Latest Updates
-
இன்றைய ராசிபலன் 09 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம்...! -
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்... -
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்..
சாணக்கிய நீதி படி இந்த 5 தந்திரங்கள் மூலம் எவ்வளவு வலிமையான எதிரியையும் வீழ்த்தி விடலாம்...!
Chanakya Niti: இப்போதைய போட்டி நிறைந்த உலகில் நாம் அனைவருமே வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான உத்திகளை நாம் அனைவரும் தேடுகிறோம். தந்திரங்கள், தலைமைத்துவ குணங்கள் மற்றும் அதிகாரம் அனைத்தும் வெற்றிக்கான படிக்கட்டுகளாகும். இந்தியாவின் தலைசிறந்த அறிஞர்களில் ஒருவரான சாணக்கியர் இந்த விஷயங்களைப் பற்றிய தெளிவான விதிகளை தனது சாணக்கிய நீதியில் எழுதியுள்ளார்.
இந்த விதிகள் மனித இயல்புகளின் சிக்கலான தன்மைகளைக் கடந்து எங்கும் வெற்றி பெறுவதற்கான விதிகளாகும். வேலையில் மற்றவர்களை விஞ்சவும், அனைவரையும் வெற்றிபெறச் செய்யவும் சாணக்கியர் பரிந்துரைக்கும் விதிகள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மௌனம் எனும் பேராயுதம்
சாணக்கியர் கூறும் முதல் அறிவுரை, மௌனத்தின் வலிமையை உணர்வதாகும். மௌனத்தின் ஒரு சூழ்நிலையைக் கட்டுப்படுத்த உதவும் மற்றும் மற்றவர்களை மிஞ்சவும் பயன்படும். அமைதியாக இருப்பது மற்றவர்களிடம் ஆர்வத்தை ஏற்படுத்தும். மௌனமாக இருப்பவர்களுக்கு உள்ளே என்ன இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்வது கடினம்.
சரியான நேரம் வரும்போது மட்டுமே நம் எண்ணத்தையும், வலிமையையும் வெளிப்படுத்த வேண்டும். அப்போதுதான் அது மற்றவர்களை விட மேலோங்கும். எப்போதும் மற்றவர்களின் கருத்துக்களை கேட்க வேண்டும். கருத்துக்களைப் பகிரும் முன் மற்றவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்ள வேண்டும். தேவையற்ற பேச்சுக்களில் ஈடுபடக்கூடாது.
கடின உழைப்பு மட்டுமின்றி உத்திகளும் தேவை
வெற்றிக்கு கடின உழைப்பும், உத்தியும் தேவை என்பதை சாணக்கியர் வலியுறுத்துகிறார். சரியான உத்திகள் இல்லையென்றால் கடின உழைப்பும் வீணாகிவிடும். வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தந்திரமான சிந்தனை மூலம் அங்கீகாரம் விரைவாக அடையப்படுகிறது. தேவையில்லாத விஷயங்களில் நேரத்தை வீணடிக்காமல் என்ன செய்ய வேண்டும், எப்போது செய்ய வேண்டும் என்பது பற்றிய தெளிவான புரிதலைப் பெறுவீர்கள்.
யாரையும் நம்பக்கூடாது
சாணக்கியரின் மற்றொரு முக்கியமான அறிவுரை. யாரையும் அவ்வளவு எளிதில் நம்பி விடக்கூடாது. பணியிடத்தில் உங்கள் நம்பிக்கையைப் பயன்படுத்தி ஏமாற்றி சுரண்டுபவர்கள் இருப்பார்கள். உறவுகளை உருவாக்கும் போது அதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேலதிகாரிகள் உட்பட ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கென ஒரு குணம் இருக்கும். குழுவின் பலமும் நம்பிக்கையும் தேவை ஆனால் அவர்கள் தங்களை பலிகடாவாக்குகிறார்களா என்பதை எப்போதும் சரிபார்க்க வேண்டும். மற்றவர்களின் நோக்கங்களை புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.
எதிரியை அடையாளம் காண வேண்டும்
உங்களின் பலத்தைப் போலவே உங்கள் எதிரியின் பலத்தையும் முழுமையாக அறிந்து கொண்டால் எவ்வளவு பெரிய போரையும் வென்றுவிடலாம் என்கிறார் சாணக்கியர். தன்னைப் புரிந்துகொள்வதன் அவசியத்தையும், தன்னைச் சுற்றியுள்ளவர்களைப் புரிந்துகொள்ள வேண்டியதன் அவசியத்தையும் இது விளக்குகிறது.
ஒருவரின் சொந்த பலம் மற்றும் பலவீனங்களைப் புரிந்துகொள்வதன் மூலம் சிறந்த முடிவுகளை எடுக்க முடியும். அதேபோல உங்களைச் சுற்றியுள்ளவர்களின் இலக்குகள், உத்திகள் மற்றும் பலவீனங்களைப் புரிந்துகொள்வதும் முக்கியம். உங்கள் சொந்த திறன்களையும் அறிவையும் எப்போதும் மதிப்பீடு செய்யுங்கள். அதை மேலும் சிறப்பாக மாற்ற பாடுபட வேண்டும்.
சரியான நேரத்திற்காக காத்திருக்க வேண்டும்
சாணக்கியர் முடிவெடுக்கும் போது நேரத்தின் முக்கியத்துவம் பற்றியும் விளக்கியுள்ளார். எப்போது பேச வேண்டும், எப்போது செயல்பட வேண்டும், எப்போது பின்வாங்க வேண்டும், எப்போது எதிர்த்துப் போராட வேண்டும் என்பதை அறிவது நல்லது. சரியான நேரத்தில் சரியானதைச் செய்பவர்களுக்கு வெற்றி நிச்சயம். அவசரப்பட்டு செய்யும் காரியங்கள் தோல்விக்கு மட்டுமே வழிவகுக்கும். அதேபோல அதிக நேரம் காத்திருந்தால் வாய்ப்புகளை இழக்க நேரிடும். எனவே சரியான நேரத்தில் கச்சிதமாக செயல்பட வேண்டும்.



Click it and Unblock the Notifications












