Latest Updates
-
இன்றைய ராசிபலன் 22 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம் -
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்..
சாணக்கிய நீதி படி இந்த பழக்கம் இருப்பவர்கள் வாழ்க்கையில் சீக்கிரம் செல்வந்தர் ஆகிருவாங்களாம்...!
துரதிர்ஷ்டவசமாக, நமது சமூகத்தில் ஒருவரின் மரியாதையும், அந்தஸ்தும் அவர்களிடம் இருக்கும் பணத்தைக் கொண்டே அளவிடப்படுகிறது. அனைவரின் வாழ்க்கையிலும் பணம் ஈடு செய்ய முடியாத முக்கிய இடத்தை வகிக்கிறது. உலகையே ஆட்டிப்படைக்கும் பணத்தின் மீது யாருக்குத்தான் ஆசை இருக்காது?
அனைவருமே பணத்துக்காகத்தான் உழைக்கிறோம். சாணக்கிய நீதியில் சாணக்கியர் பணம் குறித்தும் விரைவில் செல்வந்தராக என்ன செய்ய வேண்டுமென்று கூறியுள்ளார். செல்வந்தராக விரும்புபவர்கள் வாழ்க்கையில் விஷயங்களை கடைபிடிக்க வேண்டும்.

இலட்சியம்
நீங்கள் விரைவில் செல்வந்தராக விரும்பினால் உங்களின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் மீது கவனம் செலுத்த வேண்டும் என்று சாணக்கியர் கூறியுள்ளார். இலட்சியம் இல்லாதவர்கள் ஒருபோதும் வாழ்க்கையில் வெற்றி பெறமாட்டார்கள். மேலும் உங்களின் செல்வம் எப்போதும் நேர்மையான வழியில் பெறப்பட்டதாக இருக்க வேண்டும் என்று சாணக்கியர் கூறுகிறார். நேர்மையற்ற வழியில் சம்பாதிக்கும் பணம் விரைவில் உங்களை விட்டு சென்றுவிடும்.
தானம்
சாணக்கிய நீதியின் படி ஏழைகளுக்கு நீங்கள் செய்யும் தானம் உங்களுக்கு கடவுளின் கருணையை அளிப்பதோடு உங்களின் செல்வம் அதிகரிக்கவும் உதவும் மற்றும் உங்கள் வீட்டிற்கு வறுமை வராது. அதேசமயம் அதிகளவு தானமும் நல்லதல்ல. உங்களின் வருமானத்திற்குள் தானம் செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். தானம் செய்பவர்களுக்கு அவர்கள் செய்ததை விட இருமடங்கு செல்வம் கிடைக்கும் என்று சாணக்கியர் கூறுகிறார்.
நண்பர்கள்
செல்வந்தராக விரும்புபவர்கள் வளமான வியாபாரிகள், படித்தவர்கள், போர்வீரர்கள் மற்றும் மருத்துவர்களுடன் நட்பை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று சாணக்கியர் கூறுகிறார். தூய்மையானவர்கள் மற்றும் படித்தவர்கள் அருகில் இருக்கும் போது விரைவில் நம் வாழ்க்கையில் செல்வம் பெருகும் என்று சாணக்கியர் கூறுகிறார்.
எதிர்காலத்தில் கவனம்
செல்வந்தர்கள் மற்றும் வெற்றியாளர்கள் எப்போதும் எதிர்காலத்திற்கான சேமிப்பில் கவனம் செலுத்துவார்கள். எதிர்காலத்திற்காக சேமிக்கும் பழக்கம் எப்போதும் உங்களிடம் இருக்க வேண்டும், ஏனெனில் அதுதான் உங்களை மோசமான தருணங்களில் வறுமையிலிருந்து பாதுகாக்கும். எனவேதான் சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் எப்போதும் சேமிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
சுயமரியாதை
ஒருவர் எந்த சூழ்நிலையிலும் தன்னுடைய சுயமரியாதையை இழக்கக் கூடாதென சாணக்கியர் கூறுகிறார். ஏனெனில் பணம் சம்பாதிப்பதை விட சுயமரியாதையை சம்பாதிப்பது கடினம் என சாணக்கியர் கூறுகிறார். இழந்த பணத்தை மீண்டும் பெற்றுவிடலாம் ஆனால் எவ்வளவு முயன்றாலும் இழந்த சுயமரியாதையை திரும்பப்பெற முடியாது. மேலும் சுயமரியாதை மிக்கவர்கள் ஒருபோதும் பணத்திற்கு அடிமையாக இருக்கமாட்டார்கள் என்று சாணக்கியர் கூறுகிறார்.



Click it and Unblock the Notifications

