Latest Updates
-
கல்லீரலில் உள்ள நச்சுக்களை டக்குனு வெளியேற்றி உயிரைக் காக்கும் சிறந்த 10 உணவுகள் -
முட்டை தக்காளி குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
சனிபகவான் மீன ராசியில் உதயமாவதால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
பாபா வங்காவின் கணிப்பு படி 2026-ல் இந்த நாட்டில் பேரழிவை ஏற்படுத்தும் சுனாமி வரப்போகுதாம் -
1 மாங்காயும், 3 தக்காளியும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 22 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமா வாகனம் ஓட்டணும் -
May 2026 Lucky Zodiac Signs: மே மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. -
சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்கப் போவதால் கோடீஸ்வரராகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்துப்படி, வீட்டில் மண்பானையை இந்த இடத்துல வையுங்க.. பணப்பிரச்சனையே வராது! -
அட்டகாசமான ஆந்திரா ஸ்டைல் வெள்ளரிக்காய் பப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க
பாபா வாங்காவின் கணிப்பு படி 2025-ன் இரண்டாம் பாதியில் நடக்கப்போகும் பேரழிவுகள் என்னென்ன தெரியுமா?
Baba Vanga's 2025 Prediction: 2025 ஆம் ஆண்டு தொடங்கி இன்றோடு பாதி வருடம் முடியப்போகிறது. மூன்றாம் உலகப்போருக்கான தொடக்கம் முதல் ஏர் இந்தியா விமானத்தின் விபத்து வரை உலகம் பல அசம்பாவிதங்களை பார்த்து விட்டது. இதில் அதிர்ச்சியளிக்கும் விஷயமாக இன்னும் பல அசம்பாவிதங்கள் நடைபெற போகிறது என்று பல தீர்க்க தரிசனங்கள் கூறுகிறது. குறிப்பாக உலக புகழ்பெற்ற பாபா வாங்காவின் கணிப்பு படி 2025-ன் இரண்டாம் பகுதியில் பல ஆபத்தான சம்பவங்கள் நடைபெறப்போகிறது.
'பால்கன்ஸின் நாஸ்ட்ராடாமஸ்' என்று பிரபலமாக அறியப்பட்ட வான்ஜெலியா பாண்டேவா குஷ்டெரோவா, பின்னர் பாபா வாங்கா என்று அழைக்கப்பட்டார், அக்டோபர் 3, 1911 அன்று அப்போது ஒட்டோமான் பேரரசின் ஒரு பகுதியாக இருந்த சலோனிகா விலாயெட்டில் உள்ள ஸ்ட்ரூமிகாவில் பிறந்தார். பாபா வாங்கா தனது 12 வயதில் பார்வையை இழந்தார், அதன்பின் அவர் எதிர்காலத்தை கணிக்கும் சக்தியை பெற்றதாக கூறப்படுகிறது.

எப்படி புகழ் பெற்றார்?
பல்கேரியாவின் பெலாசிகா மலைகளில் உள்ள ரூபைட் பகுதியில் தனது வாழ்க்கையின் பெரும்பகுதியைக் கழித்த வாங்கா, 1970களின் பிற்பகுதியிலும் 1980களின் பிற்பகுதியிலும், அவரது சக்திவாய்ந்த தீர்க்கதரிசனங்களுக்காக புகழ் பெற்றார். 20 ஆம் நூற்றாண்டின் மிகவும் பிரபலமான மாயவாதிகளில் ஒருவராகக் கருதப்படும் பாபா வாங்கா 1996 இல் இறந்தார், ஆனால் எதிர்காலத்திற்கான தீர்க்கதரிசனங்களை அவர் கணித்து சென்றுள்ளார். அவருடைய தீர்க்கதரிசனங்களை இன்றும் உலகம் முழக்க கோடிக்கணக்கான மக்கள் பின்பற்றுகிறார்கள். 2025-ஆம் ஆண்டின் இரண்டாம் பாதிக்கு பாபா வாங்கா கணித்துள்ள ஆபத்தான தீர்க்க தரிசனங்கள் என்னென்ன என்று மேற்கொண்டு பார்க்கலாம்.
ஆசியாவில் இயற்கை பேரழிவுகள்
ஆசியாவில், குறிப்பாக ஜப்பானுக்கு அருகில், பேரழிவை ஏற்படுத்தும் நீருக்கடியில் ஏற்படும் பூகம்பம் அல்லது சுனாமியை பாபா வாங்கா கணித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த பேரிடர் கடலோர நகரங்களை பாதிக்கும் மற்றும் உலகளாவிய பதட்டத்தை ஏற்படுத்தும். பசிபிக் நெருப்பு வளையத்தில் ஜப்பான் அமைந்துள்ளதால், இந்த முன்னறிவிப்பு புவியியலாளர்கள் மற்றும் குடிமக்களை பயத்தில் ஆழ்த்தியுள்ளது, குறிப்பாக பிராந்தியத்தில் அதிகரித்து வரும் நில அதிர்வு செயல்பாடுகளால், இந்த தீர்க்கதரிசனம் பலித்துவிடுமோ என்று மக்கள் அஞ்சுகிறார்கள். புதிய பாபா வாங்காவான ரியோ தாட்சுகியும் ஜூலை மாதத்தில் ஜப்பானில் ஒரு பேரழிவு ஏற்படும் என்று கணித்துள்ளார்.
உலகளாவிய பொருளாதார சரிவு
2025 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் கடுமையான பொருளாதார நெருக்கடியை உலகம் சந்திக்கும் என்று பாபா வாங்கா முன்னறிவித்ததாகக் கூறப்படுகிறது. இந்த பொருளாதார சரிவு உலகளாவிய பிரச்சினையாக மாறி, வேலையின்மை, வறுமை மற்றும் முக்கிய நிறுவனங்களில் வீழ்ச்சியை ஏற்படுத்தும். இந்த தீர்க்கதரிசனம் உலகம் முழுவதும் கடன், பணவீக்கம் மற்றும் பலவீனமான பொருளாதார அமைப்புகளிடையே அச்சங்களை ஏற்படுத்தியுள்ளது.
வேற்று கிரக வாசிகளுடனான தொடர்பு
மனிதகுலம் விரைவில் பூமிக்கு வெளியே உள்ள உயிரினங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம் அல்லது தொடர்பு கொள்ளலாம் என்று பாபா வாங்கா கணித்துள்ளார். விண்வெளி ஆய்வு மற்றும் வேற்றுகிரகவாசிகளின் மீதான ஆர்வம் அதிகரித்து வருவதோடு அவரது கணிப்புகள் ஒத்துப்போகின்றன. வேற்றுகிரக வாசிகள் பற்றிய கணிப்புகள் சுவாரஸ்யமானதாக இருந்தாலும், அத்தகைய தொடர்பு கணிக்க முடியாத விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும், மனிதகுலத்தின் வரலாற்றை மாற்றக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
புதிய நோய்கள் பரவக்கூடும்
மருத்துவத் துறையில் பெரிய முன்னேற்றம் ஏற்படலாம் என்று பாபா வாங்கா முன்னறிவித்திருந்தாலும், சில விசித்திரமான புதிய நோய்கள் உலகில் பரவலாம் என்பதையும் அவர் கணித்துள்ளார். பாபா வாங்காவின் ஆதரவாளர்கள் அவரது தீர்க்கதரிசனங்களை COVID-19 போன்ற தொற்றுநோய்களுடன் இணைத்து, சுற்றுச்சூழல் மாற்றங்கள், பிறழ்வுகள் அல்லது உயிரியல் விபத்துகளால் ஏற்படும் எதிர்கால நோய்கள் குறித்து அஞ்சுகின்றனர்.
மருத்துவத்துறையில் முன்னேற்றம்
பாபா வாங்காவின் கணிப்புகள் அனைத்தும் எதிர்மறையானவை அல்ல. ஆயுட்காலத்தை நீட்டிக்கவும் குணப்படுத்த முடியாத நோய்களுக்கு சிகிச்சையளிக்கவும் கூடிய மருத்துவ முன்னேற்றங்கள் இந்த ஆண்டில் ஏற்படலாம் என்று பாபா வாங்கா கணித்துள்ளார். மரபணு சிகிச்சைகள், வயதாவதை எதிர்க்கும் சிகிச்சைகள் மற்றும் புதிய மருத்துவ முறைகள் உலகிற்கு புதிய நம்பிக்கையைக் கொண்டுவரக்கூடும்,



Click it and Unblock the Notifications












