Latest Updates
-
பாபா வாங்கா-நோஸ்ட்ரடாமஸ் கணிப்பு படி மூன்றாம் உலகப்போருக்கு பின் எந்த நாடு சக்திவாய்ந்ததாக இருக்கும் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடைந்த குரு பகவான்: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாரெல்லாம் கவனமா இருக்கணும் தெரியுமா? -
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா?
சாணக்கிய நீதி படி இந்த 5 குணம் உள்ள ஆண்களுடன்தான் பெண்கள் வாழ்வதற்கு விரும்புவார்களாம்... உங்ககிட்ட இருக்கா?
Chanakya Niti: பண்டைய இந்தியாவின் மிகச்சிறந்த ஞானிகளில் ஒருவரான சாணக்கியர் வாழ்க்கையை எளிமையாகவும் மகிழ்ச்சியாகவும் மாற்றுவதற்கான பல வழிகளை தனது சாணக்கிய நீதியில் விவரித்துள்ளார். ஆச்சார்ய சாணக்கியரின் இந்த வார்த்தைகளை நம் வாழ்வில் கடைப்பிடித்தால், பெரிய தடைகளைக்கூட எளிதில் சமாளிக்கலாம். சாணக்கிய நீதியில் மிகப்பெரிய பிரச்சனைகளுக்கான தீர்வுகள் விவரிக்கப்பட்டுள்ளன.

சாணக்கிய நீதியில் பெண்களைப் பற்றி பல விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது, அதில் பெண்களின் மகிழ்ச்சியையும் மனதைக் கவரும் விஷயங்களையும் குறிப்பிடுகிறார். ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான உறவைப் பற்றி சாணக்கிய நீதியில் முக்கியமான விவாதிக்கப்பட்டுள்ளது. பெண்கள் விரும்பும் சில பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்ற ஆண்கள் பின்பற்ற வேண்டிய சில பழக்கங்கள் உள்ளன. அவை என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
நேர்மை
சாணக்கியரின் கூற்றுப்படி, பெண்கள் நேர்மையான ஆண்களுடன் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று நம்புகிறார்கள். ஒரு நேர்மையான நபர் எப்போதும் தனது உறவை பொய் சொல்லி காப்பாற்ற நினைக்க மாட்டார். பெண்கள் எப்போதும் நேர்மையான மற்றும் உண்மையான அன்புடன் இருக்கும் ஆண்களை விரும்புகிறார்கள். ஒரு நேர்மையான மனிதன் தனது உறவில் ஒருபோதும் ஏமாற்ற மாட்டான்.
மரியாதைக் கொடுப்பவர்கள்
ஒவ்வொரு பெண்ணும் தன் கணவர் தன்னை எப்போதும் மதிக்க வேண்டும் என்று விரும்புகிறார். அவர்கள் வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். மற்றவர்கள் மீது அக்கறை கொள்ளும் திறன் கொண்ட ஆண்களுடன் பெண்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். பெண்கள் தங்கள் பிரச்சனைகளைக் கேட்டு தீர்வு காணும் ஆண்களிடம் ஈர்க்கப்படுகிறார்கள். அத்தகைய ஆண்கள் எப்போதும் பெண்களால் நேசிக்கப்படுகிறார்கள்.
கண்ணியமானவர்கள்
சாணக்கிய நீதியில் கூறியுள்ளபடி, பெண்கள் கண்ணியமான ஆண்களை மிக விரைவாக விரும்புகிறார்கள். ஆணவம் இல்லாத, தன்னுடைய தவறுகளைப் பணிவுடன் ஏற்றுக்கொள்ளும் ஆண்களை பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். ஆண்களின் இந்த குணத்தால் உறவில் காதல் நீடிக்கும் என்று பெண்கள் நம்புகிறார்கள். கண்ணியமான ஆணுடன் வாழும் பெண்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்கிறார் சாணக்யா.
நம்பிக்கைக்கு உரியவர்கள்
சாணக்கியரின் கூற்றுப்படி, எந்தவொரு உறவிலும் பரஸ்பர நம்பிக்கை மிகவும் முக்கியமானது. ஒரு பெண் ஒரு ஆணிடம் தன்னுடைய தனிப்பட்ட ரகசியத்தைச் சொன்னால், அவர் அதைத் தனக்குள்ளேயே வைத்திருந்தால், பெண்கள் அத்தகைய நம்பிக்கையுள்ள ஆண்களை விரும்புகிறார்கள். நம்பிக்கைகளை உடைக்காமல், அவர்களின் வார்த்தைகளை மதிக்கும் ஆண்களுடன் வாழும் பெண்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக சாணக்கியர் கூறுகிறார்.
பாதுகாப்பு அளிக்கும் ஆண்
எந்தவொரு பெண்ணும் தன்னைப் பாதுகாப்பாக உணர வைக்கும் ஆண்களை விரும்புகிறார்கள். பெண்கள் ஒருவருடன் பாதுகாப்பாக உணரும்போது அத்தகைய ஆணை முழுதாக நம்புகிறார்கள். பெண்கள் பாதுகாப்பு அளிக்கும் ஆணுடன் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்.



Click it and Unblock the Notifications












