Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் புடலங்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும் -
நாக பஞ்சமியில் நடக்கும் சந்திர பெயர்ச்சி: இந்த 3 ராசிகளின் பணக்கஷ்டம் தீர்ந்து, பண வரவு அதிகரிக்கப்போகுது! -
தமிழ்நாட்டில் கள்ளக்காதல் அதிகமிருக்கும் டாப் மாவட்டங்கள் - முதலிடத்தில் எந்த மாவட்டம் இருக்கு தெரியுமா? -
ஹோட்டல் ஸ்டைல் ரவா தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 17 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கூரையை பிச்சுட்டு கொட்டப்போகுதாம் -
Avani 2026 Rasipalan: ஆவணி மாதம் இந்த 3 ராசிக்கு தொழில் ரீதியா அதிர்ஷ்டமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
கேரட்டும், ஜவ்வரிசியும் இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட் செய்யுங்க.. பிள்ளைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
Nag Panchami 2026: நாக பஞ்சமியில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
காரசாரமான சிக்கன் ஈரல் வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க.. -
இந்த 7 அறிகுறிகள் அடிக்கடி தெரியுதா? அப்ப அது குடல்வால் புற்றுநோயின் அறிகுறியா இருக்கலாம்.. உஷார்..
சாணக்கிய நீதி படி குழந்தைகள் இந்த 4 நல்ல குணங்களை கருவில் இருக்கும்போதே கற்றுக்கொள்வார்களாம்...!
Chanakya Niti: சாணக்கியர் ஒரு சிறந்த ஆசிரியர், தத்துவஞானி, பொருளாதார நிபுணர், சட்ட நிபுணர் மற்றும் அரச ஆலோசகர் ஆவார். அவர் பண்டைய இந்திய அரசியல் நூலான அர்த்தசாஸ்திரத்தை எழுதியுள்ளார். அவர் கௌடில்யர் என்றும் விஷ்ணுகுப்தர் என்றும் அழைக்கப்படுகிறார். முதல் மௌரியப் பேரரசரான சந்திரகுப்தா ஆட்சிக்கு வருவதற்கு சாணக்கியரின் தந்திரங்களே உதவியது. மௌரியப் பேரரசை நிறுவுவதில் சாணக்கியரின் உத்திகள் முக்கியப் பங்கு வகித்தன.

மனிதர்களின் வாழ்க்கையின் பல அம்சங்களைப் பற்றிய அவரது கருத்துக்கள் இன்றும் பிரபலமானவை. சாணக்கியரின் வார்த்தைகளைப் பின்பற்றுவதன் மூலம் ஒருவர் எதையும் சாதிக்க முடியும் மற்றும் அவரது வாழ்க்கையை மிகவும் எளிதாக்கலாம்.
சாணக்கிய நீதி என்பது அவருடைய பல்வேறு அனுபவங்களிலிருந்து சாணக்கியரால் தேர்ந்தெடுக்கப்பட்ட பழமொழிகளின் தொகுப்பாகும். அதை விரிவாகப் பார்த்தால், நம் அன்றாட வாழ்வில் பயனுள்ள பல பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம். சாணக்கியரின் அறிவுரைகள் இன்றும் பொருத்தமானவை.
சாணக்கியரின் கூற்றுப்படி, தாயின் வயிற்றில் இருந்து குழந்தை கற்றுக் கொள்ளும் நான்கு குணங்கள் உள்ளன. இந்தப் பண்புகளைக் கொண்ட குழந்தைகள் எதிர்காலத்தில் நிச்சயம் சாதிப்பார்கள். தாயின் வயிற்றிலிருந்தே குழந்தை பெறும் குணங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
தானம் செய்யும் குணம்
தாயின் வயிற்றிலேயே குழந்தை தானம் செய்யும் போக்கைக் கற்றுக்கொள்கிறார்கள் என்று சாணக்யநிதியின் 11வது அத்தியாயத்தின் முதல் ஸ்லோகத்தில் ஆச்சார்ய சாணக்கியர் கூறியுள்ளார். சாணக்கியரின் கூற்றுப்படி, எந்த ஒரு மனிதனும் பிறந்த பிறகு இந்த தர்மத்தை விரும்பினாலும் கற்றுக்கொள்ள முடியாது. பெற்றோருக்குக் கொடுக்கும் மனப்பான்மை இருந்தால், குழந்தைகளும் அதனை கற்றுக் கொள்வார்கள். அவர்கள் வளரும்போது அவர்களின் பெற்றோரைப் போலவே தானம் செய்கிறார்கள்.
மென்மையான பேச்சு
ஆச்சார்யா சாணக்கியரின் கூற்றுப்படி, குழந்தைகள் பெற்றோரின் குணநலன்களைப் பெறுகிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் பெற்றோர்கள் நல்லவர்களாகவும் இனிமையாகப் பேசுபவர்களாகவும் இருந்தால் இந்தக் குணம் தானாகவே குழந்தைகளுக்கும் வந்துவிடும்.
குழந்தைகள் இந்த குணங்களை தாயின் வயிற்றில் கற்றுக்கொள்கிறார்கள். ஜோதிட சாஸ்திரப்படி, ஜாதகத்தில் புதன் வலுவாக இருந்தால், அந்த நபர் மென்மையாக பேசுபவராக மாறுகிறார்.
பொறுமை
சாணக்கிய நீதியில் கூறியுள்ளபடி, ஒருவர் தனது தாயின் வயிற்றில் பொறுமை மற்றும் விடாமுயற்சி போன்ற நற்குணங்களைக் கற்றுக்கொள்கிறார். குழந்தை பருவத்திலிருந்தே பொறுமையாக இருக்கும் குழந்தைகள் எதிர்காலத்தில் வாழ்க்கையில் வெற்றிகரமான நபராக மாறுகிறார்கள்.
அத்தகையவர்கள் தங்கள் வாழ்க்கையில் அனைத்து சிரமங்களையும் எளிதில் சமாளிக்கிறார்கள். பிறந்த பிறகு இந்த குணத்தை ஒருவர் விரும்பினாலும் கற்றுக்கொள்ள முடியாது.
சரி மற்றும் தவறு
சாணக்கிய நீதியின் கூற்றுப்படி, ஒரு குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும்போதே சரி மற்றும் தவறு பற்றிய அறிவைக் கற்றுக்கொள்கிறது. பெற்றோரின் புத்திக்கூர்மை குழந்தைகளுக்கு அப்படியே அனுப்பப்படுகின்றன. அதனால்தான் எந்த மனிதனும் பிறந்த பிறகு இந்த குணநலன்களை விரும்பினாலும் கற்றுக்கொள்ள முடியாது.



Click it and Unblock the Notifications
