Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
சாணக்கிய நீதி படி இந்த குணமுள்ள பெண்கள் ஆண்களுக்கு எளிதில் கிடைக்காத அதிர்ஷ்ட தேவைதைகளாம்...!
Chanakya Niti: பண்டைய இந்தியாவின் சிறந்த அறிஞரான சாணக்கியர் வேலை, வணிகம், நட்பு மற்றும் திருமண வாழ்க்கை என அனைத்து விஷயங்களைப் பற்றியும் தனது சாணக்கிய நீதியில் விளக்கியுள்ளார். மகிழ்ச்சியான குடும்பத்திற்கு கணவன்-மனைவி இருவரின் பங்களிப்பும் தேவை. இருப்பினும், பெண்கள் குடும்பத்தின் முதுகெலும்பாக கருதப்படுகிறார்கள்.
ஏனென்றால், அவர் குழந்தைகளுக்கு நல்ல பழக்கங்களை கற்றுக்கொடுக்கிறார், வீட்டில் உள்ள அனைத்து உறுப்பினர்களையும் ஒன்றாக வைத்திருக்கிறார், கடினமான காலங்களில் கணவருக்கு உறுதுணையாக இருக்கிறார்கள்.

சாணக்கியர் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கூறிய அறிவுரைகள், நற்பண்புகள் மற்றும் வாழ்க்கை முறைகள் இன்றைய காலகட்டத்திலும் பொருத்தமானவை. சாணக்கியரின் கூற்றுப்படி, ஒரு பெண் சில குணங்களைக் கொண்டிருந்தால், அவரை மணந்தவரின் அதிர்ஷ்டம் விழித்துக் கொள்ளும். அத்தகைய பெண்கள் தங்கள் கணவருக்கு அதிர்ஷ்ட தேவதைகளாக இருப்பார்கள். அவை என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
அமைதி
சாணக்கிய நீதியின் படி, அமைதியான இயல்புடைய பெண் லட்சுமியின் வடிவமாக கருதப்படுகிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அமைதியான மனது கொண்ட ஒரு பெண் ஆணின் மனைவியாக வந்து விட்டால் வீட்டை அழகுபடுத்தி குடும்பத்தில் நல்லிணக்கமும் அமைதியும் ஏற்படுத்துவார். அதனால் குடும்பம் மிக வேகமாக முன்னேறும். கோபம், சண்டை சச்சரவுகள் வீட்டின் அமைதியைக் கெடுக்கும். இதனால் வீட்டில் பல பிரச்சனைகள் ஏற்படும். அமைதியான இயல்பு கொண்ட பெண்கள் முழு வீட்டையும் நேர்மறை ஆற்றலால் நிரப்புகிறார்கள்.
படித்த பெண்கள்
சாணக்கியரின் கூற்றுப்படி, ஒரு படித்த, நல்லொழுக்கமுள்ள மற்றும் பண்பட்ட பெண் ஒரு ஆணின் வாழ்க்கையில் மனைவியாக வந்தால், அவர் எல்லா சூழ்நிலைகளிலும் குடும்பத்தை பாதுகாப்பவராக இருப்பார்கள். இதனால் குடும்ப உறுப்பினர்கள் முன்னேற்றம் அடைவார்கள். அத்தகைய பெண்கள் எப்போதும் மிகவும் நம்பிக்கையுடன் இருப்பார்கள், பெரிய முடிவுகளை அச்சமின்றி எடுப்பார்கள்.
இனிமையாக பேசும் பெண்கள்
சாணக்கியரின் கூற்றுப்படி, மென்மையாகவும் இனிமையாகவும் பேசும் பெண்ணை மணக்கும் ஆண் எப்போதும் மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்துவார்கள். அத்தகைய பெண்களுக்கு சமூகத்தில் மரியாதை கிடைக்கும். அதே நேரத்தில், அவர்கள் பெற்றோர் மற்றும் மாமியார் வீட்டின் கௌரவத்தை அதிகரிக்கிறார்கள்.
சூழ்நிலைக்கு ஏற்ப நடந்து கொள்ளும் பெண்கள்
சாணக்கியரின் கூற்றுப்படி, சூழ்நிலைகளுக்கு ஏற்ப தங்கள் ஆசைகளை மாற்றத் தெரிந்த பெண்கள் சிறந்த மனைவிகளாக கருதப்படுகிறார்கள். அத்தகைய பெண்கள் தங்கள் கணவர் மற்றும் குடும்பத்தை நல்ல காரியங்களைச் செய்யவும், சரியான பாதையில் நடக்கவும் தூண்டுகிறார்கள். அவர்களின் வரையறுக்கப்பட்ட தேவைகளால், குடும்பம் ஒருபோதும் நிதி நெருக்கடியில் சிக்குவதில்லை. இது முழு குடும்பத்திற்கும் பயனளிக்கிறது.
சகிப்புத்தன்மை கொண்ட பெண்
சாணக்கிய நீதி படி, ஒரு நெகிழ்ச்சியான பெண் அமைதியுடன் கடினமான காலங்களை கடக்கிறார். தன் வாழ்க்கை துணையை ஒருபோதும் விட்டு விலக மாட்டார். அத்தகைய மனைவியின் ஆதரவும் ஊக்கமும் அவருடைய கணவனை எந்த சிரமங்களிலிருந்தும் விடுவித்து வெற்றிக்கு வழிவகுக்கும்.
பணத்தை சேமிக்கும் திறன்
சாணக்கிய நீதியின் கூற்றுப்படி, பணத்தை சேமிக்கத் தெரிந்த ஒரு பெண் தன் கணவன் அதிர்ஷ்டசாலி என்று கூறுகிறார். அத்தகைய பெண்கள் நிதிச் சிக்கல்களை எதிர்கொள்ளும் போது கணவன் அல்லது குடும்பத்தின் முதுகெலும்பாக இருப்பார்கள். திடீர் பணப் பிரச்சனையை எதிர்கொள்ளும் போது, அந்தப் பெண் அதை எளிதாகக் கையாள்வார் என்கிறார் சாணக்கியர்.



Click it and Unblock the Notifications
