Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
சாணக்கிய நீதி படி உங்க வீட்டில் இந்த அறிகுறிகள் இருந்தால் உங்க வீட்டுக்கு பணக்கஷ்டம் வரப்போகுதுனு அர்த்தமாம்..
சாணக்கியரின் கொள்கைகளும் சிந்தனைகளும் சற்றுக் கடுமையாக இருப்பதாக தோன்றலாம். ஆனால் இந்த கடுமைதான் வாழ்க்கையின் எதார்த்தம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். சாணக்கியரின் அறிவுரைகள் வாழ்க்கையில் எல்லா சோதனைகளையும் சமாளிக்க உதவும். சாணக்கியரின் வார்த்தைகள் மற்றும் கொள்கைகளின் மூலம் யாராக இருந்தாலும் தனது வாழ்க்கையை மேம்படுத்த முடியும்.

ஒருவர் எப்போதும் வாழ்க்கையில் கெட்ட நேரத்தை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று சாணக்கியர் கூறுகிறார். சுற்றி நடக்கும் சில நிகழ்வுகளை உற்று கவனிப்பதன் மூலம், வரவிருக்கும் கெட்ட நேரத்தை அறிந்து கொள்ளலாம் என்று சாணக்கியர் கூறுகிறார். எந்தவொரு நிதி நெருக்கடியின் விளைவுகளையும் சமாளிக்க சரியான முயற்சிகளை எடுப்பது நம் கையில்தான் உள்ளது. நிதி நெருக்கடியின் அறிகுறிகளை தெரிந்து கொண்டு செயல்படுவதன் மூலம், நிதி நெருக்கடியின் தாக்கத்தை குறைத்து, நமது குடும்பங்களுக்கு பாதுகாப்பான எதிர்காலத்தை உறுதிசெய்ய முடியும். சாணக்கியரின் கூற்றுப்படி, வீட்டில் நிதி நெருக்கடி வருவதைக் குறிக்கும் சில அறிகுறிகள் உள்ளன. அவற்றை இந்த பதிவில் பார்க்கலாம்.
துளசி செடி காய்வது
துளசி செடி இந்து மதத்தின் படி புனிதமான தாவரமாக கருதப்படுகிறது மற்றும் பல வீடுகளில் தெய்வமாக வணங்கப்படுகிறது. போதுமான பராமரிப்புக்குப் பிறகும் உங்கள் துளசி செடி வாடத் தொடங்கினால், அது வரவிருக்கும் நிதி நெருக்கடியின் அறிகுறியாகக் கருதப்படலாம் என்று சாணக்கியர் கூறுகிறார். இருப்பினும், சில நேரங்களில் தண்ணீர் பற்றாக்குறை மற்றும் குளிர் காலநிலை காரணமாகவும் செடி காயலாம் எனவே துளசி செடியை நன்கு பராமரிக்கவும்.
வீட்டில் சண்டை
எந்தவித காரணமும் இல்லாமல் உங்கள் வீட்டில் தொடர்ந்து சண்டைகள் மற்றும் வாக்குவாதங்கள் இருந்தால், அது வரவிருக்கும் பணக்கஷ்டத்தின் அறிகுறியாக இருக்கலாம். கிரஹ தோஷம் அல்லது வாஸ்து தோஷம் போன்ற பிரச்சனைகள் கூட இதை ஏற்படுத்தும் என்று சாணக்கியர் கூறுகிறார்.
கண்ணாடி உடைவது
சாணக்கியரின் கூற்றுப்படி, உங்கள் வீட்டில் கண்ணாடி அல்லது கண்ணாடிப் பொருட்கள் மீண்டும் மீண்டும் உடைவது வரவிருக்கும் நிதி இழப்பின் அறிகுறியாக இருக்கலாம். இது உங்கள் வீட்டிற்கு வரப்போகும் வறுமையைக் குறிக்கிறது.
வழிபாடு இல்லாமல் இருப்பது
வழிபாடு இல்லாத இடத்தில் மகிழ்ச்சியும், செழிப்பும் இருக்காது என்று சாணக்கியர் நம்புகிறார். வழிபாடு இல்லாதது வரவிருக்கும் நிதி சிக்கல்களின் அறிகுறி என்று சாணக்கியர் கூறுகிறார்.
பெரியவர்களை மதிக்காமல் இருப்பது
பெரியவர்களுக்கு மரியாதை செலுத்துவது இந்திய கலாச்சாரத்தின் அடிப்படை அம்சங்களில் ஒன்றாகும். பெரியவர்களை அவமரியாதை செய்வது வரவிருக்கும் நிதி நெருக்கடியின் அடையாளம் என்று சாணக்கியர் கூறுகிறார். பெரியவர்களை அவமரியாதை செய்பவர்கள் வாழ்க்கையில் உண்மையான மகிழ்ச்சியைக் காண முடியாது என்று சாணக்கியர் கூறுகிறார்.
நிதி பாதுகாப்பிற்கான சாணக்யாவின் பாதை
பணத்தைத் தண்ணீரைப் போலச் செலவழித்து, கஷ்ட காலத்திற்கு பணத்தைச் சேமிக்காமல் இருப்பவரை முட்டாள் என்கிறார் சாணக்கியர். கடினமான காலங்களுக்காக பணத்தைச் சேமித்து வைப்பவர் ஞானி என்று அழைக்கப்படுகிறார். சாணக்கியரின் கூற்றுப்படி, இலக்கு இல்லாமல் யாரும் பணம் சம்பாதிக்க முடியாது. பணம் சம்பாதிப்பதில், நோக்கம் ஒருவருக்கு பெரிதும் உதவுகிறது. பணத்தைச் சேமிப்பதற்கான சிறந்த வழி, செலவைக் கட்டுப்படுத்துவதுதான்.



Click it and Unblock the Notifications

