Latest Updates
-
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்..
சாணக்கிய நீதி படி இந்த 4 நபர்களின் வேலையில் தலையிடுவது அவமானத்தையும், மரணத்தையும் ஏற்படுத்துமாம்...!
Chanakya Niti: சாணக்கியர் பண்டைய இந்தியாவின் சிறந்த அரசியல்வாதி, பொருளாதார நிபுணர் மற்றும் அறிஞர். வாழ்க்கையின் பல அம்சங்களைப் பற்றி சாணக்கியர் பல விஷயங்களை தன்னுடைய சாணக்கிய நீதியில் கூறியிருக்கிறார்.
மனித வாழ்க்கையை எளிமையாகவும், வெற்றிகரமானதாகவும் ஆக்குவது தொடர்பான பல விஷயங்கள் சாணக்கிய நீதியில் கூறப்பட்டுள்ளது. வாழ்க்கையில் பிரச்சனைகள் இல்லாமல் இருப்பதே மகிழ்ச்சிக்கான ரகசியமாகும்.

ஆனால் வாழ்க்கையில் எந்த ஒரு பிரச்சனையையும் எப்படி சமாளிப்பது என்பதை கற்றுக் கொள்வதே வெற்றியின் ரகசியம். மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்த தேவையான ரகசியங்களைப் பற்றி சாணக்கியர் தனது நூலில் கூறியிருக்கிறார். மற்றவர்களின் இந்த விஷயங்களில் தலையிடக் கூடாது என்று சாணக்கியர் கூறுகிறார். அவ்வாறு தலையிடுவது உங்களின் நிம்மதியைக் கெடுக்கும்.
புத்திசாலிகள் உரையாடலில் தலையிடக்கூடாது
இரண்டு புத்திசாலிகள் ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டிருக்கும் போது, அவர்களின் உரையாடலை யாரும் குறுக்கிடக்கூடாது என்று சாணக்கியர் கூறுகிறார். அவ்வாறு செய்வது அவர்களின் பணிக்கு இடையூறாக இருக்கும். இதைத்தான் முட்டாள்தனம் என்பார்கள்.
ஒரு புத்திசாலி மனிதன் இதை ஒருபோதும் செய்ய மாட்டான். அப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர்களுக்கிடையே சென்றால், அவர்கள் உங்களை முட்டாள் என்று நினைப்பார்கள். இது உங்கள் நற்பெயரையும் மரியாதையையும் கெடுக்கும்.
கணவன்-மனைவி உரையாடல்
கணவனும் மனைவியும் வாழ்க்கைத் தேரின் இரு சக்கரங்கள் என்று சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் கூறுகிறார். கணவனும் மனைவியும் சேர்ந்து சில வேலைகளைச் செய்யும்போது, மூன்றாவது நபர் அவர்களின் வேலையில் தலையிடக் கூடாது என்கிறார் சாணக்கியர்.
மேலும், அவர்களின் உரையாடலில் யாரும் குறுக்கிடக்கூடாது. இது அவர்களின் தனியுரிமையின் மீதான அத்துமீறல் என்கிறார் சாணக்கியர்.
கலப்பைக்கும்-மாட்டிற்கும் இடையில்
கலப்பையும் எருதும் ஒன்றாகச் செல்லும்போது அவற்றுக்கிடையே செல்ல வேண்டாம். அது உங்களை காயப்படுத்தலாம். இந்த தவறை செய்வது மரணத்திற்கு வழிவகுக்கும் என்று சாணக்கியர் கூறுகிறார்.
பூஜைக்கும்-பூசாரிக்கு இடையில்
ஒரு பூசாரி யாக குண்டத்திற்கு அருகில் அமர்ந்து பூஜை செய்யும் போது, யாரும் அதைக் கடந்து செல்லக்கூடாது. இவ்வாறு செய்வதால் அவர்களின் வழிபாடு தடைபடுவதுடன் பூஜையும் தடைபடும். இது ஒரு நபரை பாவத்திற்கு உடந்தையாக ஆக்குகிறது என்று சாணக்கியர் கூறுகிறார்.
சாணக்கிய நீதியின் கூற்றுப்படி, ஒரு நபர் மேற்கூறிய விஷயங்களில் அல்லது அவர்களின் வாழ்க்கையில் ஒருபோதும் தலையிடக்கூடாது. இது ஒரு நபருக்கு மரணம் அல்லது சேதத்தை ஏற்படுத்தும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும். வாழ்க்கையில் வெற்றிபெற சாணக்கியர் கூறும் வழிகள் என்னென்ன என்று மேற்கொண்டு பார்க்கலாம்.
ஒற்றுமையை கடைபிடிப்பவர்
வேலையில் அனைவரையும் ஒன்றிணைப்பவர்கள் வெற்றியை அடைவார்கள் என்று சாணக்கியர் கூறுகிறார். அவர்கள் யார் மீதும் பொறாமை கொள்ள மாட்டார்கள், எல்லா துறைகளிலும் வெற்றி பெறுவார்கள். சாணக்கியரின் கூற்றுப்படி, ஒற்றுமையே ஒருவரின் பெரிய பலம். அனைவரின் ஆதரவும் இருந்தால் கடினமான வேலைகளையும் எளிதாக செய்து முடிக்கலாம்.
மரியாதை
சாணக்கிய நீதியின் படி, சக ஊழியர்களின் ஆதரவு இல்லாமல் எந்த இலக்கையும் அடைய முடியாது. அனைவரின் ஆதரவையும் பெற, முதலில் அவர்களை மதிக்க வேண்டும். அப்போதுதான் உங்கள் பணிகளை சுமூகமாக முடிக்க முடியும். அனைவரையும் மதித்து நடப்பதன் மூலம் தான் முன்னேற்றத்திற்கான பாதையை திறக்க முடியும்.
ஈகோவை தவிர்க்க வேண்டும்
ஒரு மனிதன் உயர் பதவியை அடையும்போதோ அல்லது ஏதேனும் பெரிய வெற்றியை அடையும்போதோ அவருக்குள் ஒரு ஈகோ எழுகிறது என்கிறார் சாணக்கியர். திறமையானவர்களை அடக்க முயல்பவர்களின் எதிர்காலம் அழியத் தொடங்குகிறது என்கிறார் சாணக்கியர்.
கங்காரத்தில் ஒருவர் அழிந்துவிடக்கூடும் என்பதால், அத்தகைய சூழ்நிலையில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எனவே ஈகோவை விட்டுவிட்டு வாழ்க்கையில் முன்னேற முயற்சி செய்யுங்கள்.



Click it and Unblock the Notifications












