Latest Updates
-
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்..
சாணக்கிய நீதி படி இந்த 4 விஷயங்களில் தலையிடுபவர்கள் வாழ்க்கையில் மரணம் சீக்கிரம் வந்துருமாம்...!
Chanakya Niti: மகிழ்ச்சியின் ரகசியம் வாழ்க்கையில் பிரச்சினைகளைத் தவிர்ப்பது அல்ல, பிரச்சினைகளைத் தீர்க்கும் கலையைக் கற்றுக்கொள்வதுதான். மகிழ்ச்சியான வாழ்க்கையின் பல ரகசியங்கள் சாணக்கிய நீதியில் கூறப்பட்டுள்ளன. ஆச்சார்யா சாணக்கியர் பண்டைய இந்தியாவின் ஒரு சிறந்த அரசியல்வாதி மற்றும் இராஜதந்திரி ஆவார்.
அவர் தனது சாணக்கிய நீதியில் வாழ்க்கையை வெற்றிகரமாக்க பல்வேறு வகையான கொள்கைகளை குறிப்பிட்டுள்ளார். ஒருவர் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்றால் சிலரின் வேலையில் தலையிடக் கூடாது என்கிறார் சாணக்கியர். சாணக்கிய நீதியில் மகிழ்ச்சி மற்றும் வெற்றிக்கான ரகசியங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளவற்றை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

புத்திசாலிகளின் விவகாரங்களில் தலையிடக்கூடாது
இரண்டு புத்திசாலிகள் ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டிருக்கும் போது, அவர்களின் உரையாடலில் யாரும் குறுக்கிடக்கூடாது என்று சாணக்கியர் கூறுகிறார். அவ்வாறு செய்வது அவர்களின் பணிக்கு இடையூறாக இருக்கும். இதைத்தான் முட்டாள்தனம் என்பார்கள்.
ஒரு புத்திசாலி மனிதன் இதை ஒருபோதும் செய்ய மாட்டான். அப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர்களுக்கிடையே சென்றால், அவர்கள் உங்களை முட்டாள் என்று நினைப்பார்கள். இது உங்கள் நற்பெயரையும் மரியாதையையும் கெடுக்கும்.
கணவன்-மனைவி உரையாடல்கள்
கணவனும் மனைவியும் வாழ்க்கைத் தேரின் இரு சக்கரங்கள் என்று சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் கூறுகிறார். கணவனும் மனைவியும் சேர்ந்து சில வேலைகளைச் செய்யும்போது, மூன்றாவது நபர் அவர்களின் வேலையில் தலையிடக் கூடாது என்கிறார் சாணக்கியர். மேலும், அவர்களின் உரையாடலில் யாரும் குறுக்கிடக்கூடாது. இது அவர்களின் பிரைவசியின் மீதான படையெடுப்பு என்கிறார் சாணக்கியர்.
கலப்பைக்கும் எருதுக்கும் இடையில்
கலப்பையும் எருதும் ஒன்றாகச் செல்லும்போது அவற்றுக்கிடையே செல்ல வேண்டாம். அது உங்களை காயப்படுத்தலாம், சில சமயங்களில் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தலாம். இந்த தவறை செய்தால் மரணம் ஏற்படும் என்று சாணக்கியர் கூறுகிறார்.
பூஜைக்கும்-பூசாரிக்கு இடையில்
ஒரு பூசாரி ஓமகுண்டத்திற்கு அருகில் அமர்ந்து பூஜை செய்யும் போது, யாரும் அதைக் கடந்து செல்லக்கூடாது. இவ்வாறு செய்வதால் அவர்களின் வழிபாடு தடைபடுவதுடன் பூஜை தடைபடும். இது ஒரு நபரை பாவத்திற்கு உடந்தையாக ஆக்குகிறது என்று சாணக்கியர் கூறுகிறார்.
சாணக்கியரின் கூற்றுப்படி, ஒரு நபர் மேற்கூறிய விஷயங்களில் ஒருபோதும் தலையிடக்கூடாது. இது ஒரு நபருக்கு மரணம் அல்லது அவமானத்தை ஏற்படுத்தும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications












