Latest Updates
-
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க
சாணக்கிய நீதி படி இந்த 3 வகை மனிதர்கள் விஷத்தை விட ஆபத்தானவர்களாம்... இவங்கள எப்பவும் நம்பிராதீங்க...!
Chanakya Niti: சாணக்கியர் இந்தியாவை சேர்ந்த சிறந்த பொருளாதார நிபுணர் மற்றும் இராஜதந்திரியாவார். சாணக்கியரின் தந்திரம் மற்றும் புத்திக்கூர்மையால் மௌரியப் பேரரசு மிகவும் செல்வச் செழிப்புடன் இருந்தது. சாணக்கியரின் யுக்திகளும், தந்திரமுமே சந்திர குப்த மௌரியரை மகதத்தின் ஆட்சியாளராக மாற்றியது.
அரசியல் மட்டுமின்றி சமூகத்தின் அனைத்து அம்சங்களைப் பற்றியும் சாணக்கியருக்கு மிகத் தெளிவான புரிதல் இருந்தது. சாணக்கியர் பொருளாதாரம், அரசியல் மற்றும் இராஜதந்திரம் ஆகிய அனைத்து துறைகளைப் பற்றியும் சாணக்கியருக்கு தெளிவான புரிதல் இருந்தது. மனிதகுலம் பல நெருக்கடிகளையும், பிரச்சனைகளையும் சந்தித்து வரும் இந்த நேரத்தில், சாணக்கியரின் அறிவுரைகளும், சிந்தனைகளும் அவர்களுக்கு வாழ்க்கைப் பிரச்சனைகளில் இருந்து வெளிவர பயனுள்ளதாக இருக்கும்.

எதிரிகளை விட ஆபத்தானவர்கள்
நம் எதிரிகளை விடவும், விஷத்தை விடவும் ஆபத்தானதுமான சிலர் நம்மைச் சுற்றி இருக்கிறார்கள் என்கிறார் சாணக்கியர். நம் வாழ்வில் அவர்களின் இருப்பு அல்லது செல்வாக்கு இருந்தால், நம் வாழ்க்கையில் மகிழ்ச்சி, அமைதி அல்லது வெற்றி இருக்காது. எனவே நம்மைச் சுற்றியுள்ளவர்கள் யார் அவர்களின் உண்மையான குணம் என்னவென்பதை அடையாளம் கண்டு அவர்களிடமிருந்து விலகி இருக்க வேண்டும். அவர்கள் யாரென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
சுயநலம் மற்றும் பேராசைக் கொண்டவர்கள்
சாணக்கிய நீதி படி சுயநலம் மற்றும் பேராசை உள்ளவர்களிடமிருந்து விலகி இருப்பது ஒருவரின் மகிழ்ச்சி மற்றும் அமைதிக்கு நல்லது. நீங்கள் எவ்வளவு பெரிய நெருக்கடிகளைச் சந்தித்தாலும், உங்கள் வாழ்க்கையில் எத்தனை சவால்கள் வந்தாலும், அப்படிப்பட்டவர்களிடம் ஆலோசனையோ ஆதரவையோ கேட்கக் கூடாது என்கிறார் சாணக்கியர்.
பேராசை மற்றும் பொறாமை காரணமாக அவர்கள் நேராக அறிவுரை கூற மாட்டார்கள். உண்மையில், பொறாமை கொண்டவர்களுக்கு சரி, தவறு ஆகியவற்றை வேறுபடுத்திப் பார்க்கும் திறன் இல்லை. மற்றவர்களின் வெற்றியில் அல்லது முன்னேற்றத்தில் அவர்களால் மகிழ்ச்சி அடைய முடியாது. எனவே அதனை அழிக்க முயலுவார்கள்.
முரடர்கள் மற்றும் அற்பத்தனமானவர்கள்
திமிர்பிடித்த, முரட்டுத்தனமான மற்றும் பாராட்டாத நபர்களுடன் பழகுவதும், அவர்களிடம் ஆலோசனை கேட்பதும் ஒருபோதும் நமக்கு பயனளிக்காது. அவர்களை ஒருபோதும் கண்மூடித்தனமாக நம்பாதீர்கள். அவர்கள் உங்களுக்கு நல்லது நடப்பதை விரும்புவதில்லை, அதுமட்டுமின்றி அவர்கள் உங்களுக்கு கெடுதலை ஏற்படுத்தத் தொடங்குவார்கள்.
எதிரிகள் முன்னால் இருந்து தாக்கினால், இப்படிப்பட்டவர்கள் சுயநலவாதிகள் பின்னால் இருந்து தாக்குகிறார்கள். எதிரிகளின் நடவடிக்கைகளை கணித்து விடலாம், இவர்களின் தாக்குதல் எதிர்பாராததாக இருக்கும். இவர்கள் நம்பிக்கைக்கு உரியவர்கள் அல்ல. அ
முன்கோபக்காரர்கள்
கோபமும், வெறுப்பும் உள்ளவர்கள் ஒருபோதும் உங்களுக்கு எந்த நண்மைகளையும் தர முடியாது. கோபம் ஒரு மனிதனின் மிகப்பெரிய எதிரி என்று கூறப்படுகிறது. ஏனெனில் கோபமும், தவறான எண்ணமும் மற்றவர்களை உங்களை வெறுக்க வைக்கும்.
முன்கோபம் விஷயங்களை மேலோட்டமாகப் பார்க்கவும் பகுத்தறிவு முடிவுகளை எடுக்கவும் அனுமதிக்காது. கோபத்தின் காரணமாக, மக்கள் சரி மற்றும் தவறுகளை வேறுபடுத்திப் பார்க்க முடியாது, மேலும் இப்படிப்பட்டவர்கள் அவர்களின் சொந்த நலனில் மட்டுமே கவனம் செலுத்துவார்கள்.



Click it and Unblock the Notifications
