Latest Updates
-
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
இந்த நாட்டு பெண்களை திருமணம் செய்து கொள்ள அரசாங்கமே ஆண்களுக்கு பணம் கொடுக்குதாம்... உடனே கிளம்புங்க...!
நம் உலகம் இதுவரை சந்திக்காத பல்வேறு மாற்றங்களை தற்போது சந்தித்து வருகிறது. இந்தியாவின் பெரும்பாலான சமூகங்களில் திருமணத்தின் போது மணமகள் வீட்டார் மணமகன் வீட்டாருக்கு வரதட்சணை கொடுப்பது நடைமுறையில் உள்ளது. ஆனால் தற்போது இந்த நடைமுறை உலகின் பல நாடுகளில் முற்றிலும் தலைகீழாக மாறிவருகிறது.
உலகின் சில நாடுகள், தங்கள் நாட்டின் பெண்களை திருமணம் செய்து கொள்ளும் ஆண்களுக்கு, குறிப்பாக வெளிநாட்டு ஆண்களுக்கு நிதி ஊக்கத்தொகைகளை வழங்குவதன் மூலம் மக்கள்தொகை வீழ்ச்சி, கருவுறுதல் பிரச்சினைகள் மற்றும் பாலின ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்ய முயற்சி வருகின்றன.

இந்த ஊக்கத்தொகைகள் மக்கள்தொகை சவால்களைச் சமாளிப்பது, புதிய குடியிருப்பாளர்களை ஈர்ப்பது மற்றும் அவர்களின் சமூகங்களை புத்துயிர் பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இந்த நாடுகளுக்கிடையே கொள்கைகள் வேறுபட்டாலும், மக்கள்தொகை சரிவை எதிர்கொள்வது, பாலின ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்வது மற்றும் குடும்பங்களை ஊக்குவிப்பது மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு பங்களிப்பது போன்றவை இதன் முக்கியமான குறிக்கோளாகும்.
சீனா
சீனா குறைந்த கருவுறுதல் விகிதத்தை எதிர்கொண்டு வருகிறது, இதற்கு காரணம் அங்கு நீண்ட காலமாக நிலவி வந்த ஒரு குழந்தை கொள்கையாகும், இந்த விதி சமீபத்தில் தளர்த்தப்பட்டது. பிறப்பு விகிதங்களின் சரிவை மாற்றியமைக்க, சீன அரசாங்கம் பல்வேறு சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அத்தகைய நடவடிக்கைகளில் 25 வயது அல்லது அதற்கும் குறைவான பெண்களை திருமணம் செய்யும் தம்பதிகளுக்கு ¥1,000(இந்திய மதிப்பில் 13000) ஊக்கத்தொகையை வழங்குவதும் அடங்கும்.
இந்த கொள்கை முன்கூட்டிய திருமணங்களையும், இளம் வயதிலேயே குழந்தை பெற்றுக்கொள்வதையும் ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த முயற்சிகள் நாட்டின் மக்கள்தொகை வளர்ச்சியை அதிகரிக்கவும், வயதான மக்கள்தொகையின் சுமையைக் குறைக்கவும் வடிவமைக்கப்பட்ட உத்தியாகும்.
ஹங்கேரி
பெரிய அளவிலான குடும்பங்களை ஊக்குவிப்பதற்கும் அதன் மக்கள்தொகை வளர்ச்சியை அதிகரிப்பதற்கும் ஹங்கேரி பல்வேறு நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளைக் கொண்ட தம்பதிகளுக்கு அரசாங்கம் மானியக் கடன்கள் மற்றும் கடன் தள்ளுபடிகளை வழங்குகிறது.
ஒரு குறிப்பிடத்தக்க திட்டத்தில் புதுமணத் தம்பதிகளுக்கு €30,590(இந்திய மதிப்பில் 3 லட்சம் வரை) வட்டி இல்லாத கடனை வழங்குவதும் அடங்கும். அவர்கள் மூன்று குழந்தை பெற்றுக்கொண்டால் கடன் முழுவதும் தள்ளுபடி செய்யப்படுகிறது. இந்த சலுகைகள் ஹங்கேரியில் கருவுறுதல் விகிதத்தையும், மக்கள் தொகையையும் அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
இத்தாலி
இத்தாலி, குறிப்பாக கிராமப்புறங்களில், மக்கள் தொகை வேகமாக குறைந்து வருகிறது மற்றும் பாலின ஏற்றத்தாழ்வுகள் கடுமையாக உள்ளது. கேண்டெலா மற்றும் டோர்மினா போன்ற பிராந்தியங்களில், உள்ளூர் அரசாங்கங்கள் புதிய குடியிருப்பாளர்களை ஈர்க்கவும் திருமணத்தை ஊக்குவிக்கவும் ஊக்கத்தொகைகளை வழங்குகின்றன. திருமணமாகாதவர்கள் மற்றும் குடும்பங்கள் உட்பட தம்பதிகள், இந்த பகுதிகளில் திருமணம் செய்துகொண்டு குடியேற முடிவு செய்தால், அவர்கள் €2,000 வரை பெறலாம். இந்த முயற்சி பாலின வேறுபாடுகளை குறைக்கவும், மக்கள் தொகை வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உருவாக்கப்பட்டது.
ஐஸ்லாந்து
ஐஸ்லாந்து மக்கள் தொகை குறைவாக உள்ள ஒரு நாடாகும், இது தனித்துவமான மக்கள்தொகை சவாலை எதிர்கொள்கிறது, இங்கு ஆண்களின் எண்ணிக்கை பெண்களின் எண்ணிக்கையை விட மிகவும் குறைவாக உள்ளது. இந்த ஏற்றத்தாழ்வை சரி செய்ய, ஐஸ்லாந்து பெண்களை திருமணம் செய்யும் வெளிநாட்டு ஆண்களுக்கு அந்த நாடு நிதி உதவி வழங்குவதாக செய்திகள் வெளிவந்துள்ளன, மேலும் மாதந்தோறும் $5,000 வரை உதவித்தொகை செலுத்த பரிந்துரைக்கப்படுகிறது.
இந்த ஊக்கத்தொகையின் நிலைத்தன்மை அடிக்கடி விவாதிக்கப்பட்டாலும், மக்கள்தொகை அதிகரிப்பின் அவசியத்தை ஐஸ்லாந்து உணர்ந்துள்ளதால் இந்த அறிவிப்பு உண்மையாக இருக்க அதிக வாய்ப்புள்ளது.
எஸ்டோனியா
கிழக்கு ஐரோப்பிய நாடான எஸ்டோனியா, வெளிநாட்டிலிருந்து வருபவர்களை, குறிப்பாக உள்ளூர் பெண்களை திருமணம் செய்ய விரும்புவோரை ஈர்க்க பல்வேறு சலுகைகளை வழங்குகிறது. எஸ்டோனியா அரசாங்கம் தங்கள் நாட்டில் வசிக்கும் திருமணமான தம்பதிகளுக்கு சுகாதாரம் மற்றும் கல்வி சலுகைகளுடன் நிதி ஊக்கத்தொகைகளையும் வழங்குகிறது.
இந்த முயற்சி, சில பிராந்தியங்களில் அதிக பெண்-ஆண் விகிதங்களில் கவனம் செலுத்தி, மக்கள் தொகையை மேம்படுத்துவதற்கான எஸ்டோனியாவின் தந்திரத்தின் ஒரு பகுதியாகும். வெளிநாட்டு ஆண்களை ஈர்ப்பதன் மூலம், எஸ்டோனியா புதிய குடும்ப உறவுகளை வளர்ப்பதையும் அதன் மக்கள்தொகை தளத்தை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
டென்மார்க்
வெளிநாட்டு திருமணங்களை வரவேற்கும் சூழல் காரணமாக, டென்மார்க் சர்வதேச தம்பதிகளுக்கு ஒரு சிறந்த புகலிடமாக மாறியுள்ளது. டென்மார்க் பெண்களை திருமணம் செய்வதற்கு நேரடி நிதி ஊக்கத்தொகைகளை வழங்கவில்லை என்றாலும், சர்வதேச திருமணங்களுக்கு இது ஒரு கவர்ச்சிகரமான சமூக கட்டமைப்பையும், பாதுகாப்பையும் வழங்குகிறது.
டென்மார்க்கில் திருமணம் செய்து கொள்வதற்கான எளிமை, அதன் உயர் வாழ்க்கைத் தரத்துடன் இணைந்து, நாட்டில் குடியேற விரும்பும் வெளிநாட்டு தம்பதிகளுக்கு நல்ல நாடாக அமைந்துள்ளது. டென்மார்க்கின் வசீகரமான அம்சங்களில் ஒன்றாக அதன் திருமண கொள்கைகள் உள்ளது, இது சமூக ஒருங்கிணைப்பை ஊக்குவிக்கும் அதே வேளையில் சர்வதேச ஜோடிகளை ஈர்க்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.



Click it and Unblock the Notifications
