Latest Updates
-
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்..
சாணக்கிய நீதி படி இந்த 4 குணங்கள் இருக்கும் மகன் அவரின் பெற்றோரை பெருமைப்படுத்துபவர்களாக இருப்பார்களாம்...!
Chanakya Niti: சாணக்கியர் உலகம் பார்த்த இந்தியாவைச் சேர்ந்த சிறந்த தத்துவஞானியாகக் கருதப்படுகிறார். சாணக்கியர் வரலாற்றில் விஷ்ணுகுப்தர், கௌடில்யன் போன்ற பல பெயர்களால் குறிப்பிடப்படுகிறார். வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் ஏற்படக்கூடிய மாற்றங்களைப் பற்றி சாணக்கிய நீதி தெளிவாக விளக்குகிறது. வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பதையும் இது விளக்குகிறது.
சாணக்கிய நீதியின் படி, பெற்றோரின் மகிழ்ச்சி என்றென்றும் நிலைத்திருக்கவும், செல்வம் இரட்டிப்பாகவும் அவர்களுக்கு பிறக்கும் மகனுக்கு சில குணங்கள் இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. ஒரு மகனிடம் வாழ்க்கையை மாற்றும் இந்த குணங்கள் இருந்தால், அது பெற்றோரின் வாழ்க்கையில் மகிழ்ச்சியை அதிகரிக்கும் மற்றும் அவர்களின் வாழ்க்கையில் செழிப்பையும் உண்டாக்கும் என்று சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் குறிப்பிட்டுள்ளார். அவை என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ஞானியாக இருக்க வேண்டும்
சாணக்கிய நீதி படி ஒரு மகனுக்கு இருக்க வேண்டிய அடிப்படையான குணம் ஞானமாகும். ஏனெனில் அது இருந்தால் ஒருவர் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய உயரத்தையும் அடைய முடியும் என்று சாணக்கியர் கூறுகிறார்.
சாணக்கியர் தனது நீதி சாஸ்திரத்தில் ஞானமுடைய ஒரு மகன் நூறு ஞானிகளுக்கு சமம் என்று கூறுகிறார். இந்த குணங்களைக் கொண்ட ஒரு மகன் வாழ்க்கையின் எந்தக் கட்டத்திலும் பெற்றோருக்கு மகிழ்ச்சியையும், ஆறுதலையும் தருவார்கள் என்று சாணக்கியர் தனது நீதி சாஸ்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.
புத்திசாலியாக இருக்க வேண்டும்
ஞானத்தைப் போலவே புத்திசாலித்தனமும் முக்கியம். பெரும்பாலும் உங்களுக்கு புத்திசாலித்தனம் இல்லாத மகன் இருந்தால் அவர்களால் வாழ்க்கையில் எந்த முன்னேற்றமும் மகிழ்ச்சியும் இருக்காது. அதுமட்டுமின்றி, அவர்கள் தங்கள் பெற்றோருக்கு வாழ்நாள் முழுவதும் துன்பத்தை மட்டுமே கொடுப்பார்கள். புத்திசாலித்தனம் ஒருவரின் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு இன்றியமையாதது. புத்திசாலித்தனமான மகன்களைப் பெற்ற பெற்றோர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியையும், அமைதியையும் பெறுவார்கள்.
தவறான பழக்கங்கள் இல்லாதவராக இருக்க வேண்டும்
எந்த கெட்ட பழக்கமும் இல்லாத ஒரு மகன் பொக்கிஷம் போன்றவர், அப்படிப்பட்ட மகனைப் பெற்ற பெற்றோர்கள் அதிர்ஷ்டசாலிகளாக கருதப்படுகிறார்கள். சாணக்கியரும் தனது நீதி சாஸ்திரத்தில் மகனுக்கு கெட்ட பழக்கம் இருந்தால், அவர்கள் வாழ்வதை விட இறப்பதே நல்லது என்று கூறுகிறார். அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் தங்கள் பெற்றோருக்கு துக்கத்தையும், துன்பத்தையும் தருகிறார்கள். எனவே, இப்படிப்பட்ட ஒரு மகனைப் பெற்றெடுப்பது அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் துண்பத்தைக் கொடுக்கும்.
பெரியவர்களை மதிப்பவர்கள்
உங்கள் மகன் தன் பெற்றோர் மற்றும் பெரியவர்களை மதிக்கும் நபராக இருந்தால், அவர்கள் உங்களை மிகவும் நேசிக்கிறார்கள் என்று அர்த்தம். உங்கள் மகனுக்கு உங்கள் மீது மரியாதை இல்லாவிட்டால், அது உங்கள் வாழ்க்கையில் பிரச்சினைகளை உருவாக்கி நிம்மதியைக் கெடுக்கும் என்று சாணக்கிய நீதி கூறுகிறது.



Click it and Unblock the Notifications
