Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
சாணக்கிய நீதி படி இந்த 2 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் அனைவராலும் மதிக்கப்படுபவராக இருப்பார்களாம்...!
Chanakya Niti: இந்தியாவின் சிறந்த தத்துவஞானியும் அறிஞருமான சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான வழிகளைப் பற்றி கூறியுள்ளார். மனிதர்கள் அனைவருமே மற்றவர்களால் மதிக்கப்படுபவராகவும், அனைவருக்குமே பிடித்தவர்களாக இருக்க வேண்டுமென்றும் விரும்புகிறார்கள்.
வாழ்க்கையில் வெற்றி பெறுபவர்களுக்கு மட்டுமே இந்த அங்கீகாரங்கள் கிடைக்கும். இது பற்றிய ஞானமும், அறிவுரைகளும் சாணக்கிய நீதியில் விளக்கப்பட்டுள்ளது. சாணக்கியர் வாழ்க்கையில் வெற்றி பெற இரண்டு முக்கிய வழிகளைக் குறிப்பிடுகிறார். ஒன்று பணிவு மற்றொன்று சுய ஒழுக்கம். இந்த குணங்கள் ஒருவர் வாழ்க்கையில் எப்படி வெற்றிபெற உதவுகிறது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பணிவு மற்றும் ஒழுக்கம்
மற்றவர்களின் மரியாதையைப் பெறுவதில் பணிவு மிகவும் முக்கியமான குணமென்று சாணக்கியர் உறுதியாக நம்பினார். ஆணவத்திற்குப் பதிலாக பணிவின் மூலம் மட்டுமே உண்மையான மரியாதையைப் பெற முடியும் என்ற நம்பிக்கையை அவர் மக்களிடம் விதைத்தார்.
மரியாதையைப் பெறுவதற்கு சுய ஒழுக்கமும் ஒரு திறவுகோலென்று அவர் கருதுகிறார். சாணக்கிய நீதியில் சுயக்கட்டுப்பாடு என்பது தனிப்பட்ட வளர்ச்சிக்கும் சமூகத்தில் அந்தஸ்து மற்றும் மதிப்பைப் பெறுவதற்கும் முக்கியமானது என்று சாணக்கியர் கூறுகிறார். ஆசைகள் மற்றும் கோபத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம், ஒருவர் சகாக்கள் மற்றும் தலைவர்களிடமிருந்து மரியாதை மற்றும் பாராட்டைப் பெற முடியும். இந்த இரண்டு குணங்களும் ஒருவருக்கு சமூகத்தில் அன்பு மற்றும் மரியாதையை எப்படிப் பெற உதவுகின்றன என்று மேற்கொண்டு பார்க்கலாம்.
பணிவே ஒருவரின் பலம்
சாணக்கியர் பணிவை ஒருவரின் முக்கியமான நற்பண்புகளில் ஒன்றாக மதிக்கிறார். பணிவான நபர்கள் மற்றவர்களின் அன்பையும், மரியாதையையும் எளிதில் பெறுவார்கள். ஏனெனில் பணிவு ஒருவரின் தற்பெருமையைப் பற்றி பேசுவதற்குப் பதிலாக மற்றவர்களின் கருத்துக்களை கேட்பதிலும், புரிந்துகொள்வதிலும் கவனம் செலுத்த வழிவகுக்கிறது.
சாணக்கியரின் அறிவுரையை பணிவுடன் கடைப்பிடிப்பவர்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் தனிப்பட்ட முன்னேற்றத்தை அனுபவிப்பார்கள். பணிவானவர்களை அனைவரும் மதிப்பதால், அப்படிப்பட்டவர்களிடம் ஒரு சிறப்புப் பற்றுதலை மக்கள் உணர்கிறார்கள். பணிவு என்பது ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் பொக்கிஷமாக இருக்கும் பண்பாகும்.
சுய ஒழுக்கத்தின் முக்கியத்துவம்
சுய ஒழுக்கம் என்பது ஒருவரின் செயல்களையும், உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்தும் திறன். இந்த குணம் ஒருவரை சிறந்த முடிவெடுப்பதற்கு வழிவகுக்கும் என்று சாணக்கியர் நம்புகிறார். இந்த குணம் இலக்குகளில் கவனம் செலுத்தவும் நிலையான முன்னேற்றத்தை உறுதிப்படுத்தவும் உதவுகிறது. சுயஒழுக்கம் என்பது ஒருவருக்கு தனிப்பட்ட ஆதாயங்களை அளிப்பது மட்டுமின்றி, சமூகத்தில் அங்கீகாரத்தையும், மரியாதையையும், பெறுவதற்கு வழிவகுக்கும்.
தன்னடக்கம் உள்ளவர்கள் மற்றவர்களால் மதிக்கப்படுவார்கள் என்று சாணக்கியர் கூறுகிறார். ஆத்திரமூட்டும் சூழ்நிலைகளில் மற்றவர்களிடம் தங்கள் எதிர்வினைகளைக் கட்டுப்படுத்துவதன் மூலம், ஒழுக்கமான நபர்கள் மற்றவர்களின் நம்பிக்கையையும், ஆதரவையும் பெறுகிறார்கள். இவை இரண்டும் தலைமைப் பதவியில் இருப்பவர்களுக்கு அவசியம் இருக்க வேண்டிய குணங்களாகும்.



Click it and Unblock the Notifications
