Latest Updates
-
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்!
சாணக்கிய நீதி படி இந்த 5 தகுதிகள் உள்ளவர்கள் சமூகத்தில் அனைவராலும் மதிக்கப்படுபவர்களாக இருப்பார்களாம்...!
Chanakya Niti: சாணக்கியரின் அறிவுரைகள் பல நூற்றாண்டுகள் கழித்து இப்போதும் பிரபலமானதாக இருக்கிறது. ஒருவரின் வாழ்க்கையின் பல அம்சங்கள் குறித்த சாணக்கியரின் கருத்துக்கள் மிகவும் பிரபலமானவை. அதனால்தான் சாணக்கி நீதி இன்றும் குறிப்பிடத்தக்கதாக உள்ளது. சாணக்கியரின் வார்த்தைகளைப் பின்பற்றுவதன் மூலம், ஒருவர் எதையும் சாதிக்க முடியும்.
சாணக்கிய நீதி என்பது பல்வேறு அனுபவங்களிலிருந்து சாணக்கியரால் தேர்ந்தெடுக்கப்பட்டதாகக் கூறப்படும் அறிவுரைகளின் தொகுப்பாகும். இதை முழுமையாக கற்றுக்கொண்டால், நமது அன்றாட வாழ்க்கைக்குப் பயனுள்ள பல பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம். அனைவருமே சமூகத்தில் மரியாதை பெற ஆசைப்படுகிறார்கள்.

ஆனால் சிலர் அவர்களின் பழக்கவழக்கங்களாலேயே, அவர்கள் தங்கள் மரியாதையைக் கெடுத்துக் கொள்கிறார்கள். அது அவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும். இந்த விஷயங்களைப் பின்பற்றாவிட்டால், ஒரு வெற்றிகரமான நபர் கூட வாழ்க்கையில் தோல்வியடைவார். அவை என்னென்ன பழக்கங்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
தவறான நண்பர்கள்
சாணக்கிய நிதியின்படி, ஒரு நபர் எப்போதும் நல்ல நண்பர்களை வைத்துக்கொள்ள முயற்சிக்க வேண்டும். உங்கள் வாழ்க்கையை நிர்ணயிப்பதில் உங்கள் நண்பர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். அதன் விளைவு உங்கள் நடத்தையிலும் குணத்திலும் தெரியும். நீங்கள் எப்போதும் தவறான நபர்களிடமிருந்து விலகி இருக்க வேண்டும். நல்லவர்களுடன் பழகுவதன் மூலம் மட்டுமே வாழ்க்கையில் நல்ல பலன்களை அடைவீர்கள்.
இனிமையான பேச்சு
சாணக்கிய நீதியின்படி, ஒருவர் எப்போதும் தனது பேச்சில் எளிமையைக் கடைப்பிடிக்க வேண்டும். அத்தகையவர்கள் அனைவராலும் மதிக்கப்படுவார்கள் மற்றும் விரும்பப்படுவார்கள். உங்கள் பேச்சு உங்கள் வார்த்தைகளின் அர்த்தத்தை வெளிப்படுத்துகிறது. எனவே உங்கள் பேச்சில் எப்போதும் இனிமையை நிலைநாட்ட வேண்டும். எப்போதும் ஆணவத்துடன் பேசக்கூடாது.
தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்
தங்கள் தவறுகளிலிருந்து கற்றுக்கொள்பவர்கள் எப்போதும் சமூகத்தில் சிறந்தவர்களாக மாறுவார்கள் என்று சாணக்கியர் கூறுகிறார். ஒருவர் தனது தவறு மட்டுமின்றி மற்றவர்களின் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டால், அவர் சமூகத்திற்கு ஒரு உத்வேகமாக மாறுவார்.
பணிவு
ஒருவர் எப்போதும் தனது நடத்தையில் பணிவை கடைபிடிக்க வேண்டும். அத்தகையவர்கள் சமூகத்தில் அனைவராலும் மதிக்கப்படுகிறார்கள். நல்ல பழக்கவழக்கங்களைப் பேணுபவர்கள் ஒருபோதும் தேவையற்ற சிக்கலில் மாட்டிக் கொள்ள மாட்டார்கள். அவர்கள் வாழ்க்கையில் உள்ள பிரச்சினைகளை எளிதில் தீர்த்து விடுவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு உதவ மற்றவர்கள் எப்போதும் முன்வருவார்கள்.
அறிவாற்றல்
ஒருவரின் அறிவு அவரது மரியாதையை அதிகரிக்க உதவுகிறது. சாணக்கியரின் கூற்றுப்படி, ஒருவர் எப்போதும் தனது அறிவை விரிவுபடுத்திக் கொண்டேயிருக்க வேண்டும். அறிவுள்ள ஒருவர் சமூகத்தில் எப்போதும் மதிக்கப்படுவார். எனவே அறிவைப் பெறுவதற்கான எந்த வாய்ப்பையும் வீணாக்கக்கூடாது.



Click it and Unblock the Notifications
