Latest Updates
-
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...!
சாணக்கிய நீதி படி உங்களின் இந்த 6 விஷயங்களை யாரிடமாவது சொன்னா உங்க எதிர்காலம் கேள்விக்குறிதான்...!
Chanakya Niti: சாணக்கியர் தனது நீதி சாஸ்திரத்தில் வாழ்க்கை தொடர்பான பல அம்சங்களை விவரித்துள்ளார். அதில் மகிழ்ச்சி, துக்கம், தொழில், வியாபாரம், பணம், நண்பர்கள், எதிரிகள், குடும்பத்தினர் என பல கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.
சாணக்கியரின் கொள்கைகளைப் பின்பற்றுவது கடினம் என்று கூறப்படுகிறது. ஆனால் அவற்றை ஏற்றுக்கொள்பவர் வாழ்க்கையில் தோல்வி என்பதே கிடையாது. ஒருவர் தனது சில ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளக்கூடாது என்று சாணக்கியர் கூறியுள்ளார்.

சில விஷயங்களை எப்போதும் உங்களுக்குள்ளேயே வைத்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் நீங்கள் கடுமையான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்கிறார் சாணக்கியர். சாணக்கிய நீதியின்படி பிறரிடம் கூறக்கூடாத விஷயங்கள் என்னென்னெ என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
பண விஷயங்கள்
பணம் தொடர்பான எந்த ஒரு தகவலையும் யாரிடமும் பகிர்ந்து கொள்ளக் கூடாது என்று சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் கூறியுள்ளார். செல்வந்தர் சமூகத்தில் செல்வாக்கு மிக்கவராகக் கருதப்படுகிறார். அத்தகைய சூழ்நிலையில் மக்கள் தங்களின் பணப் பற்றாக்குறையால் அந்த நபரை மதிக்காமல் விடுகிறார்கள்.
அப்படிப்பட்டவருக்கு யாரும் உதவ மாட்டார்கள். வாழ்க்கையில் பல நேரங்களில் ஒருவர் நிதி இழப்பை சந்திக்க நேரிடும் மற்றும் கடன் வாங்க வேண்டியிருக்கும். அப்படி பிரச்சனை வந்தால் யாரிடமும் சொல்லக்கூடாது. உங்கள் பணம் குறைவதைக் கண்டு மக்கள் உங்களை விட்டு விலகுவார்கள்.
சோகம் மற்றும் தனிப்பட்ட ரகசியங்கள்
சாணக்கியரின் கூற்றுப்படி, உங்களுக்கு ஏதேனும் சோகம் ஏற்பட்டால், அதை உங்கள் மனதில் வைத்திருக்க வேண்டும். நம் துக்கத்தின் ரகசியங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொண்டால், நாம் கேலி செய்யப்படுவோம்.
நாம் ஒருவருடன் நமது துக்கங்களைப் பகிர்ந்து கொண்டால், எதிர்காலத்தில் அவர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டால், அவர்கள் நமது துக்கங்களையும் ரகசியங்களையும் மற்றவர்களிடம் பகிரங்கப்படுத்த வாய்ப்புள்ளது.
இல்லறம் தொடர்பான விஷயங்கள்
கணவன்-மனைவி இடையே உள்ள விவகாரங்களை யாரிடமும் சொல்ல வேண்டாம். இந்த விஷயங்களை உங்கள் நெருங்கிய நண்பரிடம் கூட சொல்லாதீர்கள். இல்லையெனில் நீங்கள் சிக்கலில் மாட்டி கொள்ளக்கூடும்.
இது உங்களுக்கு அவமானத்தைத் தரும் மற்றும் உங்கள் திருமண வாழ்க்கையில் விரிசலை ஏற்படுத்தும். எந்தவொரு நபரும் தனது வாழ்க்கைத் துணையின் இயல்பு மற்றும் குணத்தைப் பற்றி மற்றவர்களிடம் சொல்லக்கூடாது. தன் துணையை மதிக்காதவனுக்கு சமுதாயத்தில் மரியாதைக் கிடைக்காது. அப்படிப்பட்டவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்காது.
அவமானங்கள்
மரியாதை கிடைக்கும் போது தற்பெருமை கொள்ளக்கூடாது என்று சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் கூறியுள்ளார். அதேபோல், பிறர் முன்னிலையில் தனக்கு நேர்ந்த அவமானத்தைப் பற்றியும் பேசக் கூடாது என்றும் கூறுகிறது. இதன் காரணமாக, நீங்கள் உங்கள் சுயமரியாதையை இழக்கிறீர்கள், மற்றவர்கள் உங்களை மதிப்பதை நிறுத்துகிறார்கள்.
ஏமாற்றம்
சாணக்கியரின் கொள்கைகளின்படி, நீங்கள் யாரிடமாவது எந்த விதத்திலாவது ஏமாற்றப்பட்டிருந்தால், தற்செயலாக கூட மற்றவர்களிடம் சொல்லாதீர்கள். இப்படிச் செய்வதால் மற்றவர்கள் உங்களை முட்டாள் என்று நினைத்து கேலி செய்வார்கள். அத்தகைய சூழ்நிலையில் யாராவது உங்களை மீண்டும் ஏமாற்ற முயற்சிக்கலாம்.
திட்டங்கள்
சாணக்கிய நீதியில், ஒரு நபர் தனது எண்ணங்களையும் திட்டங்களையும் யாருடனும் பகிர்ந்து கொள்ளக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. சாணக்கியர் தனது திட்டங்களை எப்போதும் ரகசியமாக வைத்திருக்க வேண்டுமென்று கூறியுள்ளார். ஏனென்றால் மற்றவர்கள் உங்கள் திட்டங்களை அறிந்து அவற்றை உங்களுக்கு எதிராக பயன்படுத்த முயற்சி செய்யலாம்.



Click it and Unblock the Notifications












