Latest Updates
-
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்!
சாணக்கிய நீதி படி இந்த 4 விஷயங்களில் ஒன்னு உங்க வாழ்க்கையில் நுழைஞ்சாலும் உங்கள யாராலும் காப்பாத்த முடியாது..!
Chanakya Niti: பண்டைய இந்தியாவின் சிறந்த இராஜதந்திரகளில் ஒருவரும் சிறந்த பொருளாதார நிபுணருமான சாணக்கியர் மனிதர்களின் வாழ்வியலிலும் சிறந்த அனுபவம் கொண்டவராக இருந்தார். சாணக்கியரின் அறிவுரைகள் ஒருவரின் வாழ்க்கையில் வழிகாட்டியாக இருப்பதுடன் அவர்களை வெற்றியை நோக்கி அழைத்து செல்லவும் உதவும்.
சாணக்கியர் தன் வாழ்வில் கிடைத்த அனுபவங்களைக் கொண்டு விதிகளை உருவாக்கி மக்களுக்குப் போதித்தார். இப்படிப் பல கொள்கைகளை உருவாக்கி, அதைக் கடைப்பிடிப்பதன் மூலம் வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்ற முடியும்.

சாணக்கியர் தனது கொள்கைகளில் சில பழக்கவழக்கங்களால் வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்படுகின்றன என்று கூறியுள்ளார். தவறான பழக்கத்தை சரியான நேரத்தில் விட்டுவிடாவிட்டால், அது உங்கள் வாழ்க்கையையே பாழாக்கிவிடும்.
சாணக்கியர் சொல்லும் தவறான பழக்கங்கள் என்னென்ன, அது உங்கள் வாழ்க்கையை எப்படி அழிக்கக்கூடும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
கர்வம்
சாணக்கியர் ஒருவருக்கு எந்தவிதமான ஈகோவும் இருக்கக்கூடாது என்று கூறியுள்ளார். ஈகோ அனைவரின் வாழ்க்கையின் மிகப்பெரிய எதிரியாகும். யாருடைய நேரமும் எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. மனிதனின் வாழ்வில் மகிழ்ச்சியும், துன்பமும் மாறி மாறி வரும். அது ஒருபோதும் ஒரே இடத்தில் தங்காது.
ஒருவர் எப்பொழுதும் ஈகோ போன்ற உணர்விலிருந்து விலகி இருக்க வேண்டும். அதனால்தான் எப்போதும் பணிவுடன் இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. ஒருவர் எவ்வளவு பணிவானவராக இருக்கிறாரோ வாழ்க்கையில் அவ்வளவு வெற்றியை அடைவார்கள்.
கோபம்
சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் கோபத்தை மனிதனின் மிகப்பெரிய எதிரியாகக் கருதினார். எப்பொழுதும் கோபத்துடன் இருப்பவர் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது என்று சாணக்கியர் கூறுகிறார்.
கோபத்தின் காரணமாக, அவர்கள் தங்கள் அன்புக்குரியவர்களிடமிருந்தும் விலகிச் செல்கிறார்கள். யாரும் அவர்கள் அருகில் செல்ல விரும்பபுவதில்லை. அத்தகைய சூழ்நிலையில், கோபமான நபர் படிப்படியாக அனைத்தையும் இழக்கிறார். கோபத்தால் மனிதன் செய்யும் வேலைகளும் தோல்வியில் முடிகிறது.
மோசமான வார்த்தைகள்
இனிமையான வார்தைகளை பேசுபவர்கள் எப்போதும் அனைவராலும் விரும்பப்படுவார்கள் என்பது சாணக்கியரின் நம்பிக்கை. ஆனால் எப்போதும் மோசமான வார்த்தைகளை பேசுபவர்களை யாரும் விரும்ப மாட்டார்கள்.
துன்புறுத்தும் நாக்கு உள்ளவர்களின் ஆளுமை அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதைச் சொல்கிறது. மோசமான வார்த்தைகளின் உபயோகித்தால், ஒருவரின் நல்ல விஷயங்கள் கூட கெட்டதாகத் தோன்றத் தொடங்கும். மோசமான வார்த்தைகளை உபயோகிப்பவருடன் பழக யாரும் விரும்புவதில்லை.
தவறான எண்ணங்கள்
மற்றவர்களைப் பற்றி எந்தத் தவறான கருத்தையும் எப்போதும் மனதில் வைத்துக் கொள்ளாதீர்கள். மனிதர்கள் எப்போதும் மற்றவர்களைப் பற்றி தவறாக நினைத்தால், அவர்களுக்கு நல்லது எதுவும் நடக்காது. ஏனென்றால், மற்றவர்களைப் பற்றி தவறாக நினைப்பது, உங்களுக்கும் தீங்கு விளைவிக்கிறது.
நண்பர்கள், உறவினர்கள், அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் மோசமாக நடந்துகொள்வது மற்றும் அவர்களிடமிருந்து விலகி இருப்பது ஒரு நபருக்கு வாழ்க்கையை கடினமாக்குகிறது. அப்படிப்பட்டவருடன் யாரும் உறவாட விரும்ப மாட்டார்கள்.



Click it and Unblock the Notifications
