சாணக்கிய நீதி படி இந்த ஒரு குணம் உள்ள பெண் உங்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்ட தேவதைகளாக இருப்பார்களாம்...!

Chanakya Niti: ஆச்சார்யா சாணக்கியரின் கூற்றுப்படி, குறிப்பிட்ட வகை பெண்களை திருமணம் செய்யும் ஒரு ஆண் தனது வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தை அடைவார்கள் என்று கூறுகிறார். அப்படிப்பட்ட பெண்களுக்கு என்னென்ன குணங்கள் இருக்கும் தெரியுமா? ஆண்களுக்கும் குடும்பத்திற்கும் அதிர்ஷ்டத்தை கொண்டு வரும் பெண் யார் தெரியுமா?

சாணக்கியரின் நெறிமுறைகளில் வாழ்க்கை தொடர்பான மிக முக்கியமான விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. சாணக்கியர் தனது சாணக்கிய நீதியின் மூலம் தனிப்பட்ட வாழ்க்கை, வேலை, தொழில், உறவு, நட்பு, எதிரிகள் போன்ற வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களைப் பற்றிய தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

Chanakya Niti: Never Lose These Women In Your Life in Tamil

சாணக்கியர் கூறும் இந்த விஷயங்கள் கடுமையாகத் தோன்றினாலும், இந்த விஷயங்கள் வாழக்கையில் ஒருவருக்கு சரி மற்றும் தவறுக்கு இடையிலான வேறுபாட்டைக் கூறுகின்றன. சாணக்கியரின் நெறிமுறைகள் மனிதனை வாழ்க்கையில் வெற்றிபெறத் தூண்டுகின்றன. ஆச்சார்ய சாணக்கியர் மனிதர்களின் நல்வாழ்க்கை தொடர்பான பல முக்கியமான விஷயங்களைக் கூறியுள்ளார்.

அதிக உணர்ச்சிவசப்படும் பெண்கள்

சாணக்கியரின் கூற்றுப்படி, பெண்கள் மிகவும் உணர்திறன் உடையவர்களாக கருதப்படுகிறார்கள். அவர்களின் உணர்திறன் மிகவும் அதிகமாக இருப்பதால், அவர்கள் மகிழ்ச்சியானாலும் அல்லது சோகமானாலும் அனைத்திற்குமே முதலில் அழத் தொடங்குகிறார்கள்.

ஆனால் அத்தகைய பெண்கள் மற்றவர்களை விட எந்த விதத்திலும் குறைந்தவர்கள் இல்லை. அழுது புலம்பும் பெண்களின் குணம் சற்றே விசித்திரமானது. ஆனால் அத்தகைய பெண்களை யார் திருமணம் செய்துகொள்கிறார்களோ, அவர்களின் விதியே மாறிவிடும் என்று ஆச்சார்ய சாணக்கியர் கூறுகிறார். அப்படிப்பட்ட பெண்களுக்கு என்னென்ன குணங்கள் இருக்கும் என்று மேற்கொண்டு பார்க்கலாம்.

எப்படிப்பட்ட பெண்களை இழக்கக்கூடாது?

சாணக்கியரின் கூற்றுப்படி, ஆண்களை விட பெண்களுக்கு சகிப்புத்தன்மை அதிகம். அத்தகைய சூழ்நிலையில், ஒரு பெண்ணுக்கு அவருக்கு ஏற்படும் துக்கம் எதுவாக இருந்தாலும் உடனே அழுவதால் அவர் மோசமானவர் மற்றும் பலவீனமானவர் என்று அர்த்தமல்ல, ஆனால் ஒவ்வொரு ஆணும் அத்தகைய பெண்ணை மதிக்க வேண்டும். ஏனெனில் சாணக்கியரின் கூற்றுப்படி, அத்தகைய பெண்கள் உண்மையான, தரமான எண்ணங்களைக் கொண்டுள்ளனர்.

சாணக்கியரின் கூற்றுப்படி, அதிகமாக பேசும் மற்றும் அழும் பெண்கள், தங்கள் காதலன் அல்லது கணவனை விட்டு விலகி இருக்க விரும்பாத பெண்களாக இருப்பார்கள், அத்தகைய பெண்கள் குடும்பத்திற்கு மிகவும் அதிர்ஷ்டமானவர்களாக கருதப்படுகிறார்கள். மென்மையான மனம் கொண்ட பெண்கள் அனைவரின் உணர்வுகளுக்கும் மதிப்பளிப்பவராக இருப்பார்கள், அப்படிப்பட்ட பெண்களை நம் வாழ்வில் இழக்கவே கூடாது என்கிறார் சாணக்கியர்.

பெண்களுடைய அழுகையின் சக்தி

சாணக்கியரின் கூற்றுப்படி, எந்தத் தவறும் செய்யாமல் அழத் தொடங்கும் ஒரு பெண்ணுக்கு தாய்மை உணர்வு உள்ளது, மேலும் இந்த குணத்தால் ஒரு பெண் குடும்ப உறுப்பினர்கள் அனைவருடனும் நன்றாகப் பழகுகிறார். பெண்களின் அழுகை மற்றும் கூச்சலினால் பல வகையான கடுமையான நோய்கள் குணமாகின்றன என்றும், அழுகை மனதையும், மன அழுத்தத்தையும் போக்குகிறது என்றும் சாணக்கியர் கூறுகிறார்.

அழும் பெண்கள் யாருடைய மனதையும் புண்படுத்துவதில்லை. இந்த பெண்கள் எப்போதும் மற்றவர்களின் உணர்வுகளை மதிக்கிறார்கள், பசியுடன் வருபவர்களுக்கு உணவளிக்கும் பெண்கள் உயிர்களை மதிக்கிறார்கள், அவர்கள் பட்டினி கிடந்தாலும் அவர்கள் மற்றவர்களை பசியுடன் இருக்க அனுமதிக்க மாட்டார்கள்.

ஆச்சார்ய சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் மேற்கூறிய குணங்களைக் கொண்ட பெண்களை ஒரு போதும் இழக்கக் கூடாது என்றும், ஒருவரது வாழ்க்கையிலிருந்து அவர்களை ஒருபோதும் பிரியக்கூடாது என்றும் கூறுகிறார்.

Story first published: Wednesday, November 29, 2023, 6:10 [IST]
Desktop Bottom Promotion