Latest Updates
-
கர்நாடகா சுரைக்காய் சட்னி ரெசிபி - இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு செமையா இருக்கும் -
செப்டம்பரில் நிகழும் குரு-செவ்வாய் சேர்க்கை: இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க.. -
Krishna Janmashtami 2026: கிருஷ்ண ஜெயந்தி எப்போது வருகிறது? வீட்டில் எப்படி பூஜை செய்யணும் தெரியுமா? -
ராகி மாவும், பச்சை பயறும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி கொழுக்கட்டை செஞ்சு குடுங்க.. விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியன்-புதன்-கேது நட்சத்திரம் ஒரே நட்சத்திரத்தில் இணைவதால் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
உங்களுக்கு புற்றுநோய் வரக்கூடாதா? அப்ப அமெரிக்க டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
பரங்கிக்காயை இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் புளிக்கறி செஞ்சு பாருங்க - சாதத்தோட சாப்பிட அருமையா இருக்கும் -
ஒரு லிட்டர் பெட்ரோல் விற்றால் பெட்ரோல் பங்க்-க்கு எவ்வளவு ரூபாய் லாபம் கிடைக்கும் தெரியுமா? -
ரக்ஷா பந்தன் அன்று உங்க அண்ணன் ராசிக்கேற்ற நிறத்தில் ராக்கி கட்டுங்க.. நல்ல அதிர்ஷ்டத்தை தரும்.. -
கொள்ளு தோசையும், பூண்டு தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்..
சாணக்கிய நீதி இந்த 4 வகை பெண்கள் ஆண்களின் வாழ்க்கையை நரகமாக மாற்றுவார்களாம் - ஜாக்கிரதை
Chanakya Niti: சாணக்கியரைப் பற்றியோ, அவருடைய கொள்கைகளைப் பற்றியோ யாரும் இந்தியாவில் அறியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அவர் தனது புகழ்பெற்ற நூலான சாணக்கிய நீதியில் மனிதர்களின் நன்மை தீமைகள் பற்றிய விரிவான தகவல்களைத் தந்துள்ளார். ஒரு நபர் தனது நற்பண்புகளால் வாழ்க்கையில் வெற்றியை அடையும் அதே நேரத்தில், வெற்றிகரமான வேலை கூட மோசமான செயல்களால் தோல்வியடைகிறது என்று சாணக்கியர் கூறியுள்ளார்.

சாணக்கியர் வகுத்த கொள்கைகள் இன்றும் உலகிற்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளன. தனது சாணக்கிய நீதி எனும் நூலில், வாழ்க்கை நிர்வாகம் தொடர்பான பல விஷயங்களை அவர் எடுத்துரைத்துள்ளார். இந்த விஷயங்களைப் புரிந்துகொள்வதன் மூலம், பலவிதமான துன்பங்களைத் தவிர்க்க முடியும். சாணக்கிய நீதியில் ஆண்கள் எப்போதும் நான்கு வகையான பெண்களிடமிருந்து விலகியே இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். ஏனெனில், அத்தகைய பெண்கள் ஆண்களை நிம்மதியாக வாழவும் விடமாட்டார்கள், சாகவும் விடமாட்டார்கள். அந்த நான்கு வகையான பெண்கள் யார் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பேராசை கொண்ட பெண்களுடன் பழகக்கூடாது
ஆச்சார்ய சாணக்கியரின் கூற்றுப்படி, ஆண்கள் பேராசை கொண்ட பெண்களுடன் பழகுவதைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில் அவர்களின் முக்கிய நோக்கம் பணமாக மட்டுமே இருக்கும், அவர்கள் மனிதர்களை ஒரு பொருட்டாகவே மதிக்க மாட்டார்கள். ஒருவரிடம் அவர்கள் எதிர்பார்க்கும் பணம் கிடைத்தவுடன், அவர்கள் மீதான அவர்களின் அன்பும், அக்கறையும் உடனடியாக மாறிவிடும். அத்தகைய பெண்கள் செல்வத்தின் மீதான பேராசையால் யாரையும் கெட்டவராக மாற்றிவிடுவார்கள்.
முன்கோபமுள்ள பெண்களிடமிருந்து விலகியிருக்க வேண்டும்
ஒரு பெண் முன்கோபம் உள்ளவராக இருந்தால், ஆண்களும் அந்த பெண்ணிடமிருந்து முற்றிலும் விலகி இருக்க வேண்டும். அத்தகைய பெண்ணுடன் வாழ்வது நரகத்தில் வாழ்வதைப் போன்றது என்று சாணக்கியர் கூறுகிறார். அவர்களுக்குக் கோபம் வரும்போது, யார் முன்னிலையிலும் எதை வேண்டுமென்றாலும் செய்வார்கள். இத்தகைய சூழ்நிலையில், ஒரு ஆணின் சுயமரியாதை பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல், சமூகத்தில் அவர் ஒரு கேலிப்பொருளாக மாறிவிடுவார்.
சந்தேகப்புத்தி உள்ள பெண்களுடன் பழக்கூடாது
ஏதாவது ஒரு விஷயத்தில் உங்களை எப்போதும் சந்தேகிக்கக்கூடிய ஒரு பெண்ணுடன் நீங்கள் உறவில் இருந்தால், உடனடியாக அந்த உறவை முறித்துக்கொள்வது நல்லது. அதுதான் உங்கள் வாழ்க்கைக்கு முற்றிலும் நல்லது. உங்களை நிம்மதியாக மூச்சுவிடக்கூட அனுமதிக்காத ஒரு பெண்ணுடன் வாழ்வது, சிறையில் அடைபட்டிருப்பதைப் போன்றது என்று சாணக்கியர் கூறுகிறார். இத்தகைய பெண்கள் உங்கள் மீது முழுமையான ஆதிக்கத்தை செலுத்த விரும்புவார்கள். அவர்களுடன் வாழ்வது என்பது நரகத்தைப் போன்றது.
ஊதாரித்தனமாக செலவழிக்கும் பெண்
தேவைக்கு அதிகமாகச் செலவு செய்யும் பெண்களிடமிருந்தும் எப்போதும் விலகியே இருக்க வேண்டும் என்று சாணக்கியர் கூறுகிறார். இத்தகைய பெண்களுடன் நீங்கள் எவ்வளவு அதிக நேரம் செலவிடுகிறீர்களோ, அந்த அளவுக்கு உங்களுக்கு அதிக இழப்புகளே ஏற்படும். இத்தகைய பெண்கள் எதிர்காலத்தைப் பற்றி ஒருபோதும் சிந்திக்க மாட்டார்கள். மாறாக, இன்று கையில் இருப்பதை முழுவதுமாக இன்றே செலவழித்துவிடவே விரும்புகிறார்கள். எனவே, இத்தகைய பெண்களிடமிருந்து நீங்கள் எவ்வளவு தொலைவில் விலகி இருக்கிறீர்களோ, அதுவே உங்களுக்கும், உங்களிடமுள்ள செல்வத்திற்கும் நல்லது.



Click it and Unblock the Notifications
