Latest Updates
-
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க..
சாணக்கிய நீதி படி இந்த 4 நபர்கள் வாழ்க்கை முழுவதும் வறுமையில்தான் வாழணுமாம்... நீங்க இதுல இருக்கீங்களா?
Chanakya Niti: சாணக்கியர் மௌரிய பேரரசில் புத்திசாலித்தனமும், தந்திரமும் கொண்ட ஒரு முக்கிய நபராக திகழ்ந்தார். வாழ்க்கையில் எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது, எதில் கவனம் செலுத்த வேண்டும், எது முக்கியம் என்பதை சாணக்கியர் நன்கு அறிந்திருந்தார். சாணக்கியர் தனது அனுபவங்களையும், அறிவுரைகளையும் சாணக்கிய நீதி என்ற புத்தகத்தில் தொகுத்துள்ளார்.
சாணக்கிய நீதி எக்காலத்திற்கும் பொருந்தக் கூடியதாக இருக்கிறது. சாணக்கியர் மனிதர்களைப் பற்றியும் அவற்றின் குணாதிசயங்களைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். காலம் கடந்தாலும் சாணக்கிய சாஸ்திரத்தின் முக்கியத்துவம் மாறவில்லை என்பதே உண்மை. சிலர் வாழ்க்கையில் கஷ்டப்பட்டாலும் அவர்களின் செல்வம் நிலைக்காது என்கிறார் சாணக்கியர். அவர்கள் யாரென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

சிந்திக்காமல் செலவு செய்பவர்கள்
தங்களிடம் இருக்கும் செல்வத்தை சிந்திக்காமல் செலவு செய்பவர்களே ஏராளம். இதில் வேடிக்கை என்னவென்றால் செல்வத்தை செலவழிக்கும் இவர்கள்தான் அதிக செல்வத்தை அடைய ஆசைப்படுகிறார்கள்.
எனவே இப்படிப்பட்டவர்கள் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் செல்வம் பெறவோ, வாழ்க்கையில் முன்னேறவோ முடியாது என்பது சாணக்கியர் கருத்து. ஒருவர் பணத்தை எப்படி செலவு செய்கிறார் என்பதை பொறுத்துதான் அவர் பணக்காரரா இல்லையா என்பதை தீர்மானிக்கிறது.
பணத்தை முதலீடு செய்வது
பணத்தை முதலீடு செய்யும்போது கவனமில்லாமல் இருப்பது அதிக சவால்களுக்கு வழிவகுக்கிறது. பெரும்பாலும் ஒருவர் சிந்திக்காமல் பணத்தை முதலீடு செய்கிறார்கள், அது அவர்களுக்கு பெரிய நஷ்டத்தை ஏற்படுத்துகிறது.
மேலும், பாதுகாப்பற்ற விஷயங்களில் பணத்தைச் செலவிடுவதும், பாதுகாப்பற்ற முதலீடுகளைச் செய்வதும் வாழ்க்கையில் பல சிரமங்களை ஏற்படுத்தும். இதுபோன்ற விஷயங்கள் உங்களை ஒருபோதும் பணக்காரர்களாக மாற்றாது.
தவறான வழியில் சம்பாதிப்பது
தவறான வழியில் சம்பாதிப்பவர் சம்பாதித்த பணத்தை ஒருபோதும் சுதந்திரமாக பயன்படுத்த முடியாது. அவர்கள் நேர்மையற்ற வழிகளில் சம்பாதிப்பதால், எப்போதும் பயத்துடனேயே வாழ வேண்டியிருக்கும். அதுமட்டுமல்ல, வாழ்க்கையில் அடிக்கடி எதிர்பாராத சவால்கள் வரும்.
இதையெல்லாம் மக்கள் சீக்கிரம் பணக்காரர் ஆக வேண்டும் என்பதற்காகவே செய்கிறார்கள். ஆனால் இது அவர்களை பணக்காரர்களாக மாற்றாது என்பதை அவர்கள் மறந்து விடாதீர்கள்.
மோசமான நண்பர்கள்
கெட்ட நண்பர்களை உள்ளவர்களும் வாழ்க்கையில் எப்போதும் வறுமையில் வாட வேண்டியிருக்கும். அவர்கள் எவ்வளவு முயற்சித்தாலும் வாழ்க்கையில் பணம் சம்பாதிக்க முடியாது. அதுமட்டுமின்றி அவர்கள் வாழ்வில் மகிழ்ச்சியும், நிம்மதியும் இருக்காது.
அவர்கள் வாழ்க்கை எப்போதும் இருளிலேயே இருக்கும். அவர்களின் வாழ்க்கையில் எப்போதும் எதிர்மறை ஆற்றல் நிறைந்திருக்கும். அவர்களால் ஒருபோதும் பணம் சம்பாதிக்க முடியாது என்பது மட்டுமல்ல, அவர்கள் பணக்கஷ்டத்தில் படாதபாடுபடுவார்கள்.



Click it and Unblock the Notifications
