Latest Updates
-
ஆண்களே! உங்க விந்துவை கெட்டிபடுத்தணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவிலிருந்து ரகசியமாக கொண்டுவந்த பொருட்கள் இப்ப கிடைச்சிருக்கு - அதுல என்னென்ன இருக்கு? -
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது! -
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும்
சாணக்கிய நீதி படி இந்த விஷயங்கள் தெரிஞ்சா போதும் வாழ்க்கையில் எல்லாரையும் உங்க கண்ட்ரோலில் வைக்கலாமாம்...!
Chanakya Niti: ஆச்சார்ய சாணக்கியர், ஒரு சிறந்த பொருளாதார நிபுணர் மற்றும் ஞானத்தில் சிறந்தவராக விளங்கினார், இப்போதும் தனது கொள்கைகளால் அவர் சமூகத்தை வழிநடத்துகிறார். அவரது புத்திக்கூர்மையின் வலிமையால், ஒரு எளிய குழந்தையான சந்திரகுப்த மௌரியரை நந்த வம்சத்தை அழித்து பேரரசராக மாற்றினார்.
சாணக்கியருக்கு பொருளாதாரம் மற்றும் அரசியல் பற்றிய நல்ல புரிதல் இருந்தது மட்டுமின்றி, ஏறக்குறைய அனைத்து விஷயத்திலும் ஆழ்ந்த அறிவும் இருந்தது. சாணக்கியர் தனது நெறிமுறைகளில் மனித சமுதாயத்தின் நலன் தொடர்பான பல முக்கியமான விஷயங்களைக் கூறியுள்ளார்.
ஆச்சார்யா சாணக்கியர் சிறந்த ராஜதந்திரி என்றும் அழைக்கப்படுகிறார், ஏனென்றால் அவர் தனது இராஜதந்திர உத்திகளால் யாரையும் கட்டுப்படுத்தக் கூடிய ஆற்றலுடன் இருந்தார். இன்றைய உலகத்தில் எல்லோரும் மற்றொரு நபரைக் கட்டுப்படுத்த விரும்புகிறார்கள், அதற்காக சிலர் தவறான முறைகளையும் பயன்படுத்துகின்றனர்.

ஆனால் சாணக்கியர் தனது நெறிமுறைகளில் சில விஷயங்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளார், அதன் மூலம் நீங்கள் யாரை வேண்டுமென்றாலும் கட்டுப்படுத்தலாம்.
புத்திசாலிகளைக் கட்டுப்படுத்துவது எப்படி?
சாணக்கியர் ஒரு புத்திசாலியான நபரைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினமான விஷயம் என்று கூறுகிறார். அதனை செய்வதற்கு ஒரே ஒரு வழி இருக்கிறது, அது ஒரு ஞானியின் முன் எப்போதும் உண்மையைப் பேசுவதாகும்.
உண்மையைப் பேசுவதன் மூலம் யாரையும் ஈர்க்க முடியும் என்று சாணக்கியர் நம்புகிறார். இதன் மூலம், அந்த நபரை உங்கள் விருப்பம் போல செயல்பட வைக்க முடியும்.
முட்டாளை கட்டுப்படுத்துவது எப்படி?
முட்டாள் மக்களைக் கட்டுப்படுத்த அவர்களை பாராட்ட வேண்டும். ஆச்சார்யா சாணக்கியர் ஒரு முட்டாள் சரியையும் தவறையும் அடையாளம் காண மாட்டான் என்று நம்புகிறார், எனவே நீங்கள் அவரைப் புகழ்ந்தால், அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்து உங்கள் பேச்சை கேட்கத் தொடங்குவார்கள்.
பேராசை பிடித்தவர்களைக் கட்டுப்படுத்துவது எப்படி?
பேராசை கொண்டவர்கள் யாருடனும் நெருங்கி பழகுவதில்லை, அவர்கள் செல்வத்தின் மீது மட்டுமே ஆர்வத்துடன் இருப்பார்கள் என்று சாணக்கியர் கூறுகிறார். எனவே பேராசைக்காரருக்கு பணத்தைக் கொடுத்தாலே எளிதில் அவர்களை அடக்கிவிடலாம்.
ஆணவக்காரர்களை கட்டுப்படுத்துவது எப்படி?
ஆணவக்காரர்களுக்கும், முட்டாளுக்கும் பெரிய வித்தியாசமில்லை. முட்டாளைப் போலவே இவர்களையும் எளிதில் கட்டுப்படுத்தி விடலாம். அவர்களிடம் அமைதியாக பேசுவதன் மூலமும், அமைதியாக இருக்குமாறு கோரிக்கை வைப்பதன் மூலமும் அவர்களைக் கட்டுப்படுத்தலாம்.
குழந்தைகளை கட்டுப்படுத்துவது எப்படி?
குழந்தைகளை கட்டுப்படுத்துவது என்பது பெற்றோருக்கு முன்னால் இருக்கும் மிகப்பெரிய சவாலாகும். குழந்தைகளின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து நிறைவான அன்பைக் கொடுத்தாலே போதும் அவர்கள் உங்கள் கட்டுப்பாட்டிற்குள் இருப்பார்கள். அன்பை விட அவர்களை கட்டுப்படுத்தும் பெரிய ஆயுதம் எதுவுமில்லை.



Click it and Unblock the Notifications
