Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
சாணக்கிய நீதி படி இந்த பழக்கங்கள் உள்ளவர்கள் வாழ்க்கை முழுக்க ஏழையாகத்தான் இருக்கணுமாம்...!
Chanakya Niti: இந்தியாவின் தலைசிறந்த அறிஞர்களில் ஒருவரான சாணக்கியரின் கொள்கைகள் இன்றும் மிகவும் பிரபலமானவை. அவர் கூறிய கொள்கைகளை வாழ்க்கையில் ஏற்றுக்கொள்வதன் மூலம், ஒரு நபரின் வாழ்க்கையில் வெற்றிக்கான பாதை தெளிவாகிறது. கூடுதலாக, இந்த கொள்கைகள் ஒருவருக்கு தனிப்பட்ட வாழ்க்கையில் வளர்ச்சி அடைய சரியான திசையை வழங்குகின்றன.
சாணக்கியரின் நீதி சாஸ்திரம் மனிதனுக்கு எதிரிகளாக மாறும் சில பழக்கவழக்கங்களைப் பற்றி விளக்குகிறது. ஒருவரின் இந்த பழக்கவழக்கங்கள் காரணமாக, அவர்கள் வாழ்க்கையில் தோல்விகளைச் சந்திக்கிறார்கள். இருப்பினும், அவர்களால் அத்தகைய பழக்கங்களை அடையாளம் காண முடியாததால் அவற்றை சரிசெய்ய முடிவதில்லை. சாணக்கிய நீதியில் குறிப்பிட்டுள்ள ஒருவருக்கு தீங்கு விளைவிக்கும் சில பழக்கவழக்கங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பணத்தை வீணாக்குதல்
எந்தவித முன்யோசனையுமின்றி பணத்தைச் செலவிடும் சிலர் இருக்கிறார்கள். இந்த பழக்கம் அவருக்கு தீராத பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன. அத்தகையவர்களால் எதிர்காலத்திற்காக பணத்தை சேமிக்க முடியாது. சாணக்கிய நீதியில், சிந்தனையின்றி பணத்தைச் செலவிடுபவர்கள் விரைவில் ஏழைகளாகிவிடுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
சோம்பேறித்தனமாக நடப்பது
ஒரு மனிதன் வெற்றி பெறுவதற்கு மிகப்பெரிய எதிரியாக இருப்பது அவர்களின் சோம்பேறித்தனம். சோம்பேறித்தம் உள்ள ஒருவர் வெற்றிபெறும் வாய்ப்புகளை இழக்கிறார். அவர்களின் சோம்பேறித்தனத்தால், அவர்கள் பொறுமையின்றி தோல்விகளை எதிர்கொள்கிறார்கள். அத்தகையவர்கள் வாழ்வில் கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொள்கிறார்கள் என்று சாணக்கிய நீதி கூறுகிறது.
சுகாதாரமின்றி இருப்பது
சாணக்கியரின் கூற்றுப்படி, உடலை சுத்தமாக வைத்திருப்பதோடு, பற்களையும் துணிகளையும் சுத்தமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். தொடர்ந்து குளிக்காமல், அழுக்கு ஆடைகளை அணிபவர்களுக்கு லட்சுமி தேவியின் ஆசீர்வாதம் கிடைக்காது. அத்தகையவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கிய பிரச்சினைகளால் பாதிக்கப்படுவார்கள், தங்கள் பணத்தை ஆரோக்கியத்திற்காகவே செலவிடுகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் வாழ்க்கையில் எப்போதும் கஷ்டங்களையும் துன்பங்களையும் சந்திக்க வேண்டியிருக்கும்.
அளவிற்கு அதிகமான தூக்கம்
சாணக்கிய நீதியின்படி, காலை நேரம் மிகவும் மதிப்புமிக்கது. எனவே, ஒருவர் எப்போதும் அதிகாலையில் எழுந்திருக்க வேண்டும். அதேசமயம் காலையில் தாமதமாக எழுந்திருப்பவர்கள் பல நோய்களை ஈர்க்கிறார்கள். காலை முதல் மாலை வரை தூங்குபவர் ஒருபோதும் பணக்காரர் ஆக முடியாது என்று சாணக்கியர் கூறுகிறார். சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை தூங்குபவர்களுக்கு லட்சுமி தேவியின் ஆசிகள் கிடைக்காது. காரணமின்றி தூங்கி வழிபவர்கள் எப்போதும் வறுமையிலேயே வாழ்வார்கள் என்று சாணக்கியர் கூறுகிறார்.
ஒழுக்கமில்லா செயல்கள்
அதர்மம், தந்திரம் மற்றும் நேர்மையின்மை மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் நீண்ட காலம் பணக்காரர்களாக இருக்க மாட்டார்கள். அவர்கள் சீக்கிரம் தங்கள் பணத்தை இழப்பார்கள் என்று சாணக்கியர் கூறுகிறார். சாணக்கியர், நீதியான பாதையை கைவிட்டு, அநீதியில் ஈடுபடுபவர்களுடன் லட்சுமி தேவி நீண்ட காலம் தங்க மாட்டார் என்று கூறுகிறார்.
மோசமாக பேசும் பழக்கம் உள்ளவர்கள்
மற்றவர்களிடம் மோசமாகப் பேசும் பழக்கம் உள்ளவர்கள் எப்போதும் எதிர்மறை ஆற்றலைப் பரப்புகிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு உதவ யாரும் முன்வருவதில்லை. இதன் காரணமாக, வெற்றியின் அனைத்து கதவுகளும் அவர்களுக்கு மூடப்படுகின்றன, மேலும் அவர்கள் வறுமையில் சிக்கிக்கொள்வார்கள் என்று சாணக்கியர் கூறுகிறார். தங்கள் வார்த்தைகளால் மற்றவர்களைப் புண்படுத்துபவர்கள் ஒருபோதும் லட்சுமி தேவியின் ஆசீர்வாதத்தைப் பெற மாட்டார்கள்.



Click it and Unblock the Notifications












