Latest Updates
-
வல்லாரை கீரையை இந்த மாதிரி சட்னி செஞ்சு பாருங்க - புத்தியும், ஆரோக்கியமும் அதிகமாகும் -
வாஸ்து படி இந்த 5 செடிகள் உங்கள் வீட்டில் இருந்தால் துரதிர்ஷ்டம் உங்கள் வீட்டை விட்டு எப்பவும் போகாதாம் -
முருங்கைக்காய் வாங்குனா இந்த வித்தியாசமான பொரிச்ச குழம்பு செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
மாங்காய் Vs. மாம்பழம்: இந்த இரண்டில் எது உண்மையில் ஆரோக்கியமானது தெரியுமா? உங்களுக்கு பிடிச்சது எது? -
சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சிக்கன் வாங்குனா இந்த தேங்காய் கொத்தமல்லி சிக்கன் வறுவலை செய்யுங்க - சூப்பரா இருக்கும் -
2050-ல் உலகை ஆளப்போகும் டாப் 10 நாடுகள்: இந்தியா 2050-ல் எந்த நிலையில் இருக்கும் இருக்கப்போகுது தெரியுமா? -
சிக்கன் எடுத்தா இப்படி குக்கர்-ல ஒருடைம் குழம்பு வையுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 19 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவருமாம் -
வார ராசிபலன் (19 April 2026 - 25 April 2026) - இந்த வாரம் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்தில் கவனமா இருக்கணும்..
சாணக்கிய நீதி படி இந்த 5 குணம் உள்ள ஆண்களுடன்தான் பெண்கள் வாழ்வதற்கு விரும்புவார்களாம்... உங்ககிட்ட இருக்கா?
Chanakya Niti: பண்டைய இந்தியாவின் மிகச்சிறந்த ஞானிகளில் ஒருவரான சாணக்கியர் வாழ்க்கையை எளிமையாகவும் மகிழ்ச்சியாகவும் மாற்றுவதற்கான பல வழிகளை தனது சாணக்கிய நீதியில் விவரித்துள்ளார். ஆச்சார்ய சாணக்கியரின் இந்த வார்த்தைகளை நம் வாழ்வில் கடைப்பிடித்தால், பெரிய தடைகளைக்கூட எளிதில் சமாளிக்கலாம். சாணக்கிய நீதியில் மிகப்பெரிய பிரச்சனைகளுக்கான தீர்வுகள் விவரிக்கப்பட்டுள்ளன.

சாணக்கிய நீதியில் பெண்களைப் பற்றி பல விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது, அதில் பெண்களின் மகிழ்ச்சியையும் மனதைக் கவரும் விஷயங்களையும் குறிப்பிடுகிறார். ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான உறவைப் பற்றி சாணக்கிய நீதியில் முக்கியமான விவாதிக்கப்பட்டுள்ளது. பெண்கள் விரும்பும் சில பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்ற ஆண்கள் பின்பற்ற வேண்டிய சில பழக்கங்கள் உள்ளன. அவை என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
நேர்மை
சாணக்கியரின் கூற்றுப்படி, பெண்கள் நேர்மையான ஆண்களுடன் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று நம்புகிறார்கள். ஒரு நேர்மையான நபர் எப்போதும் தனது உறவை பொய் சொல்லி காப்பாற்ற நினைக்க மாட்டார். பெண்கள் எப்போதும் நேர்மையான மற்றும் உண்மையான அன்புடன் இருக்கும் ஆண்களை விரும்புகிறார்கள். ஒரு நேர்மையான மனிதன் தனது உறவில் ஒருபோதும் ஏமாற்ற மாட்டான்.
மரியாதைக் கொடுப்பவர்கள்
ஒவ்வொரு பெண்ணும் தன் கணவர் தன்னை எப்போதும் மதிக்க வேண்டும் என்று விரும்புகிறார். அவர்கள் வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். மற்றவர்கள் மீது அக்கறை கொள்ளும் திறன் கொண்ட ஆண்களுடன் பெண்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். பெண்கள் தங்கள் பிரச்சனைகளைக் கேட்டு தீர்வு காணும் ஆண்களிடம் ஈர்க்கப்படுகிறார்கள். அத்தகைய ஆண்கள் எப்போதும் பெண்களால் நேசிக்கப்படுகிறார்கள்.
கண்ணியமானவர்கள்
சாணக்கிய நீதியில் கூறியுள்ளபடி, பெண்கள் கண்ணியமான ஆண்களை மிக விரைவாக விரும்புகிறார்கள். ஆணவம் இல்லாத, தன்னுடைய தவறுகளைப் பணிவுடன் ஏற்றுக்கொள்ளும் ஆண்களை பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். ஆண்களின் இந்த குணத்தால் உறவில் காதல் நீடிக்கும் என்று பெண்கள் நம்புகிறார்கள். கண்ணியமான ஆணுடன் வாழும் பெண்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்கிறார் சாணக்யா.
நம்பிக்கைக்கு உரியவர்கள்
சாணக்கியரின் கூற்றுப்படி, எந்தவொரு உறவிலும் பரஸ்பர நம்பிக்கை மிகவும் முக்கியமானது. ஒரு பெண் ஒரு ஆணிடம் தன்னுடைய தனிப்பட்ட ரகசியத்தைச் சொன்னால், அவர் அதைத் தனக்குள்ளேயே வைத்திருந்தால், பெண்கள் அத்தகைய நம்பிக்கையுள்ள ஆண்களை விரும்புகிறார்கள். நம்பிக்கைகளை உடைக்காமல், அவர்களின் வார்த்தைகளை மதிக்கும் ஆண்களுடன் வாழும் பெண்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக சாணக்கியர் கூறுகிறார்.
பாதுகாப்பு அளிக்கும் ஆண்
எந்தவொரு பெண்ணும் தன்னைப் பாதுகாப்பாக உணர வைக்கும் ஆண்களை விரும்புகிறார்கள். பெண்கள் ஒருவருடன் பாதுகாப்பாக உணரும்போது அத்தகைய ஆணை முழுதாக நம்புகிறார்கள். பெண்கள் பாதுகாப்பு அளிக்கும் ஆணுடன் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்.



Click it and Unblock the Notifications












