Latest Updates
-
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்!
இந்த 5 ராசிக்காரங்கள விட்டு பிரிஞ்சா நஷ்டம் அவங்களுக்கு இல்ல உங்களுக்குத்தான்... பார்த்து நடந்துக்கோங்க!
காதல் பிரிவு அல்லது பிரேக்அப் என்பது மிகவும் வேதனையான விஷயம். இதை மக்கள் கடந்து வருவது சவாலான அனுபவங்களில் ஒன்றாகும். குறிப்பாக, பிரேக் அப் இருவரின் பரஸ்பர சம்மதம் இல்லாமல் நடக்கும்போது, ஒருவர் மட்டும் உறவில் அதிக முதலீடு செய்திருந்தால், அவர்களால் இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.
இன்றைய நாளில் பெரும்பலான மக்கள் பிரேக் அப்புகளை சந்தித்துதான் வந்திருக்கிறார்கள். அவர்களுக்குள் அந்த காயமும் வலியும் எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். சில சமயங்களில் ஒருவர் பிரேக் அப் செய்யும்போது, மற்றொருவர் இந்த நேரத்தில் அவசர முடிவுகளை எடுத்து தங்கள் உறவுகளை முடித்துக் கொள்கிறார்கள். பின்னர் வருத்தப்படுவார்கள்.

ஆனால், மற்ற நேரங்களில், காதல் முறிவு அல்லது உறவு முறிவு ஏற்படுவது இரு தரப்பினருக்கும் நல்லது. அவர்கள் ஒரு சலிப்பான அல்லது மோசமான உறவிலிருந்து வெளியேறுவது மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் சிறந்த நபர்களாகவும் மாற வாய்ப்புள்ளது. ஆனால், சிலர் ஆரோக்கியமான உறவிலிருந்து வெளியேறுவது எதிர்காலத்தில் அவர்களை வருத்தப்பட வைக்கும்.
இப்போது, ஜோதிடத்தைப் பொறுத்தவரை, சில ராசிக்காரர்கள் அவர்களை அன்பான மற்றும் மறக்க முடியாத கூட்டாளிகளாக மாற்றும் குணங்களைக் கொண்டுள்ளனர். இந்த ராசிக்காரர்களை பிரிந்து செல்வது என்பது எதிர்காலத்தில் உங்கள் முடிவிற்கு உண்மையிலேயே உங்களை வருத்தப்பட வைக்கும். எந்தெந்த ராசிக்காரர்களை நீங்கள் பிரிந்து சென்றால் எதிர்காலத்தில் வருத்தப்படுவீர்கள் என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் மிகவும் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள். காதல் உறவுகளுக்கு என்று வரும்போது, அவர்களின் அன்புக்கும் பாராட்டுக்கும் எல்லையே இருக்காது. மோதல்களைத் தவிர்ப்பதற்கும், அவற்றைத் தீர்ப்பதற்கும், உறவு வாழ்க்கை சுமூகமாக செல்ல அதிக முயற்சி எடுக்கும் நபர்களாக இந்த ராசிக்காரர்கள் இருப்பார்கள்.
எனவே, நீங்கள் ஒரு கடக ராசிக்காரர்களின் மனதை காயப்படுத்தினால், அதைச் செய்வதற்கு உங்களுக்கு ஒரு காரணம் இருக்கலாம். இந்த ராசிக்காரர்கள் தங்களை போலவே சமமான தீவிரம் கொண்ட ஒரு நபரை நேசிக்கிறார்கள் மற்றும் அதே அளவு வெறுக்கிறார்கள். நீங்கள் அவர்களுக்கு அந்நியராக மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். மேலும் நீங்கள் ஒருமுறை பகிர்ந்து கொண்ட அன்பு எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காது.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் தங்கள் கூட்டாளிகளை உறவில் மகிழ்ச்சியாக வைத்திருக்கும் போது மென்மையான காதலர்களாக இருப்பார்கள். பாசம் மற்றும் இரக்கத்தின் சிறிய செயல்கள் மற்றும் சைகைகளில் நீங்கள் அவர்களுக்கு எவ்வளவு அர்த்தம் என்பதை காட்ட அவர்கள் ஒருபோதும் வெட்கப்பட மாட்டார்கள். ஆனால், இது முற்றிலும் நேர்மையான நேசிப்பை குறிக்கிறது.
அவர்கள் 'காதலில் எல்லாம் நியாயமானது' என்பதில் தீவிர நம்பிக்கை கொண்டவர்கள் மற்றும் காரணங்கள் நியாயப்படுத்தப்படாவிட்டால் உணர்ச்சிப் போரை நடத்துவதில் இருந்து பின்வாங்க மாட்டார்கள். அவர்கள் உங்களை எப்படி நேசிக்கிறார்கள் என்பதை உங்களிடம் காட்டியிருந்தால், நீங்கள் அவர்களை எவ்வளவு காயப்படுத்தியிருக்கிறீர்கள் என்பதையும் உறுதியாக உங்களுக்கு காட்டுவார்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் காதல் மற்றும் இதய துடிப்பு இரண்டிலும் உணர்ச்சிவசப்பட்ட நபர்கள். நீங்கள் அவர்களின் மனதை உடைத்த பிறகு, வெறுப்பும் கோபமும் ஒரு கலவையாக அவர்களிடம் இருக்கும். எனவே, உங்கள் பகுத்தறிவு எவ்வளவு தர்க்கரீதியாக இருந்தாலும், நீங்கள் பிரிந்து செல்வதற்கான யோசனையை முன்வைத்தவுடன் சில வசைபாடுகளை ஏற்றுக்கொள்ள தயாராகுங்கள்.
கோபம், மோதல்கள் மற்றும் சில சூடான வாக்குவாதங்கள் நடக்கலாம். இந்த ராசிக்காரர்கள் நிச்சயமாக அவர்கள் எப்படி உணர்கிறார்கள் என்பதை உங்களுக்கு காட்டுவார்கள். மேலும் சில அலறல்களைக் கேட்க நீங்கள் தயாராக வேண்டும். அவர்களை விட்டு நீங்கள் பிரிந்து சென்றதுக்கு உங்களை வருத்தப்பட வைப்பார்கள்.
துலாம்
தனுசு ராசிக்காரர்கள் ஆரம்பத்தில் உணர்ச்சிகரமான காதல் வாழ்க்கையில் இருப்பது போல தோன்றாவிட்டாலும், அவர்கள் காதலில் விழுந்தவுடன், மிக ஆழமாக செல்கிறார்கள். தனுசு ராசியுடனான வெற்றிகரமான உறவில் தம்பதிகள் இருவரும் ஒருவருக்கொருவர் தேவைகள் மற்றும் சுதந்திரத்தைப் புரிந்துகொண்டு மதித்து நடப்பார்கள்.
அந்த உறவில் பிரிவு ஏற்படும் போது, அவர்கள் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கு உள்ளாகிறார்கள். பிரிந்து செல்வதை இந்த ராசிக்காரர்கள் உணரும்போது, அவர்கள் மிகவும் அழகாக நடந்துகொள்ளத் தொடங்கலாம் அல்லது வழக்கத்தை விட அதிக அன்பைக் காட்டலாம்.
பிரிந்து செல்வதைத் தடுப்பது இயற்கையானது. இதில், தனுசு ராசிக்காரர்கள் பொதுவாக உங்களைத் தக்கவைத்து உறவைப் பாதுகாக்க எந்த எல்லைகளைத் தாண்டிச் செல்வார்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் மிகவும் உணர்ச்சிகரமான நபர்கள் மற்றும் அவர்களுடன் காதல் வாழ்க்கையில் இருப்பது கிட்டத்தட்ட ஒரு கனவு போன்றது. ஆனால், உறவில் சிறிதாக பிரிவு ஏற்படும்போது, அவர்கள் பாதுகாப்பற்றதாக உணர ஆரம்பிக்கிறார்கள் மற்றும் அதை மிகவும் கடினமாக எடுத்துக்கொள்கிறார்கள். அது உண்மையில் அவர்களின் தவறாக இல்லாவிட்டாலும் கூட, 'தவறுகளுக்கு' அவர்கள் வருந்துவதைப் பிடித்து, மேம்படுத்துவதாக உறுதியளித்து உறவைக் காப்பாற்ற முயற்சிப்பீர்கள்.
அவர்கள் மிகவும் சோகமாகவும் உணர்ச்சிப்பூர்வமாகவும் மனவேதனையை அடைந்து விடுவார்கள். மேலும் நீங்கள் பிரிந்து சென்றவுடன் உங்களிடமிருந்து எல்லா உறவுகளையும் துண்டித்துக்கொள்வதை உறுதி செய்வார்கள். நீங்கள் அவர்களின் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இல்லை என்பதை அவர்கள் உறுதி செய்வார்கள்.



Click it and Unblock the Notifications
