Latest Updates
-
ஹோட்டல் ஸ்டைல் ராயல் தேங்காய் சட்னி ரெசிபி... இந்த பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க... செமையா இருக்கும்...! -
புடலங்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க...எல்லாத்துக்கும் செம சைடிஷா இருக்கும்! -
ஆரோக்கியமான விந்தணுவின் அறிகுறிகள்... உங்ககிட்ட இந்த அறிகுறிகள் இருக்கா? செக் பண்ணிக்கோங்க...! -
இந்த 4 ராசிக்காரங்க சாத்தானின் செல்ல குழந்தைகளாம்... தீய குணங்கள்தான் இவங்ககிட்ட அதிகமா இருக்குமாம்,,,! -
கொங்குநாடு தக்காளி குருமா ரெசிபி... இதை ஒருதடவை செஞ்சு பாருங்க...இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும்...! -
2K கிட்ஸ் அதிகம் விரும்பும் Slow Dating என்றால் என்ன? இளைஞர்கள் ஏன் டேட்டிங்கை விரும்புகிறார்கள் தெரியுமா? -
சனிபகவான்-சுக்கிரனின் அரிய இணைப்பால் இந்த 3 ராசிக்காரர்கள் வாழ்க்கையில் அற்புத மாற்றங்கள் நிகழப்போகுதாம்...! -
1/2 கப் கோதுமை ரவா இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 05 மார்ச் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமாக வாகனம் ஓட்டணும்...! -
12 ஆண்டுக்கு பின் நடக்கும் குருபகவானின் நேரடி இயக்கத்தால் இந்த 3 ராசிகள் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்...
ஆயுத பூஜை 2025: இந்த ஆயுத பூஜையன்று பூஜை செய்ய சரியான முகூர்த்த நேரம் எது தெரியுமா?
Ayudha Puja 2025: நவராத்திரி வட இந்தியாவில் தசராவாக கோலாகலமாக கொண்டாடப்பட்டாலும் தென்னிந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு வடிவங்களில் கொண்டாடப்படுகிறது. தென்னிந்தியாவில் மகா நவராத்திரி ஆயுத பூஜையாக கொண்டாடப்படுகிறது, இந்த பண்டிகை கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கேரளாவில் கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில் அனைவரும் தங்கள் செழிப்பு மற்றும் அதிர்ஷ்டத்துக்காக கருவிகளை சுத்தம் செய்து வழிபடுகிறார்கள். இந்த பூஜை ஒரு காலத்தில் ஆயுதங்களை மையமாகக் கொண்டிருந்தது, ஆனால் இப்போது அனைத்து வகையான கருவிகளையும் அது உள்ளடக்கியதாக இருக்கிறது. இந்தியாவின் பிற இடங்களில் உள்ள விஸ்வகர்மா பூஜையைப் போலவே, ஆயுத பூஜை திறமை மற்றும் புதுமைகளை மதிக்கிறது. இந்த ஆண்டு, ஆயுத பூஜை அக்டோபர் 1, 2025 அன்று அனுசரிக்கப்படுகிறது. ஆயுத பூஜைக்கான தேதி, நேரம், முக்கியத்துவம் மற்றும் சடங்குகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ஆயுத பூஜை 2025: தேதி மற்றும் நேரம்
- ஆயுத பூஜை 2025 தேதி: 1 அக்டோபர் 2025, புதன்கிழமை
- நவமி திதி ஆரம்பம்: 06:06 PM, 30 செப்டம்பர் 2025
- நவமி திதி முடியும்: 07:01 PM, 1 அக்டோபர் 2025
- முகூர்த்தம்: ஆயுதபூஜை செய்வதற்கான முகூர்த்தம் பிற்பகல் 02:12 முதல் 03:00 மணி வரை.
ஆயுத பூஜையின் முக்கியத்துவம்
ஆயுத பூஜையின் போது, ஆயுதங்கள் மற்றும் கருவிகளை வழிபடுவது ஆன்மீக உணர்வு மற்றும் நிறைவை ஏற்படுத்துகிறது. கருவிகள் மற்றும் இயந்திரங்கள் சுத்தம் செய்யப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, மஞ்சள் மற்றும் சந்தனத்தால் திலகமிடப்பட்டு, குங்குமம் வைக்கப்படுகிறது. தொழில்துறை, விவசாயம் அல்லது கல்வி நோக்கங்களுக்காக, இந்த விழா கருவிகளை மதிக்கிறது மற்றும் அன்றாட வாழ்க்கையில் அதன் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கிறது.
இந்த பூஜை ஒருவரின் கருவிகளுடன் நெருக்கமான பிணைப்பை வளர்க்கிறது, இது சுயக்கட்டுப்பாடு மற்றும் திறமையை மேம்படுத்துகிறது. இந்த பூஜை ஒருவரின் தொழில் மற்றும் அதை ஆதரிக்கும் கருவிகள் மீதான பாராட்டையும் மரியாதையையும் வளர்ப்பதன் மூலம் இணக்கமான உறவை ஊக்குவிக்கிறது.
ஆயுத பூஜை சடங்குகள்
ஆயுத பூஜைக்கான சடங்குகளில் வீட்டை அல்லது பணியிடத்தை முழுமையாக சுத்தம் செய்வது முதல் படியாகும். இந்த நாளில் வாகனங்கள் கழுவப்பட்டு, கருவிகள் மற்றும் உபகரணங்கள் சுத்தம் செய்யப்படுகின்றன. தெய்வங்களின் சிலைகளை அலங்கரிக்க குங்கும பொட்டு மற்றும் சந்தனம் பயன்படுத்தப்படுகின்றன. பக்தர்கள் சரஸ்வதி மற்றும் லட்சுமி தேவியை சிவப்பு மற்றும் வெள்ளை நிற புடவைகளில் அலங்கரிக்கிறார்கள். பூக்கள், மா இலைகள் மற்றும் வாழைக்கன்று வைத்து வீடுகள் அலங்கரிக்கப்படுகிறது. படைப்பாற்றல் மற்றும் அறிவுக்கான ஆசீர்வாதங்களைப் பெறுவதற்காக, எழுதுபொருள்கள், புத்தகங்கள் மற்றும் மடிக்கணினிகள் தெய்வங்களுக்கு முன்பாக வைக்கப்படுகின்றன, மேலும் மா இலை தோரணங்கள் முன் வாசலில் தொங்கவிடப்படுகின்றன.
பூஜை சடங்கு ஆன்மீக நம்பிக்கையுடன் தொடங்கப்படுகிறது, மேலும் பொறி, வெல்லம் மற்றும் வறுத்த வேர்க்கடலை ஆகியவற்றைக் கொண்ட பிரசாதம் வைத்து வழிபடப்படுகிறது. பழங்கள், வெள்ளை பூசணிக்காய் மற்றும் பூக்கள் தெய்வங்களுக்கு வைத்து வழிபடப்படுகின்றன. பூஜையைத் தொடர்ந்து, வாகனங்கள் உடனடியாக இயக்கப்படுகிறது, இது அவர்களுக்கு வெற்றியை ஆசீர்வதிக்கும் என்று நம்பப்படுகிறது. ஆனால் பூஜையில் வைக்கப்பட்ட கருவிகள் நாள் முழுவதும் பயன்படுத்தப்படாமல் உள்ளன, ஏனெனில் அவற்றில் தெய்வீக சக்தி நிரம்பியுள்ளன என்று நம்பப்படுகிறது. நமது அன்றாட வாழ்க்கையில் கருவிகள் மற்றும் உபகரணங்களின் பங்கை அங்கீகரிக்கும் மரியாதை மற்றும் நன்றியுணர்வோடு சடங்கு முடிகிறது.



Click it and Unblock the Notifications












