Latest Updates
-
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க..
சாணக்கிய நீதி படி பெண்கள் இந்த 6 ஆபத்தான விஷயங்களிடமிருந்து விலகியிருக்க வேண்டுமாம்... இல்லனா ஆபத்துதான்...!
Chanakya Niti: மனித வாழ்வின் நலனுக்காக பல பயனுள்ள அறிவுரைகளைக் கூறியவர் சாணக்கியர். அவர் தனது அறிவையும் அனுபவத்தையும் சாணக்கிய நீதி என்ற புத்தகமாக மாற்றியுள்ளார். சாணக்கியரின் இந்த புத்தகத்தில் மனித வாழ்க்கை தொடர்பான பல முக்கிய விஷயங்கள் கூறப்பட்டுள்ளன. சாணக்கிய நீதி இன்றைய நவீன உலகத்துக்கும் பொருத்தமானதாக இருக்கிறது.
இந்த கொள்கைகளை வாழ்க்கையில் சரியாக பின்பற்றினால் அவர்கள் பல பிரச்சனைகளை தவிர்க்க முடியும் என்று நம்பப்படுகிறது. சாணக்கிய நீதியில் பெண்களின் மிகவும் ஆபத்தான சில பண்புகளை பற்றி சாணக்கியர் கூறியுள்ளார்.

நல்லொழுக்கமுள்ள பெண் உள்ள வீடு சொர்க்கம் போல இருக்கும் என்று சாணக்கிய நீதியில் கூறப்பட்டுள்ளது. சாணக்கியரின் கூற்றுப்படி, பெண்கள் எப்போதும் விலகி இருக்க வேண்டிய கெட்ட குணங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
அகங்காரம்
ஆணவம் ஒரு நபரின் மோசமான எதிரி. சாணக்கியரின் கூற்றுப்படி, பெண்கள் தற்பெருமையைத் தவிர்க்க வேண்டும். ஒரு அகங்காரம் உள்ள பெண் வசிக்கும் வீட்டிலிருந்து மகிழ்ச்சியும் செழிப்பும் மெல்ல மெல்ல குறையத் தொடங்குகின்றன. அப்படிப்பட்டவர்களின் வீட்டில் லட்சுமி தேவி வாசம் செய்வதில்லை. அதனால்தான் சாணக்கியர் அகங்காரத்தை பெண்களுக்கு மிகவும் ஆபத்தானது என்று விவரித்தார்.
அறிவு குறைபாடு
அறியாமை என்பது பெண்களுக்கான ஆபத்தான குணமாகும். சாணக்கியரின் கூற்றுப்படி, ஒரு பெண் அறிவாளியாக இருப்பது மிகவும் முக்கியம். ஏனெனில் சமூகத்தை கட்டியெழுப்புவதில் பெண்களின் பங்கு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
படித்த, அறிவுள்ள பெண்கள் அவர்கள் குடும்பம் மட்டுமின்றி சமுதாயத்திற்கும் புதிய திசையை கொடுக்கிறார்கள். படித்த, அறிவுள்ள பெண் வீட்டை சொர்க்கமாக மாற்றுகிறார். மறுபுறம், அறியாமை உள்ள பெண்கள் தனக்காகவோ மற்றவர்களுக்காகவோ எதையும் செய்ய முடியாது.
பேராசை
சாணக்கியரின் கூற்றுப்படி, பெண்கள் பேராசையிலிருந்து விலகி இருக்க வேண்டும். இந்த நடத்தை ஒரு பெண்ணின் குடும்பத்தை அழிக்கிறது. சாணக்கியரின் கூற்றுப்படி, ஒரு பெண் பேராசை கொண்டால், அவர் வீட்டின் மகிழ்ச்சியையும், அமைதியையும் அழிக்கத் தொடங்குகிறார். பேராசை குடும்பத்தில் நிலையற்ற தன்மை மற்றும் அமைதியின்மையை ஏற்படுத்துகிறது.
பொய்
சாணக்கியரின் கூற்றுப்படி, பெரும்பாலான பெண்கள் பொய் சொல்லும் போக்கைக் கொண்டுள்ளனர். பொய் சொல்வது அல்லது ஏமாற்றுவது மட்டுமல்ல, மற்றவர்களை தவறாகப் பேசுவதும் ஒரு மோசமான பழக்கம்தான். இந்த பழக்கங்கள் விரைவில் உங்கள் வாழ்க்கையை மோசமாக்கும். இந்த பெண்களுக்கு மற்றவர்களிடமிருந்து மரியாதை கிடைப்பதில்லை.
கோபம்
கோபம் ஒரு இயல்பான உணர்வுதான். இருப்பினும், எல்லாவற்றுக்கும் கோபம் கொள்வது சரியல்ல. எனவே இதை மனதில் வைத்து தந்திரமாக செயல்பட வேண்டும். ஏனென்றால் எதிரில் இருப்பவர் சில சமயங்களில் உங்கள் மீது அதிக கோபம் கொள்வதால் அதன் விளைவுகளை நீங்கள் சந்திக்க வேண்டியிருக்கும்.
சுயநலம்
ஒரு பெண் தன் வாழ்க்கையை மட்டும் அல்லாமல் முழு குடும்ப உறுப்பினர்களின் நலனையும் நினைத்து வாழ வேண்டும். ஆனால் இது அனைத்து வீடுகளிலும் நடப்பதில்லை. சில பெண்கள் இந்தப் பொறுப்பை நிறைவேற்றுவது கடினம். சிலர் பணம் மற்றும் உடைமைகளில் அதிக சுயநலவாதிகளாக இருக்கிறார்கள். பெண்களின் இத்தகைய நடத்தை அவர்களையும், அவர்களை சுற்றியுள்ளவர்களையும் பாதிப்படையச் செய்யும்.



Click it and Unblock the Notifications












