Latest Updates
-
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க.. -
கேது-சந்திரன் உருவாக்கும் கிரகண யோகம் 2026: இந்த 3 ராசிக்காரங்க கோடிகளை குவிக்கப்போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
இந்த ஒரு மூலிகை டீயை தொடர்ந்து 14 நாட்கள் குடித்தால் சிறுநீரக கல் கரையுமாம் - கூறும் ஆயுர்வேத டாக்டர்! -
பாபா வாங்கா-நோஸ்ட்ரடாமஸ் கணிப்பு படி மூன்றாம் உலகப்போருக்கு பின் எந்த நாடு சக்திவாய்ந்ததாக இருக்கும் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடைந்த குரு பகவான்: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாரெல்லாம் கவனமா இருக்கணும் தெரியுமா? -
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்...
சாணக்கிய நீதி படி குழந்தைகள் இந்த 4 நல்ல குணங்களை கருவில் இருக்கும்போதே கற்றுக்கொள்வார்களாம்...!
Chanakya Niti: சாணக்கியர் ஒரு சிறந்த ஆசிரியர், தத்துவஞானி, பொருளாதார நிபுணர், சட்ட நிபுணர் மற்றும் அரச ஆலோசகர் ஆவார். அவர் பண்டைய இந்திய அரசியல் நூலான அர்த்தசாஸ்திரத்தை எழுதியுள்ளார். அவர் கௌடில்யர் என்றும் விஷ்ணுகுப்தர் என்றும் அழைக்கப்படுகிறார். முதல் மௌரியப் பேரரசரான சந்திரகுப்தா ஆட்சிக்கு வருவதற்கு சாணக்கியரின் தந்திரங்களே உதவியது. மௌரியப் பேரரசை நிறுவுவதில் சாணக்கியரின் உத்திகள் முக்கியப் பங்கு வகித்தன.

மனிதர்களின் வாழ்க்கையின் பல அம்சங்களைப் பற்றிய அவரது கருத்துக்கள் இன்றும் பிரபலமானவை. சாணக்கியரின் வார்த்தைகளைப் பின்பற்றுவதன் மூலம் ஒருவர் எதையும் சாதிக்க முடியும் மற்றும் அவரது வாழ்க்கையை மிகவும் எளிதாக்கலாம்.
சாணக்கிய நீதி என்பது அவருடைய பல்வேறு அனுபவங்களிலிருந்து சாணக்கியரால் தேர்ந்தெடுக்கப்பட்ட பழமொழிகளின் தொகுப்பாகும். அதை விரிவாகப் பார்த்தால், நம் அன்றாட வாழ்வில் பயனுள்ள பல பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம். சாணக்கியரின் அறிவுரைகள் இன்றும் பொருத்தமானவை.
சாணக்கியரின் கூற்றுப்படி, தாயின் வயிற்றில் இருந்து குழந்தை கற்றுக் கொள்ளும் நான்கு குணங்கள் உள்ளன. இந்தப் பண்புகளைக் கொண்ட குழந்தைகள் எதிர்காலத்தில் நிச்சயம் சாதிப்பார்கள். தாயின் வயிற்றிலிருந்தே குழந்தை பெறும் குணங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
தானம் செய்யும் குணம்
தாயின் வயிற்றிலேயே குழந்தை தானம் செய்யும் போக்கைக் கற்றுக்கொள்கிறார்கள் என்று சாணக்யநிதியின் 11வது அத்தியாயத்தின் முதல் ஸ்லோகத்தில் ஆச்சார்ய சாணக்கியர் கூறியுள்ளார். சாணக்கியரின் கூற்றுப்படி, எந்த ஒரு மனிதனும் பிறந்த பிறகு இந்த தர்மத்தை விரும்பினாலும் கற்றுக்கொள்ள முடியாது. பெற்றோருக்குக் கொடுக்கும் மனப்பான்மை இருந்தால், குழந்தைகளும் அதனை கற்றுக் கொள்வார்கள். அவர்கள் வளரும்போது அவர்களின் பெற்றோரைப் போலவே தானம் செய்கிறார்கள்.
மென்மையான பேச்சு
ஆச்சார்யா சாணக்கியரின் கூற்றுப்படி, குழந்தைகள் பெற்றோரின் குணநலன்களைப் பெறுகிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் பெற்றோர்கள் நல்லவர்களாகவும் இனிமையாகப் பேசுபவர்களாகவும் இருந்தால் இந்தக் குணம் தானாகவே குழந்தைகளுக்கும் வந்துவிடும்.
குழந்தைகள் இந்த குணங்களை தாயின் வயிற்றில் கற்றுக்கொள்கிறார்கள். ஜோதிட சாஸ்திரப்படி, ஜாதகத்தில் புதன் வலுவாக இருந்தால், அந்த நபர் மென்மையாக பேசுபவராக மாறுகிறார்.
பொறுமை
சாணக்கிய நீதியில் கூறியுள்ளபடி, ஒருவர் தனது தாயின் வயிற்றில் பொறுமை மற்றும் விடாமுயற்சி போன்ற நற்குணங்களைக் கற்றுக்கொள்கிறார். குழந்தை பருவத்திலிருந்தே பொறுமையாக இருக்கும் குழந்தைகள் எதிர்காலத்தில் வாழ்க்கையில் வெற்றிகரமான நபராக மாறுகிறார்கள்.
அத்தகையவர்கள் தங்கள் வாழ்க்கையில் அனைத்து சிரமங்களையும் எளிதில் சமாளிக்கிறார்கள். பிறந்த பிறகு இந்த குணத்தை ஒருவர் விரும்பினாலும் கற்றுக்கொள்ள முடியாது.
சரி மற்றும் தவறு
சாணக்கிய நீதியின் கூற்றுப்படி, ஒரு குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும்போதே சரி மற்றும் தவறு பற்றிய அறிவைக் கற்றுக்கொள்கிறது. பெற்றோரின் புத்திக்கூர்மை குழந்தைகளுக்கு அப்படியே அனுப்பப்படுகின்றன. அதனால்தான் எந்த மனிதனும் பிறந்த பிறகு இந்த குணநலன்களை விரும்பினாலும் கற்றுக்கொள்ள முடியாது.



Click it and Unblock the Notifications












