சாணக்கிய நீதி படி பெண்களுக்கு இந்த 5 கெட்ட குணங்கள் பிறவியிலிருந்தே இருக்குமாம்... என்னென்ன தெரியுமா?

Chanakya Niti: "வெற்றி பெற்ற ஒவ்வொரு ஆணுக்கு பின்னாலும் ஒரு பெண் இருப்பார்" என்பது பல நூற்றாண்டுகளாக கூறப்படும் ஒரு பழமொழியாகும். அதேசமயம் மற்றொரு பிரபலமான பழமொழியும் உள்ளது, அது "ஆவதும் பெண்ணாலே, ஆவதும் பெண்ணாலே" என்பதுதான். ஒரு பெண் நினைத்தால் எவ்வளவு வலிமையான ஆணையும் வீழ்த்திவிட முடியும். இதைத்தான் சாணக்கியரும் தனது சாணக்கிய நீதியில் கூறியுள்ளார்.

சாணக்கியர் பண்டைய இந்தியாவின் ஒரு சிறந்த இராஜதந்திரி, அறிஞர் மற்றும் பொருளாதார நிபுணர். மனித வாழ்க்கை தொடர்பான அனைத்து அம்சங்களையும் அவர் தனது சாணக்கிய நீதியில் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக பெண்களைப் பற்றி தனது சாணக்கிய நீதியில் பல விஷயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

Chanakya Niti Worst Habits of Women From Birth

பெண்களின் இயல்பை யாராலும் புரிந்துகொள்ள முடியாது என்று கூறப்படுகிறது. இந்த கூற்று பெரும்பாலும் உண்மையாகவே இருக்கிறது. இந்தியாவின் மாபெரும் அறிஞரான ஆச்சார்ய சாணக்கியரும் தனது கொள்கைகளில் பெண்களின் இயல்பு பற்றி நிறைய எழுதியுள்ளார். சாணக்கிய நீதியில் குறிப்பிட்டுள்ளபடி, சில கெட்ட பழக்கங்கள் பெண்களுக்குப் பிறப்பிலிருந்தே இயல்பாகவே அவர்களுக்குள் இருக்கும். காலப்போக்கில், இந்தக் கெட்ட பழக்கங்கள் அதிகரிக்கின்றன. அவை என்னென்ன பழக்கங்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

யோசிக்காமல் செயல்படுவது

ஆச்சார்ய சாணக்கியரின் கூற்றுப்படி, பெண்கள் எந்தவொரு செயலையும் நிதானமாக செய்ய மாட்டார்கள் அனைத்து விஷயத்திலும் மிகவும் அவசரக்காரர்களாக இருப்பார்கள். அவர்களின் பொறுமையின்மை அவர்களுக்கும், மற்றவர்களுக்கும் சிக்கல்களை ஏற்படுத்துவதாக இருக்கும். அவர்கள் நன்மை தீமைகளைப் பற்றியோ, அவர்களுடைய செயல்களின் பின்விளைவுகளைப் பற்றியோ முன்பின் யோசிக்காமல் எந்தவொரு பெரிய முடிவையும் எடுத்துவிடுகிறார்கள். பெண்களின் இந்த பழக்கம் எந்த விதத்திலும் நல்லதல்ல, ஏனெனில் அவர்களின் யோசிக்காமல் செய்த செயல்களுக்காக பின்னர் வருந்த நேரிடும்.

பேராசை

ஆச்சார்ய சாணக்கியரின் கூற்றுப்படி, பெண்கள் இயல்பிலேயே பேராசை குணம் கொண்டவர்கள். அவர்கள் தங்களிடம் உள்ள சொந்தப் பணத்தை விட மற்றவர்களின் பணத்தின் மீது அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். இந்த பேராசை குணம் காரணமாக, பெண்கள் சில நேரங்களில் தங்கள் தகுதிக்குக் கீழே இறங்கி மோசமான செயல்களில் ஈடுபட்டு, சமூகத்தில் தங்கள் மரியாதையை இழக்கிறார்கள்.

பெண்களிடமும் முட்டாள்தனம் இருக்கும்

ஆச்சார்ய சாணக்கியரின் கூற்றுப்படி, பெண்களிடம் ஆண்களை விட முட்டாள்த்தனம் அதிகமாக இருக்கும். அவர்கள் முட்டாள்கள் என்பதற்கு காரணம், யாராலும் அவர்களை எளிதில் ஏமாற்றிவிட முடியும். பெண்கள் மற்றவர்களின் இனிமையான வார்த்தைகளுக்கு எளிதில் மயங்கிவிடுவார்கள். சரி தவறு என்று சிந்திக்காமல் முட்டாள்தனமாகச் செயல்படுவது பெண்களின் இயல்பு என்று சாணக்கியர் கூறுகிறார். ஆண், பெண் இருவரில் எப்போதும் பெண்களே அதிகம் ஏமாற்றப்படுகிறார்கள்.

சோம்பேறித்தனம்

சாணக்கிய நீதியில் குறிப்பிட்டுள்ள படி, பெண்கள் தங்களின் சோம்பேறித்தனம் காரணமாக வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்வதில்லை, தங்களின் தனிப்பட்ட சுகாதாரத்தையும் பராமரிப்பதில்லை. இந்த குறைபாடு பெண்களுக்குப் பிறப்பிலிருந்தே இயற்கையாகவே உள்ளது. பெண்களின் இந்தக் குறைபாடு அவர்களுக்கும், அவர்களின் குடும்பத்திற்கும் அவப்பெயரைத் தேடித்தருகிறது. ஒரு ஆண் தன் மனைவியிடம் வீட்டைச் சுத்தமாக வைக்குமாறு எவ்வளவு சொன்னாலும், சோம்பலாக இருப்பது அவர்களின் இயல்பிலேயே உள்ளது. விதிவிலக்காக சில பெண்கள் எப்போதும் வீட்டைச் சுத்தமாக வைத்திருக்கிறார்கள்.

இரக்கமின்மை

ஆச்சார்ய சாணக்கியரின் கருத்துப்படி, பெண்கள் ஆண்களை விட அதிக இரக்கமற்றவர்கள். தங்கள் சுயநலத்திற்காக யாருக்கும் தீங்கு விளைவிக்க அவர்கள் தயங்க மாட்டார்கள். சில பெண்கள் தங்கள் சுயநலத்திற்காக தங்கள் குடும்பம், கணவர் மற்றும் குழந்தைகளை விட்டுவிடுகிறார்கள். பண்டைய காலம் முதல் தற்போதைய நவீன காலம் வரை இது மாறாமல்தான் உள்ளது. இது விலங்கினங்களிலும் காணப்படுவதாக சாணக்கியர் கூறுகிறார்.

Story first published: Wednesday, January 21, 2026, 8:00 [IST]
Desktop Bottom Promotion