Latest Updates
-
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...!
இந்தியாவின் முதல் சுதந்திர போராட்டத்தின் முக்கியப்புள்ளியாக இருந்த இந்த தாசியை பற்றி உங்களுக்கு தெரியுமா?
இந்தியாவின் முதல் அங்கீகரிக்கப்பட்ட சுதந்திர போராட்டம் எதுவென்றால் அது 1857-ல் நடந்த சிப்பாய் கலகம்தான். 1857 இல் இந்தியாவின் முதல் சுதந்திரப் போரின்போது அதிகளவு போராட்டங்களால் போர்க்களமாக மாறிய நகரங்களில் கான்பூரும் முக்கியமானதாகும். ஆங்கிலேயர்களை எதிர்த்து ராணி லக்ஷ்மி பாய், தாத்யா தோபே மற்றும் நானா சாஹேப் தலைமையிலான இந்தியப் படைகள் கடுமையாக போரிட்டு வந்தது.
இருப்பினும், இந்த போராட்டத்தில் அஜிசுன் நிசா என்ற தாசியின் பங்களிப்புகள் பற்றி வரலாற்றில் குறிப்பிடப்படவில்லை. இந்த போராட்டத்தில் அவர் தனது சொந்த நாட்டிற்காக போர்வீரராக மாறினார்.

அஜிசுன் நிசா
அஜிசுன் பாய் என்றும் அழைக்கப்படும் அஜிசுன் நிசா லக்னோவில் பிறந்தார், ஆனால் அவரின் வாழ்க்கை கான்பூரில் இருந்தது. அங்கு அவர் ஒரு விபச்சாரியாக மிகவும் பிரபலமானவராக இருந்தார். அவர் தனது வாழ்க்கையில் பல திறமையான முடிவுகள் மூலம் தான் ஒரு தந்திரசாலி என்பதை நிரூபித்தார்.
42 வது குதிரைப்படையைச் சேர்ந்த ஷம்சுதீன் சவாருடன் அஜிசுன் மிகவும் பிரபலமான மற்றும் வெளிப்படையான காதல் உறவைக் கொண்டிருந்தார். இதுவே 1857 ஆம் ஆண்டின் கிளர்ச்சியில் அவரும் பங்கேற்க காரணமாக இருந்திருக்கலாம். அவர் ஆங்கிலேயருக்கு எதிரான உள்நாட்டு கிளர்ச்சியாளர்களுக்காக உளவு பார்த்ததாகவும், 1857 கிளர்ச்சியில் உதவிய முக்கியமான தகவல்களை அனுப்ப உதவினார் என்றும் கூறப்படுகிறது.
இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் தங்களுக்குள் இரகசிய சந்திப்புகளை நடத்துவதற்கு அடிக்கடி அஜிசுன் நிசாவின் இருப்பிடத்தை பயன்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. சுதந்திர போராட்ட வீரர்களுக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை சேகரித்து விநியோகித்ததைத் தவிர, அவர் பெண்களுக்கு சண்டையிட பயிற்சி அளித்ததாக நம்பப்படுகிறது.
1857 ஆம் ஆண்டு இந்தியக் கிளர்ச்சியின் முக்கிய அத்தியாயமான கான்போர் முற்றுகையின் போது அதில் அவரது பங்கு அதிகமாக இருந்தது. அஜிசுன் பாய் தனது தலைமையகத்தை பிரிட்டிஷ் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய துப்பாக்கி பேட்டரிகளில் ஒன்றில் நிறுவினார். அவள் வீரர்களுடன் தங்கியிருந்தார், தேவை ஏற்பட்டபோது, துப்பாக்கிகளுடன் போர்க்களத்தில் புகுந்தார்.

முக்கியமாக போர் செய்யாதவர்களாகக் காணப்பட்ட தாசிகள், துரதிர்ஷ்டவசமாக இந்திய சுதந்திர போராட்டத்தில் ஓரம் கட்டப்பட்டனர். அவர்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக நிதியுதவி மற்றும் திட்டங்கள் தீட்டுவதில் மிக முக்கியமான பங்கைக் கொண்டிருந்தனர்.
அஜிசுன் நிசாவின் கதை புறக்கணிக்கப்பட்ட தாசிகளின் கதைகளுக்கு ஒரு உதாரணம் மட்டுமே. சுதந்திர போராட்டத்தில் அவர்களின் பங்கு மிகவும் தீவிரமாக இருந்தது, கிளர்ச்சியை அடக்கிய பிறகு, பிரிட்டிஷ் அரசு அவரைக் குறிவைத்தன. அவர்களின் சொத்துக்களை அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக பறிமுதல் செய்யப்பட்டன. அப்போது 'தவைஃப்கள்' என்று குறிப்பிடப்பட்ட தாசிகள், அவர்களின் சமூக அந்தஸ்தை பறிக்கும் வகையில் ஒழுக்கத்தின் அடிப்படையில் நிலைநிறுத்தப்பட்டனர். அஜிசுன் நிசா காலத்தில், "தவைஃப்" என்பது இன்றைய காலத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட பொருளைக் கொண்டிருந்தது. பாரம்பரிய இசை, பாரம்பரிய நடனங்கள் மற்றும் இசைக்கருவிகளில் முறையான பயிற்சி ஆகியவற்றில் நுட்பமான பயிற்சி பெற்ற பெண்கள் மட்டுமே தவைஃப் ஆக முடியும்.
அஜிசுன் நிசா முற்றுகையிலிருந்து தப்பியதாகவும், ஆங்கிலேயர்களால் கைதியாகப் பிடிக்கப்பட்டதாகவும் நம்பப்படுகிறது. கிளர்ச்சியின் முக்கிய சதிகாரர்களில் அஜிசுன் நிசாவும் ஒருவர் என்று அவர்கள் குற்றம் சாட்டி, அவர் அதை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டார். ஆனால், அவளுடைய தைரியம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது, ஏனென்றால் அவர் ஒருபோதும் அவர்களின் கோரிக்கைகளுக்கு அடிபணியவில்லை.



Click it and Unblock the Notifications











