Latest Updates
-
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்..
Budget 2024: இந்திய யூனியன் பட்ஜெட் பற்றி பலரும் அறியாத சில சுவாரஸ்யமான உண்மைகள்!
Budget 2024: 2024-2025 ஆம் ஆண்டிற்கான மத்திய யூனியன் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த பட்ஜெட்டை பாஜக தலைவரும், மத்திய நிதியமைச்சருமான நிர்மலா சீதாராமன ஜூலை 23 ஆம் தேதி காலை 11 மணியளவில் தாக்கல்ல செய்யவுள்ளார். இது நிர்மலா சீதாராமனின் 7 ஆவது பட்ஜெட் தாக்கலாகும்.
2019 ஆம் ஆண்டில் நிதியமைச்சராக பொறுப்பேற்ற சீதாராமன் கடந்த பிப்ரவரி 01 ஆம் தேதி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் மூன்றாவது முறையாக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தாக்கல் செய்யப்படுவதால் இந்த பட்ஜெட் குறித்த ஆவல் மக்களிடையே அதிகம் உள்ளது. இப்போது இந்தியாவின் யூனியன் பட்ஜெட் குறித்த சில சுவாரஸ்யமான விஷயங்களைக் காண்போம்.

முதல் பட்ஜெட்
இந்திய சுதந்திரம் பெற்ற பின் முதன் முதலாக பட்ஜெட்டை தாக்கல் செய்தவர் நாட்டின் முதல் நிதியமைச்சரான ஆர்.கே. சண்முகம் செட்டி ஆவார். இந்த பட்ஜெட் 1947 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இந்திய நாட்டின் முதல் பட்ஜெட்டை 1860 ஆம் ஆண்டு ஏப்ரல் 7 ஆம் தேதி ஜேம்ஸ் வில்சன் என்பவர் தாக்கல் செய்தார்.
அதிகப்படியான பட்ஜெட் தாக்கல்
இந்தியாவில் அதிகமாக பட்ஜெட் தாக்கல் செய்தவர் முன்னாள் பிரதம மந்தியான மொரார்ஜி தேசாய் ஆவார். இவர் 1962 முதல் 1969 ஆம் ஆண்டுகளுக்கு இடையே 10 பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். இந்தியாவில் இதுவரை அதிக பட்ஜெட் தாக்கல் செய்தவர் இவரேயாவார். தற்போது நிர்மலா சீதாராமன் இதை முறியடிக்கும் நிலையில் உள்ளார்.
பாஹி கட்டாவில் இருந்து காகிதம் இல்லாத பட்ஜெட்
இந்தியா சுதந்திரம் பெற்றது முதலாக பாஹி கட்டாவில் தான் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. ஆனால் நிர்மலா சீதாராமன் 2019 ஆம் ஆண்டில் இந்த பாரம்பரிய வழக்கத்தை மாற்றி காகிதம் இல்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இது பட்ஜெட் தாக்கலில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய முக்கியமான மாற்றமாகும். தற்போது பட்ஜெட் டேப்லெட் மூலம் தாக்கல் செய்யப்படுகிறது.
பட்ஜெட் கசிவு
1950-ல் பட்ஜெட் ஆவணங்கள் ராஷ்ட்ரபதி பவனில் இருந்து அதிகம் கசிந்தன. எனவே 1980 முதலாக பட்ஜெட் ஆவணங்களை பிரிண்ட் செய்யும் இடமானது வடக்கு பகுதியின் அடித்தளத்திற்கு மாற்றப்பட்டு, அங்கு தான் பட்ஜெட் ஆவணங்கள் பாதுகாப்பாக பிரிண்ட்டிங் செய்யப்பட்டு வந்தன.
இரண்டாவது அதிக பட்ஜெட் தாக்கல்
இந்தியாவிலேயே இரண்டாவதாக அதிகமாக பட்ஜெட் தாக்கல் செய்தவர் முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் 9 முறை மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். இவர் முதல் பட்ஜெட்டை 1996 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் தேதி அன்று செய்தார். கடைசியாக 2014 ஆம் ஆண்டில் பட்ஜெட் தாக்கல் செய்தார்.
நீண்ட பட்ஜெட் உரை
இந்தியாவில் நீண்ட பட்ஜெட் உரையை வழங்கியவர் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆவார். இவர் 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 01 ஆம் தேதி அன்று 2 மணிநேரம் 40 நிமிடங்கள் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதுவே இதுவரை இந்தியாவில் நடந்த நீண்ட பட்ஜெட் உரையாகும்.
குறுகிய பட்ஜெட் உரை
1977 ஆம் ஆண்டில் ஹிருபாய் முல்ஜிபாய் படேல் சுமார் 800 வார்த்தைகளில் பட்ஜெட் உரையை முடித்தார். இதுவே இந்தியாவில் நடந்த மிகக்குறுகிய பட்ஜெட் உரையாகும்.
பட்ஜெட் தாக்கல் செய்த பிரதம மந்திரிகள்
இதுவரை இந்தியாவில் ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி மற்றும் ராஜிவ் காந்தி ஆகியோர் இந்தியாவின் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளனர்.
பட்ஜெட் தேதி மற்றும் நேரம்
1999 ஆம் ஆண்டில் முன்னாள் நிதியமைச்சல் யாஷ்வந்த் சின்ஹா பட்ஜெட் தாக்கல் செய்யும் நேரத்தை காலை 11 மணியளவில் இருந்து மாலை 5 மணிக்கு மாற்றினார். அதேப் போல் 2017-ல் அர்ஜுன் ஜெய்ட்லி பட்ஜெட் தாக்கல் செய்யும் தினத்தை பிப்ரவரி 01 முதல் பிப்ரவரி கடைசி நாளாக மாற்றினார்.
இன்று பிரதமர் நரேந்திர மோடியின் 3.0 ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காலை 11 மணியளவில் 2024-2025 ஆம் ஆண்டிற்கான யூனியன் பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ளார். இந்த பட்ஜெட் மக்களுக்கு சாதகமாக இருக்குமா, இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.



Click it and Unblock the Notifications