Latest Updates
-
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்!
சாணக்கிய நீதி படி இந்த 5 நபர்கள் வாழ்க்கை முழுக்க நிம்மதியே இல்லாமல் அவதிப்படுவார்களாம்...!
Chanakya Niti: ஆச்சார்ய சாணக்கியர் பண்டைய இந்தியாவின் ஒரு சிறந்த அரசியல்வாதி மற்றும் ராஜதந்திரி. மௌரியப் பேரரசின் வளர்ச்சியில் ஆச்சார்ய சாணக்கியர் முக்கிய பங்கு வகித்தார். அவரது கொள்கைகளும், பாடங்களும் எக்காலத்திற்கும் பொருத்தமானவை. சாணக்கியரின் கொள்கைகள் ஒருவரின் வாழ்க்கையில் வெற்றிபெற மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகின்றன. நீங்கள் வாழ்க்கையில் முன்னேற விரும்பினால், சாணக்கியர் பரிந்துரைத்த அறிவுரைகளைப் பின்பற்றலாம்.
அவரின் அறிவுரைகள் ஒருவர் தனது இலக்குகளை அடைய ஊக்கமளிக்கிறது. அதனால்தான் இன்றும் மக்கள் சாணக்கிய நீதியைப் பின்பற்றுகிறார்கள். ஆச்சார்ய சாணக்கியர் தனது நீதி சாஸ்திரத்தில் எப்போதும் மகிழ்ச்சியற்றவர்களாகவே இருக்கும் சிலரைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்கள்.

சாணக்கிய நீதியின்படி, இவர்கள் எப்போதும் கவலையுடனும், சோகத்துடனுமே இருப்பார்கள். அவர்களால் வாழ்க்கையில் ஒருபோதும் முன்னேற முடியாது. அவர்கள் யாரென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
ஒழுக்கமில்லா குழந்தையை பெற்றவர்கள்
ஆச்சார்ய சாணக்கியரின் கூற்றுப்படி, தகுதி மற்றும் ஒழுக்கமில்லாத மகன் அல்லது மகளைக் கொண்ட பெற்றோர் எப்போதும் சோகமாகவும், கலக்கமாகவும் இருப்பார்கள். அவர்கள் எப்போதும்சமூகத்தில் தலை குனிந்து நடக்க வேண்டியிருக்கும். மேலும், அவர்கள் வாழ்நாள் முழுவதும் தங்கள் குழந்தைகளைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டேயிருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் வாழ்க்கையில் ஒருபோதும் முன்னேற முடியாது.
கடன் பிரச்சினை உள்ளவர்கள்
சாணக்கிய நீதியின்படி, கடன் பிரச்சினை உள்ளவர்கள் எப்போதும் அமைதியற்றவர்களாக இருப்பார்கள். அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் எப்போதும் மகிழ்ச்சியற்றவர்களாக இருப்பார்கள். அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் கடனைத் திருப்பிச் செலுத்துவதிலேயே செலவிடுகிறார்கள். கடன் பிரச்சினையில் சிக்கியவர்கள் வாழ்க்கையில் ஒருபோதும் வெற்றிபெற முடியாது.
குடும்பத்தில் மோசமான பெண்கள் உள்ளவர்கள்
சாணக்கிய நீதியின்படி, பெண்களின் நடத்தை நன்றாக இல்லாத வீடுகளில் உள்ளவர்கள் எப்போதும் சோகமாகவும், மனநிம்மதி இல்லாதவர்களாகவும் இருப்பார்கள். அந்த வீட்டில் உள்ளவர்கள் சமூகத்தில் எப்போதும் தலை குனிந்து நடக்க வேண்டியிருக்கும். மேலும் அவர்கள் வாழ்நாள் முழுவதும் அவமானத்தை சந்திப்பார்கள். அத்தகைய வீடுகளில் உள்ளவர்கள் எப்போதும் மகிழ்ச்சியற்றவர்களாகவே இருப்பார்கள்.
பொய் பேசும் மனைவியை பெற்றவர்கள்
பொய் சொல்லும் அல்லது ஏமாற்றும் பெண்களை ஒருவர் திருமணம் செய்யக்கூடாது என்று சாணக்கி ய நீதி கூறுகிறது. தொடர்ந்து பொய் சொல்லும் ஒரு பெண் இதை தன் கணவருக்கு எதிராகவும் பயன்படுத்துவார்கள். அத்தகைய பெண்கள் குடும்பத்தையே அழிக்கத் துணிவார்கள் என்றும் சாணக்கியன் கூறுகிறார். அத்தகைய பெண்ணை திருமணம் செய்த ஆண் ஒருபோதும் மகிழ்ச்சியாக இருக்க மாட்டார்கள்.
துரோகம் செய்யும் மனைவியை பெற்றவர்கள்
தன் குடும்பத்திற்கு துரோகம் செய்யும் பெண்ணை ஒருபோதும் நம்பக்கூடாது. அவர் தன் கணவருக்கு மிகப்பெரிய சாபமாக இருக்கலாம். நீங்கள் அத்தகைய பெண்களை மணந்தால், அவர்கள் தங்கள் எதிர்கால வாழ்க்கையில் கணவரை ஏமாற்றி திருமணத்தை அழித்துவிடுவார்கள். அப்படிப்பட்ட பெண்ணை மணந்த ஆண்கள் எப்போதும் பதட்டத்துடனேயே வாழ வேண்டும். அவர்கள் வாழ்க்கையில் நிம்மதியே இருக்காது.



Click it and Unblock the Notifications
