Latest Updates
-
தேங்காய் சேர்க்காமலேயே சூப்பரா தேங்காய் சட்னி செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 20 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
12 ஆண்டுக்கு பின் குருபகவான் கடக ராசிக்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
வல்லாரை கீரையை இந்த மாதிரி சட்னி செஞ்சு பாருங்க - புத்தியும், ஆரோக்கியமும் அதிகமாகும் -
வாஸ்து படி இந்த 5 செடிகள் உங்கள் வீட்டில் இருந்தால் துரதிர்ஷ்டம் உங்கள் வீட்டை விட்டு எப்பவும் போகாதாம் -
முருங்கைக்காய் வாங்குனா இந்த வித்தியாசமான பொரிச்ச குழம்பு செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
மாங்காய் Vs. மாம்பழம்: இந்த இரண்டில் எது உண்மையில் ஆரோக்கியமானது தெரியுமா? உங்களுக்கு பிடிச்சது எது? -
சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சிக்கன் வாங்குனா இந்த தேங்காய் கொத்தமல்லி சிக்கன் வறுவலை செய்யுங்க - சூப்பரா இருக்கும் -
2050-ல் உலகை ஆளப்போகும் டாப் 10 நாடுகள்: இந்தியா 2050-ல் எந்த நிலையில் இருக்கும் இருக்கப்போகுது தெரியுமா?
சாணக்கிய நீதி படி இந்த 5 தந்திரங்கள் மூலம் எவ்வளவு வலிமையான எதிரியையும் வீழ்த்தி விடலாம்...!
Chanakya Niti: இப்போதைய போட்டி நிறைந்த உலகில் நாம் அனைவருமே வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான உத்திகளை நாம் அனைவரும் தேடுகிறோம். தந்திரங்கள், தலைமைத்துவ குணங்கள் மற்றும் அதிகாரம் அனைத்தும் வெற்றிக்கான படிக்கட்டுகளாகும். இந்தியாவின் தலைசிறந்த அறிஞர்களில் ஒருவரான சாணக்கியர் இந்த விஷயங்களைப் பற்றிய தெளிவான விதிகளை தனது சாணக்கிய நீதியில் எழுதியுள்ளார்.
இந்த விதிகள் மனித இயல்புகளின் சிக்கலான தன்மைகளைக் கடந்து எங்கும் வெற்றி பெறுவதற்கான விதிகளாகும். வேலையில் மற்றவர்களை விஞ்சவும், அனைவரையும் வெற்றிபெறச் செய்யவும் சாணக்கியர் பரிந்துரைக்கும் விதிகள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மௌனம் எனும் பேராயுதம்
சாணக்கியர் கூறும் முதல் அறிவுரை, மௌனத்தின் வலிமையை உணர்வதாகும். மௌனத்தின் ஒரு சூழ்நிலையைக் கட்டுப்படுத்த உதவும் மற்றும் மற்றவர்களை மிஞ்சவும் பயன்படும். அமைதியாக இருப்பது மற்றவர்களிடம் ஆர்வத்தை ஏற்படுத்தும். மௌனமாக இருப்பவர்களுக்கு உள்ளே என்ன இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்வது கடினம்.
சரியான நேரம் வரும்போது மட்டுமே நம் எண்ணத்தையும், வலிமையையும் வெளிப்படுத்த வேண்டும். அப்போதுதான் அது மற்றவர்களை விட மேலோங்கும். எப்போதும் மற்றவர்களின் கருத்துக்களை கேட்க வேண்டும். கருத்துக்களைப் பகிரும் முன் மற்றவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்ள வேண்டும். தேவையற்ற பேச்சுக்களில் ஈடுபடக்கூடாது.
கடின உழைப்பு மட்டுமின்றி உத்திகளும் தேவை
வெற்றிக்கு கடின உழைப்பும், உத்தியும் தேவை என்பதை சாணக்கியர் வலியுறுத்துகிறார். சரியான உத்திகள் இல்லையென்றால் கடின உழைப்பும் வீணாகிவிடும். வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தந்திரமான சிந்தனை மூலம் அங்கீகாரம் விரைவாக அடையப்படுகிறது. தேவையில்லாத விஷயங்களில் நேரத்தை வீணடிக்காமல் என்ன செய்ய வேண்டும், எப்போது செய்ய வேண்டும் என்பது பற்றிய தெளிவான புரிதலைப் பெறுவீர்கள்.
யாரையும் நம்பக்கூடாது
சாணக்கியரின் மற்றொரு முக்கியமான அறிவுரை. யாரையும் அவ்வளவு எளிதில் நம்பி விடக்கூடாது. பணியிடத்தில் உங்கள் நம்பிக்கையைப் பயன்படுத்தி ஏமாற்றி சுரண்டுபவர்கள் இருப்பார்கள். உறவுகளை உருவாக்கும் போது அதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேலதிகாரிகள் உட்பட ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கென ஒரு குணம் இருக்கும். குழுவின் பலமும் நம்பிக்கையும் தேவை ஆனால் அவர்கள் தங்களை பலிகடாவாக்குகிறார்களா என்பதை எப்போதும் சரிபார்க்க வேண்டும். மற்றவர்களின் நோக்கங்களை புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.
எதிரியை அடையாளம் காண வேண்டும்
உங்களின் பலத்தைப் போலவே உங்கள் எதிரியின் பலத்தையும் முழுமையாக அறிந்து கொண்டால் எவ்வளவு பெரிய போரையும் வென்றுவிடலாம் என்கிறார் சாணக்கியர். தன்னைப் புரிந்துகொள்வதன் அவசியத்தையும், தன்னைச் சுற்றியுள்ளவர்களைப் புரிந்துகொள்ள வேண்டியதன் அவசியத்தையும் இது விளக்குகிறது.
ஒருவரின் சொந்த பலம் மற்றும் பலவீனங்களைப் புரிந்துகொள்வதன் மூலம் சிறந்த முடிவுகளை எடுக்க முடியும். அதேபோல உங்களைச் சுற்றியுள்ளவர்களின் இலக்குகள், உத்திகள் மற்றும் பலவீனங்களைப் புரிந்துகொள்வதும் முக்கியம். உங்கள் சொந்த திறன்களையும் அறிவையும் எப்போதும் மதிப்பீடு செய்யுங்கள். அதை மேலும் சிறப்பாக மாற்ற பாடுபட வேண்டும்.
சரியான நேரத்திற்காக காத்திருக்க வேண்டும்
சாணக்கியர் முடிவெடுக்கும் போது நேரத்தின் முக்கியத்துவம் பற்றியும் விளக்கியுள்ளார். எப்போது பேச வேண்டும், எப்போது செயல்பட வேண்டும், எப்போது பின்வாங்க வேண்டும், எப்போது எதிர்த்துப் போராட வேண்டும் என்பதை அறிவது நல்லது. சரியான நேரத்தில் சரியானதைச் செய்பவர்களுக்கு வெற்றி நிச்சயம். அவசரப்பட்டு செய்யும் காரியங்கள் தோல்விக்கு மட்டுமே வழிவகுக்கும். அதேபோல அதிக நேரம் காத்திருந்தால் வாய்ப்புகளை இழக்க நேரிடும். எனவே சரியான நேரத்தில் கச்சிதமாக செயல்பட வேண்டும்.



Click it and Unblock the Notifications












