Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
சாணக்கிய நீதி படி இந்த 4 விஷயங்களில் தலையிடுபவர்கள் வாழ்க்கையில் மரணம் சீக்கிரம் வந்துருமாம்...!
Chanakya Niti: மகிழ்ச்சியின் ரகசியம் வாழ்க்கையில் பிரச்சினைகளைத் தவிர்ப்பது அல்ல, பிரச்சினைகளைத் தீர்க்கும் கலையைக் கற்றுக்கொள்வதுதான். மகிழ்ச்சியான வாழ்க்கையின் பல ரகசியங்கள் சாணக்கிய நீதியில் கூறப்பட்டுள்ளன. ஆச்சார்யா சாணக்கியர் பண்டைய இந்தியாவின் ஒரு சிறந்த அரசியல்வாதி மற்றும் இராஜதந்திரி ஆவார்.
அவர் தனது சாணக்கிய நீதியில் வாழ்க்கையை வெற்றிகரமாக்க பல்வேறு வகையான கொள்கைகளை குறிப்பிட்டுள்ளார். ஒருவர் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்றால் சிலரின் வேலையில் தலையிடக் கூடாது என்கிறார் சாணக்கியர். சாணக்கிய நீதியில் மகிழ்ச்சி மற்றும் வெற்றிக்கான ரகசியங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளவற்றை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

புத்திசாலிகளின் விவகாரங்களில் தலையிடக்கூடாது
இரண்டு புத்திசாலிகள் ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டிருக்கும் போது, அவர்களின் உரையாடலில் யாரும் குறுக்கிடக்கூடாது என்று சாணக்கியர் கூறுகிறார். அவ்வாறு செய்வது அவர்களின் பணிக்கு இடையூறாக இருக்கும். இதைத்தான் முட்டாள்தனம் என்பார்கள்.
ஒரு புத்திசாலி மனிதன் இதை ஒருபோதும் செய்ய மாட்டான். அப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர்களுக்கிடையே சென்றால், அவர்கள் உங்களை முட்டாள் என்று நினைப்பார்கள். இது உங்கள் நற்பெயரையும் மரியாதையையும் கெடுக்கும்.
கணவன்-மனைவி உரையாடல்கள்
கணவனும் மனைவியும் வாழ்க்கைத் தேரின் இரு சக்கரங்கள் என்று சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் கூறுகிறார். கணவனும் மனைவியும் சேர்ந்து சில வேலைகளைச் செய்யும்போது, மூன்றாவது நபர் அவர்களின் வேலையில் தலையிடக் கூடாது என்கிறார் சாணக்கியர். மேலும், அவர்களின் உரையாடலில் யாரும் குறுக்கிடக்கூடாது. இது அவர்களின் பிரைவசியின் மீதான படையெடுப்பு என்கிறார் சாணக்கியர்.
கலப்பைக்கும் எருதுக்கும் இடையில்
கலப்பையும் எருதும் ஒன்றாகச் செல்லும்போது அவற்றுக்கிடையே செல்ல வேண்டாம். அது உங்களை காயப்படுத்தலாம், சில சமயங்களில் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தலாம். இந்த தவறை செய்தால் மரணம் ஏற்படும் என்று சாணக்கியர் கூறுகிறார்.
பூஜைக்கும்-பூசாரிக்கு இடையில்
ஒரு பூசாரி ஓமகுண்டத்திற்கு அருகில் அமர்ந்து பூஜை செய்யும் போது, யாரும் அதைக் கடந்து செல்லக்கூடாது. இவ்வாறு செய்வதால் அவர்களின் வழிபாடு தடைபடுவதுடன் பூஜை தடைபடும். இது ஒரு நபரை பாவத்திற்கு உடந்தையாக ஆக்குகிறது என்று சாணக்கியர் கூறுகிறார்.
சாணக்கியரின் கூற்றுப்படி, ஒரு நபர் மேற்கூறிய விஷயங்களில் ஒருபோதும் தலையிடக்கூடாது. இது ஒரு நபருக்கு மரணம் அல்லது அவமானத்தை ஏற்படுத்தும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications
