து இதயங்களையும் ஈரல்களையும் வெட்டிக் களத்திலோ அல்லது வீட்டிற்கு வந்தோ இரவு உணவிற்கு உட்கொள்வதற்காகக் குற்றம் சாட்டப்பட்டனர். தோற்கடிக்கப்பட்ட எதிரியின் மனித கல்லீரலை சாப்பிடுவது அவர்களின் பலத்தையும், தைரியத்தையும் தங்களுக்கு அளிக்கும் என்று அவர்கள் நம்பினார்கள்.
நுகு ஹிவா, பிரெஞ்சு பாலினேசியா
2011 ஆம் ஆண்டில், பிரெஞ்சு பாலினேசியாவின் நுகு ஹிவாவில் பாரம்பரிய ஆடு வேட்டையில் ஈடுபட்டிருந்த ஜெர்மன் சுற்றுலாப் பயணி ஸ்டீபன் ரமின் திடீரென காணாமல் போனார். அவரது எச்சங்கள் பின்னர் ஒரு கேம்ப்ஃபயர் அருகே கண்டுபிடிக்கப்பட்டன, மேலும் அவர் நரமாமிசம் உண்ணும் பழங்குடியினரால் துண்டு துண்டாக வெட்டப்பட்டு உண்ணப்பட்டதாக கூறப்பட்டது.
லைபீரியா
முதல் லைபீரிய உள்நாட்டுப் போருக்குப் பிறகு லைபீரியாவில் நரமாமிசம் சாப்பிடப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்தது. அதனை அறிந்த மருத்துவர்கள், இந்தச் செயலைப் புகாரளித்தனர், மேலும் விசாரணை அறிக்கையை, அம்னஸ்டி இன்டர்நேஷனலுக்கு அனுப்பினார்கள். ஆனால் அந்தத் தகவல் வெளியிடப்படவில்லை.
அம்னஸ்டி இன்டர்நேஷனலின் பொதுச் செயலாளர் பியர் சான், மனித உரிமை மீறல்களுக்குப் பிறகு உடல்களை எதுவும் செய்ய முடியாது, ஏனெனில் கவலைக்குரிய விஷயம் அல்ல என்று கூறினார்.
முன்னாள் லைபீரிய சர்வாதிகாரி சார்லஸ் டெய்லருக்கு எதிராகப் போரிட்ட முன்னாள் போர்வீரரான ஜெனரல் பட் நேக்கட் 2008 இல் மனித மாமிசம் உண்டதை ஒப்புக்கொண்டார். அதில் குழந்தைகளும் அடங்குவர் என்பது உலகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
பிரேசில் - தி வாரி மக்கள்
வாரி' அல்லது பக்கா நோவா, பிரேசிலின் பழங்குடி மக்களாவர், அவர்களின் இடத்தில் நீங்கள் சில நாட்கள் தங்கினால், குறைந்தது ஒரு இறந்த நபரையாவது அவர்கள் சாப்பிடுவதை நீங்கள் பார்க்கலாம். வாரி'கள் எண்டோகானிபலிசம் அல்லது ஒருவரின் சொந்த பழங்குடியினரை அவர்கள் இறந்த பிறகு சாப்பிடுவதைப் வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
வாரி மரணச் சடங்கு, இறந்தவரின் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் வருவதற்கு (பொதுவாக சுமார் மூன்று நாட்கள்) எடுக்கும் வரை உடலை வெளியே வைப்பதை உள்ளடக்குகிறது. அந்த நேரத்தில், உடல் சிதைந்து வீங்கத் தொடங்குகிறது, மேலும் குடும்பத்தினர் அனைவரும் வந்தவுடன், அவர்கள் இதயம் மற்றும் உடலின் உள்ளுறுப்புகளை விருந்து வைக்கிறார்கள், முடி மற்றும் சருமத்தை தவிர்த்து விடுகிறார்கள்.
மேற்கு ஆப்பிரிக்கா - சிறுத்தை சமூகம்
மேற்கு ஆபிரிக்காவில், "சிறுத்தை சமூகம்" என்று குறிப்பிடப்படும் ஒரு குழு, சிறுத்தைகளின் நகங்கள் மற்றும் பற்கள் வடிவில் வீட்டில் தயாரிக்கப்பட்ட கத்திகள் மற்றும் வாள்களால் பயணிகளைத் தாக்குவதை வழக்கமாக வைத்திருந்தனர். அதன்பின் அவர்கள் அந்த பயணிகளை சாப்பிடனர்.
நரமாமிசம் தங்கள் பழங்குடியினரை பலப்படுத்துகிறது என்று அவர்கள் நம்புகிறார்கள். இந்த சிறுத்தை சமூகம் 21 ஆம் நூற்றாண்டில் காணாமல் போய்விட்டது என்று கூறப்படுகிறது, ஆனால் அவர்கள் மீண்டும் வரமாட்டார்கள் என்று நிச்சயமாக கூற முடியாது.



Click it and Unblock the Notifications












