Latest Updates
-
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
ஆங்கிலேயர்களுக்கே கடன் கொடுத்து இந்தியாவில் முதன் முதலாக கார் வாங்கிய பணக்கார வியாபாரி யார் தெரியுமா? -
மீன ராசியில் அஸ்தமனமாகும் சனி பகவான்: மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்... -
கடுகளவும் பொறுமையில்லாத 4 ராசிக்காரங்க இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
மூங்கில் அரிசி கிச்சடி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 09 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம்...! -
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்...
பாபா வாங்கா கணிப்பு படி உலகம் அழிவதற்கு இன்னும் எத்தனை வருடம் மீதமுள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க...!
'பால்கன்ஸின் நாஸ்ட்ராடாமஸ்' என்று அடிக்கடி அழைக்கப்படும், கண் பார்வையற்ற பல்கேரிய தீர்க்கதரிசியான பாபா வங்கா, உலகை மாற்றியமைத்த பல நிகழ்வுகளை அவை நடப்பதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே கணித்ததாகக் கூறப்படுகிறது. அவருடைய பல கணிப்புகள் சர்ச்சைக்குரியவையாகவே இருக்கின்றன என்பது உண்மையென்றாலும், உலகம் மோசமான சூழ்நிலைகளை சந்திக்கும் போதும், ஒவ்வொரு வருடம் பிறக்கும் போதும் அவரின் கணிப்புகள் மீண்டும் மீண்டும் விவாதத்திற்கு வருகின்றன.
இப்போது, பாபா வாங்காவின் கணிப்பு மீண்டும் ஒரு விவாதப் பொருளாக மாறியுள்ளது, ஏனெனில் அது மனிதகுலத்தின் அழிவுக்கு ஏற்கெனவே ஒரு தேதி நிர்ணயிக்கப்பட்டுவிட்டதாகக் கூறுகிறது. இந்த பதிவில் உலகத்தின் முடிவு எந்த வருடத்தில் நடக்கப்போகிறது என்று தெரிந்து கொள்ளலாம்.

உலகின் முடிவு எப்போது?
பாபா வங்கா 5079 ஆம் ஆண்டில் மனிதகுலத்தின் இறுதி அழிவு நிகழும் என்று கணித்துள்ளார். அந்த ஆண்டில், 'நினைத்துப் பார்க்க முடியாத' அளவிலான ஒரு பிரபஞ்ச நிகழ்வு, இந்தப் அண்டத்திற்கே முழுமையான அழிவைக் கொண்டுவரும். "அவரது தீர்க்கதரிசனம், மனிதகுலத்தின் பரிணாம வளர்ச்சி, தொழில்நுட்ப முன்னேற்றங்கள், மோதல்கள் மற்றும் இறுதியான அழிவு ஆகியவற்றை சித்தரிக்கும் ஒரு விரிவான காலவரிசையைப் பின்பற்றுகிறது." பாபா வாங்கா கணித்துள்ள உலகில் அழிவை ஏற்படுத்தப்போகும் முக்கிய தேதிகள்,
- 3005-ல் செவ்வாய் கிரகத்தில் போர்
- 3010-ல் சந்திரன் மோதல்
- 3797-ல் பூமியில் உயிரினங்களின் அழிவு
பாபா வாங்காவின் கூற்றுப்படி, 4300-களுக்குள் மனிதகுலம் தொழில்நுட்பரீதியாகவும், தார்மீகரீதியாகவும் முன்னேறி, அனைத்து நோய்களையும் குணப்படுத்தும். 4674-ஆம் ஆண்டில் நாகரிகம் அதன் உச்சத்தை அடையும், அப்போது பல கோள்களில் 340 பில்லியன் மக்கள் தொகை இருக்கும்.
இறுதி ஆண்டுகளில், மனிதர்கள் பிரபஞ்சத்தின் எல்லையைக் கண்டுபிடித்து, அதற்கு அப்பால் பயணிக்க வேண்டிய அவசியம் உள்ளதா என்பது குறித்து விவாதிப்பார்கள். 5079-ஆம் ஆண்டுக்குள், இந்த முடிவோ அல்லது அதனுடன் தொடர்புடைய ஏதேனும் ஒரு பேரழிவோ, ஒரு 'முழுமையான பேரழிவைத்' தூண்டி, மனித நாகரிகத்திற்கும் பிரபஞ்சத்திற்கும் முடிவுகட்டும்.
இதற்கிடையில், பாபா வங்கா தனது கணிப்புகள் குறித்து எந்த எழுத்துப்பூர்வ பதிவுகளையும் விட்டுச் செல்லவில்லை. இவற்றில் பெரும்பாலானவை அவரது மருமகள் கிராசிமிரா ஸ்டோயனோவாவிடமிருந்தோ அல்லது அவரது மரணத்திற்குப் பிறகு அவரது கணிப்புகளை ஆவணப்படுத்திய மற்ற சீடர்களிடமிருந்தோ வந்தவை. உலகின் அழிவு மட்டுமின்றி 2026-ஆம் ஆண்டுக்கான சில ஆபத்தான கணிப்புகளையும் பாபா வாங்கா கணித்துள்ளார்.
மூன்றாம் உலகப் போர்
இது பாபா வாங்காவின் மிகவும் பரபரப்பான கணிப்புகளில் ஒன்றாகும். பாபா வாங்காவின் கணிப்புப்படி மூன்றாம் உலகப்போர் நிச்சயம் நடைபெறும். அறிக்கைகளின்படி, உலக நாடுகளிடையே அதிகரித்து வரும் பதட்டமான சூழல் பற்றி பாபா வாங்கா எச்சரித்துள்ளார். இதில் தைவானை சீனா கைப்பற்றுவதற்கான வாய்ப்பு மற்றும் ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட வாய்ப்பு ஆகியவையும் அடங்கும்.
இயற்கைப் பேரழிவுகள்
இது 2026-ஆம் ஆண்டிற்கான மற்றொரு ஆபத்தான கணிப்பாகும். இது ஆபத்தான இயற்கை பேரழிவுகளைப் பற்றியது. அவரது கணிப்புகளின் படி, 2026-ல் அவர் பல தீவிரமான நிலநடுக்கங்கள், கடுமையான எரிமலை வெடிப்புகள் மற்றும் தீவிர வானிலை நிலைகளை முன்னறிவித்துள்ளார்.
ஏலியன்களுடனான தொடர்பு
மனிதர்கள் ஏலியன்களுடன் தொடர்பு கொள்வதற்கு நீண்ட காலமாக முயற்சித்து வருகின்றனர். 2026-ஆம் ஆண்டில் இந்த முயற்சிகளுக்கும் பலன் கிடைக்கும் என்று பாபா வாங்கா கணித்துள்ளார். 2026-ஆம் ஆண்டில் மனிதகுலம் வேற்று கிரக உயிரினங்களை எதிர்கொள்ளக்கூடும் என்று பாபா வாங்கா உறுதியாகக் கூறுகிறார்.



Click it and Unblock the Notifications












