சாணக்கிய நீதி படி இந்த 5 பழக்கங்கள் உள்ளவர்கள் விரைவில் யாசகம் எடுக்கும் நிலைக்கு வந்துவிடுவார்களாம்

Chanakya Niti: ஆச்சார்ய சாணக்கியர், பண்டைய இந்தியாவில் மிகுந்த அறிவுக்கூர்மையும், ராஜதந்திரமும், ஞானமும் கொண்ட மனிதர்களில் ஒருவராகப் போற்றப்படுகிறார். எந்தவொரு செயலையும் தொடங்குவதற்கு முன்னரோ அல்லது அந்த செயல் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதோ, சாணக்கிய நீதியில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளை முறையாகப் பின்பற்றினால், அந்த செயல்பாடுகள் மிகவும் வெற்றிகரமானதாகவும், வாழ்வில் செழிப்பைத் தருவதாகவும் அமையும் என்று கூறப்படுகிறது. அதேசமயம் சாணக்கியரின் இந்த விதிமுறைகள் புறக்கணிக்கப்பட்டால், அது வாழ்வில் வறுமையையும், சிக்கல்களையும் ஏற்படுத்தும்.

Chanakya Niti Habits Should Avoid to Achieve Success in Life

ஆச்சார்ய சாணக்கியரின் கூற்றுப்படி, வாழ்வில் வெறும் பணம் சம்பாதிப்பது மட்டும் வெற்றியை நிர்ணயிப்பதில்லை, ஈட்டிய செல்வத்தைப் பாதுகாப்பதும், வாழ்க்கையில் நற்பழக்கங்களை வளர்த்துக்கொள்வதும் அதற்கு இணையான முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். ஒருவரின் வாழ்க்கையை நரகமாக்கும் சில தீய பழக்கங்கள் உள்ளன, இந்த பழக்கங்களை சரியான நேரத்தில் திருத்திக்கொள்ளாவிடில், அவர்கள் குடும்பத்தில் வறுமை குடிகொள்ளக்கூடும். மாறாக, இப்பழக்கங்களை நீங்கள் திருத்திக்கொண்டால், மகிழ்ச்சியும் செழிப்பும் உங்கள் வாழ்வில் என்றென்றும் நிலைத்திருக்கும். இந்த பதிவில் ஒருவரின் வாழ்க்கையில் வறுமையைக் கொண்டுவரும் பழக்கங்கள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.

சோம்பலைக் கைவிடுவது அவசியம்

ஆச்சார்ய சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில், "ஆலஸ்யம் ஹி மனுஷ்யாணாம் சரீரஸ்தோ மஹான் ரிபுஹு" என்று கூறுகிறார். இந்த ஸ்லோகத்தின் அர்த்தம் என்னவென்றால், சோம்பலே மனித உடலுக்குள் குடியிருக்கும் மிகப்பெரிய எதிரியாகும். எவர் ஒருவர் தனது சோம்பேறித்தனத்தால் தன்னுடைய கடமைகளைத் தள்ளிப்போடுகிறாரோ, அவர் வாழ்வில் ஒருபோதும் வெற்றியை அடையமாட்டார். ஒரு சோம்பேறி காலப்போக்கில் பொருளாதாரரீதியாகப் பலவீனமடைந்து, விரைவில் வறுமையில் விழுந்து விடுவார்.

சுகாதாரத்தைப் புறக்கணிப்பது

ஆச்சார்ய சாணக்கியரின் கூற்றுப்படி, தூய்மை இல்லாத எந்தவொரு இல்லத்திலும் எதிர்மறை ஆற்றலால் நிறைந்திருக்கும். இந்த எதிர்மறை ஆற்றல் அந்த குடும்பத்தில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். அசுத்தம் பல்வேறு நோய்களுக்கும், நிதிச் சிக்கல்களுக்கும் வழிவகுக்கும். தூய்மையைக் கடைபிடிக்கும் இல்லங்களிலேயே அன்னை மகாலட்சுமி வசிப்பார் என்று சாணக்கியர் கூறுகிறார்.

வரவுக்கு மீறி செலவு செய்தல்

சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் "தனம் கதம் புனர் ந யாதி" என்று குறிப்பிட்டுள்ளார். ஒருமுறை கைவிட்டுப்போன பணத்தை மீண்டும் ஈட்டுவது மிகவும் கடினம் என்பதே இந்த ஸ்லோகத்தின் அர்த்தமாகும். சாணக்கியரின் கூற்றுப்படி, தான் ஈட்டும் வருவாயை விட அதிகமாகச் செலவிடும் பழக்கம் ஒருவரின் வாழ்க்கையில் விரைவில் வறுமையை வரவழைக்கும். எந்த முன்யோசனையுமின்றிப் பணத்தைச் செலவிடுபவர்களால், எதிர்காலத்திற்காக எதையும் சேமிக்க இயலாது. இந்த பழக்கம் பல்வேறு பொருளாதார சிக்கல்களை ஏற்படுத்தும்.

நேரத்தின் மதிப்பை உணராமல் இருப்பது

சாணக்கியரின் கூற்றுப்படி, ஒரு மனிதனுக்குக் காலத்தை விட விலைமதிப்பற்றது வேறெதுவும் இல்லை. காலத்தை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தாதவர்கள், வாழ்க்கையில் கிடைக்கும் நல்வாய்ப்புகளை இழக்க நேரிடும். காலத்தை மதித்து நடப்பவர்களால் மட்டுமே வாழ்க்கையில் முன்னேற்றம் காண இயலும் என்று சாணக்கியர் கூறுகிறார்.

தீயவர்கள் சகவாசம்

சாணக்கியர் தனதுசாணக்கிய நீதியில், "சங்கத் சஞ்சாயதே காமஃ" என்று கூறுகிறார். இந்த ஸ்லோகத்தின் அர்த்தம் என்னவென்றால், ஒருவரின் விருப்பங்களும் நடத்தைகளும் அவரின் நண்பர்களின் அடிப்படையிலேயே வடிவமைக்கப்படுகின்றன. தவறான நபர்களுடன் கூட்டு சேர்வது வறுமைக்கு வழிவகுக்கும். ஒரு நபர் தீய சகவாசத்தை வளர்த்துக் கொள்ளும்போது, ​​அவரது சிந்தனைகளும் பழக்கவழக்கங்களும் சீர்கெட்டுப் போகின்றன. இது தவறான முடிவுகளை எடுக்க வழிவகுப்பதுடன், இறுதியில் பிற்காலத்தில் இழப்புகளையும் துன்பங்களையும் சந்திக்க வழிவகுக்கும் என்று சாணக்கியர் கூறுகிறார்.

Story first published: Saturday, May 23, 2026, 17:03 [IST]
Desktop Bottom Promotion