Latest Updates
-
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம் -
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்..
சாணக்கிய நீதி படி இந்த 2 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் அனைவராலும் மதிக்கப்படுபவராக இருப்பார்களாம்...!
Chanakya Niti: இந்தியாவின் சிறந்த தத்துவஞானியும் அறிஞருமான சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான வழிகளைப் பற்றி கூறியுள்ளார். மனிதர்கள் அனைவருமே மற்றவர்களால் மதிக்கப்படுபவராகவும், அனைவருக்குமே பிடித்தவர்களாக இருக்க வேண்டுமென்றும் விரும்புகிறார்கள்.
வாழ்க்கையில் வெற்றி பெறுபவர்களுக்கு மட்டுமே இந்த அங்கீகாரங்கள் கிடைக்கும். இது பற்றிய ஞானமும், அறிவுரைகளும் சாணக்கிய நீதியில் விளக்கப்பட்டுள்ளது. சாணக்கியர் வாழ்க்கையில் வெற்றி பெற இரண்டு முக்கிய வழிகளைக் குறிப்பிடுகிறார். ஒன்று பணிவு மற்றொன்று சுய ஒழுக்கம். இந்த குணங்கள் ஒருவர் வாழ்க்கையில் எப்படி வெற்றிபெற உதவுகிறது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பணிவு மற்றும் ஒழுக்கம்
மற்றவர்களின் மரியாதையைப் பெறுவதில் பணிவு மிகவும் முக்கியமான குணமென்று சாணக்கியர் உறுதியாக நம்பினார். ஆணவத்திற்குப் பதிலாக பணிவின் மூலம் மட்டுமே உண்மையான மரியாதையைப் பெற முடியும் என்ற நம்பிக்கையை அவர் மக்களிடம் விதைத்தார்.
மரியாதையைப் பெறுவதற்கு சுய ஒழுக்கமும் ஒரு திறவுகோலென்று அவர் கருதுகிறார். சாணக்கிய நீதியில் சுயக்கட்டுப்பாடு என்பது தனிப்பட்ட வளர்ச்சிக்கும் சமூகத்தில் அந்தஸ்து மற்றும் மதிப்பைப் பெறுவதற்கும் முக்கியமானது என்று சாணக்கியர் கூறுகிறார். ஆசைகள் மற்றும் கோபத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம், ஒருவர் சகாக்கள் மற்றும் தலைவர்களிடமிருந்து மரியாதை மற்றும் பாராட்டைப் பெற முடியும். இந்த இரண்டு குணங்களும் ஒருவருக்கு சமூகத்தில் அன்பு மற்றும் மரியாதையை எப்படிப் பெற உதவுகின்றன என்று மேற்கொண்டு பார்க்கலாம்.
பணிவே ஒருவரின் பலம்
சாணக்கியர் பணிவை ஒருவரின் முக்கியமான நற்பண்புகளில் ஒன்றாக மதிக்கிறார். பணிவான நபர்கள் மற்றவர்களின் அன்பையும், மரியாதையையும் எளிதில் பெறுவார்கள். ஏனெனில் பணிவு ஒருவரின் தற்பெருமையைப் பற்றி பேசுவதற்குப் பதிலாக மற்றவர்களின் கருத்துக்களை கேட்பதிலும், புரிந்துகொள்வதிலும் கவனம் செலுத்த வழிவகுக்கிறது.
சாணக்கியரின் அறிவுரையை பணிவுடன் கடைப்பிடிப்பவர்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் தனிப்பட்ட முன்னேற்றத்தை அனுபவிப்பார்கள். பணிவானவர்களை அனைவரும் மதிப்பதால், அப்படிப்பட்டவர்களிடம் ஒரு சிறப்புப் பற்றுதலை மக்கள் உணர்கிறார்கள். பணிவு என்பது ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் பொக்கிஷமாக இருக்கும் பண்பாகும்.
சுய ஒழுக்கத்தின் முக்கியத்துவம்
சுய ஒழுக்கம் என்பது ஒருவரின் செயல்களையும், உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்தும் திறன். இந்த குணம் ஒருவரை சிறந்த முடிவெடுப்பதற்கு வழிவகுக்கும் என்று சாணக்கியர் நம்புகிறார். இந்த குணம் இலக்குகளில் கவனம் செலுத்தவும் நிலையான முன்னேற்றத்தை உறுதிப்படுத்தவும் உதவுகிறது. சுயஒழுக்கம் என்பது ஒருவருக்கு தனிப்பட்ட ஆதாயங்களை அளிப்பது மட்டுமின்றி, சமூகத்தில் அங்கீகாரத்தையும், மரியாதையையும், பெறுவதற்கு வழிவகுக்கும்.
தன்னடக்கம் உள்ளவர்கள் மற்றவர்களால் மதிக்கப்படுவார்கள் என்று சாணக்கியர் கூறுகிறார். ஆத்திரமூட்டும் சூழ்நிலைகளில் மற்றவர்களிடம் தங்கள் எதிர்வினைகளைக் கட்டுப்படுத்துவதன் மூலம், ஒழுக்கமான நபர்கள் மற்றவர்களின் நம்பிக்கையையும், ஆதரவையும் பெறுகிறார்கள். இவை இரண்டும் தலைமைப் பதவியில் இருப்பவர்களுக்கு அவசியம் இருக்க வேண்டிய குணங்களாகும்.



Click it and Unblock the Notifications
