Latest Updates
-
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை
சாணக்கிய நீதி படி இந்த 3 நபர்களை உங்க வாழ்க்கையில் உயிரே போனாலும் பிரியக்கூடாதாம்... அவங்க யார் தெரியுமா?
Chanakya Niti: ஆச்சார்யா சாணக்கியர், வாழ்க்கை மற்றும் சுய மேலாண்மை என்று வரும்போது பயனுள்ள ஆலோசனைகளை வழங்குகிறார். சாணக்கிய நீதியில் கூறியுள்ள படி, நம் வாழ்க்கையிலிருந்து ஒருபோதும் மூன்று நபர்களை கைவிடக்கூடாது என்று கூறியுள்ளார். அந்த மூன்று நபர்கள் யார்? அவர்கள் நம் வாழ்வில் எவ்வாறு முக்கியத்துவம் பெறுகிறார்கள்? என்பதையும் தனது சாணக்கிய நீதியில் விளக்கியுள்ளார்.

இரண்டு பேர் ஒன்றாக இருக்கும்போது அவர்கள் தங்கள் சுமைகளையும் மகிழ்ச்சியின் தருணங்களையும் பகிர்ந்து கொள்கிறார்கள். துக்கத்தை பகிர்ந்து கொள்வதால் அது குறைகிறது. மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வதன் மூலம், அது இரட்டிப்பாகிறது. மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது எப்போதும் நல்ல நிகழ்வுகளை அனுபவிப்பது மட்டுமே அல்ல. துன்பங்களின் போது நீங்கள் உங்களை எவ்வாறு நிர்வகிக்கிறீர்கள் என்பதும்தான்.
நாம் தனிமையில் போராடும் போது, விரக்தியிலிருந்து நம்மை மீட்டெடுக்கவும், வாழ்க்கையில் சமநிலையை மீட்டெடுக்கவும், வாழ்க்கையைப் புத்திசாலித்தனமாக நகர்த்தவும் சிலர் கைகொடுக்கிறார்கள். அவர்களை உங்கள் வாழ்க்கையிலிருந்து ஒருபோதும் நீக்கக் கூடாது. சாணக்கியர் சொல்லும் அந்த மூன்று நபர்கள் யாரென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
உயிர் நண்பன்
ஒரு மனிதன் அவரின் நண்பர்களை வைத்தே சமூகத்தால் எடைபோடப்படுகிறார். உங்களிடம் ஒரு நல்ல குணமுள்ள நண்பர் இருந்தால், அவர் தானாகவே நீங்கள் செல்ல வேண்டிய திசையை உங்களுக்குக் காண்பிப்பார், மேலும் உங்கள் சமூக அந்தஸ்தையும் உயர்த்துவார். ஒரு நல்ல நண்பர் மனசாட்சி போன்றவர், அவர் உங்கள் வாழ்க்கையில் எப்போதும் சரியான பாதையில் உங்களை வழிநடத்துவார். அவர்கள் உங்கள் தன்னலமற்ற நலம் விரும்பிகள். வாழ்க்கையில் வலி மற்றும் தோல்வியின் போது உங்களை அதிலிருந்து வெளியே கொண்டு வருவார்.
நமக்கு மிகவும் நெருக்கமான மற்றும் நமக்கு நன்மைகளை மட்டுமே செய்யக்கூடிய நண்பர்களை ஒருபோதும் பிரியக்கூடாது. மற்றவர்கள் வரலாம் மற்றும் போகலாம் ஆனால் இந்த நபர்கள் உங்கள் வாழ்க்கையில் எப்போதும் நிலைத்திருப்பார்கள். அவர்கள் வெறும் நண்பர்கள் அல்ல கடவுள் உங்களுக்காக அனுப்பிய வெகுமதிகள்.
புத்திசாலி மனைவி
விசுவாசமான மனைவியே கடவுள் நமக்கு கொடுக்கும் மிகசிறந்த ஆசீர்வாதம் என்று கூறப்படுகிறது. ஆனால் உண்மையில், மனிதாபிமான அணுகுமுறையும், பண்பாட்டு மனப்பான்மையும், நடைமுறை உணர்வுகளும் கொண்ட மனைவி கடவுளைப் போன்றவர் என்கிறார் சாணக்கியர். ஏனென்றால், கடினமான சூழ்நிலையில், தன் காதுகளையும், உதவும் கரங்களையும் கொடுக்க அவர் தயாராக இருப்பார்.
அவர்களின் ஆதரவான செயல்கள் எந்தச் சூழலையும் எதிர்கொள்ளும் தைரியத்தை உங்களுக்குத் தரும். அவர் உங்கள் வாழ்க்கையில் இல்லாவிட்டாலும், வாழ்க்கை எப்படியும் ஒரு முழுமையானதாக மாறாது. உங்கள் வாழ்க்கையில் யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதற்கான சாதக, பாதகங்கள் உண்டு. ஆனால் ஆதரவான மனைவி உங்கள் வாழ்க்கையில் இல்லாவிட்டால் பாதகம் மட்டுமே ஏற்படும்.
மகன்
நம் கஷ்டத்தின் போது நமக்கு துணையாக நிற்கும் குழந்தைகள் நமது அதிர்ஷ்டம். எனவே அவர்களை நாகரீகமான, நல்லொழுக்கமுள்ள மற்றும் பொறுப்புள்ள நபர்களாக மாற்றுவதில் நாம் கவனமாக இருக்க வேண்டும். ஒவ்வொரு பெற்றோரும் தன் குழந்தை தனக்கு நல்ல பெயரை பெற்றுத் தர வேண்டும், குடும்பத்தின் நற்பெயரைக் காப்பாற்ற வேண்டும் என்று விரும்புகிறார்கள். குழந்தைப் பருவம் மற்றும் இளமைப் பருவத்தில் அவர்களை நல்ல முறையில் வளர்ப்பதில் கவனமாக இருக்க வேண்டும், அவர்கள் உங்கள் வாழ்நாள் முழுவதும் நீங்கள் பொக்கிஷமாகப் போற்றும் ஒருவராக வளர்வார்கள்.
இந்த நன்கு வளர்க்கப்பட்ட குழந்தைகள் உங்கள் வயதான காலங்களில் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் தருவார்கள். அவர்கள் கெட்ட விஷயங்களிடம் சிக்கிக் கொள்ள மாட்டார்கள் என்று நீங்கள் நம்பலாம். அப்படிப்பட்ட குழந்தைகள் தங்கள் பெற்றோர்களால் துக்கப்படுவதற்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். அத்தகைய குழந்தைகளைக் கொண்ட பெற்றோர்கள் தங்கள் கடினமான காலங்களில் தனியாக இருக்க மாட்டார்கள்.



Click it and Unblock the Notifications
