Latest Updates
-
இந்தியாவின் முதல் பெண்களுக்கான பள்ளி எப்போது திறக்கப்பட்டது? எந்த ஊரில் திறக்கப்பட்டது தெரியுமா? -
உருளைக்கிழங்கை ஒருதடவை இந்த மாதிரி கொங்குநாடு ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க...டக்கரான சைடிஷா இருக்கும்...! -
அமெரிக்க-ஈரான் போரால் துபாயில் சரசரவென குறையும் தங்கம் விலை...இந்தியாவிலும் தங்கம் விலை குறையுமா? உண்மை என்ன? -
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன? -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்...! -
சனிப்பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கணுமாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
சுரைக்காயை இந்த மாதிரி பச்சடி செஞ்சு பாருங்க... இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்குமே டக்கரான சைடிஷா இருக்கும்... -
'நிறங்களின் ராஜா' என்று அழைக்கப்படும் நிறம் எது தெரியுமா? உங்களுக்கு இந்த கலர் பிடிக்குமானு சொல்லுங்க...! -
தஞ்சாவூர் கல்யாண சாம்பார் ரெசிபி... இந்த மாதிரி சாம்பார் வைச்சு பாருங்க... வீட்ல எல்லாரும் ஊத்தி குடிப்பாங்க..
அஸ்பாரகஸை தூக்கிப் போட்டு எதிர்காலத்தைக் கணிக்கும் பெண் - 2024-ல் என்னலாம் நடக்கப் போகுதுன்னு சொல்றாங்க..
ஒரு கட்டு அஸ்பாரகஸை மேலே தூக்கிப் போட்டு, அது விழுவதைக் கொண்டு ஒருவரது எதிர்காலத்தைக் கணித்து கூற முடியும் என்று சொன்னால் நம்புவீர்களா? என்ன ஆச்சரியமாக உள்ளதா? ஆம், அது உண்மை தான். வெளிநாட்டில் ஒரு பெண்மணி அவ்வாறு கணித்து கூறி வருகிறார். அது தற்போது வைரலாக பேசப்பட்டும் வருகிறது.
67 வயதான ஜெமிமா பேக்கிங்டன் என்னும் பெண்மணி டாரட் கார்டுகள் அல்லது கிரிஸ்டல் பந்துகளைக் கொண்டு எதிர்காலத்தைக் கணிக்காமல், ஒரு கட்டு அஸ்பாரகஸை மேலே தூக்கி எறிவதன் மூலமும், அது விழுவதைக் கொண்டும் எதிர்காலத்தைக் கணித்து கூறும் அசாதாரண சக்தி தனக்கு இருப்பதாக கூறுகிறார்.

இதுவரை இவர் கணித்த ப்ரெக்சிட்டின் பின்விளைவுகள், ராணியின் மரணம், கோவிட் அச்சுறுத்தல் மற்றும் ஹாரி மேகன் சர்ச்சையால் பிரிட்டிஷ் அரச குடும்பத்திற்குள் ஏற்பட்ட எழுச்சி போன்றவை நடந்ததால், இந்த 2024 ஆம் ஆண்டில் இவரது கணிப்புகளை தெரிந்து கொள்ள பலரும் ஆவலாக இருக்கிறார்கள். நீங்களும் பேக்கிங்டனின் 2024 ஆம் ஆண்டிற்கான கணிப்புகளை தெரிந்து கொள்ள விரும்பினால், தொடர்ந்து படியுங்கள்.
2024 ஆம் ஆண்டிற்கான இவரது கணிப்புகள்
ஜெமிமா பேக்கிங்டனின் 2024 ஆம் ஆண்டிற்கான கணிப்புகள் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. சோமர்செட்டில் உள்ள பாத்தைச் சேர்ந்தவர் தான் ஜெமிமா பேக்கிங்டன். இவர் 2024 ஆம் ஆண்டில் அரச குடும்பத்தில் பிரிவினைகள் அல்லது விவாகரத்து நடக்க வாய்ப்புள்ளது. உலகத் தலைவர்களிடையே மரணங்கள் நிகழும் மற்றும் ஒலிம்பிக்கில் ஜிபி குழு தோல்வியடையும் என்றும் கணித்துள்ளார்.
இது தவிர அமெரிக்கா தனது முதல் பெண் அதிபரை தேர்ந்தெடுக்கும் என்று பேக்கிங்டன் கூறுகிறார். அதாவது அதிபர் தேர்தலில் ஜோ பிடன் மற்றும் டொனால்ட் ட்ரம்ப் அதிபர் போட்டியில் வெற்றி பெறமாட்டார்கள் என்று கணித்துள்ளார். முன்னெப்போதும் இல்லாத அளவில் உலகம் முழுவதும் எதிர்பார்க்கப்படாத இடத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்.
அதோடு, மத்திய கிழக்கின் நிகழ்வுகள் முறிவு நிலையை அடையும். பிரபலம் என்ற கலாச்சாரம் அழியும் மற்றும் நல்ல சம்பளம் வாங்கும் டிவி பிரமுகர்கள் தங்கள் வேலையை இழக்க நேரிடும். இங்கிலாந்து கல்வி முறைக்குள் ஒரு பெரிய மாற்றம் ஏற்படும். இங்கிலாந்தில் உள்ள சுற்றுச்சூழல் போராளிகள் ஆதரவை இழப்பார்கள்.
இங்கிலாந்து எஃப்ஏ ஆண்கள் கொண்ட அனைத்து அணிக்கும் அதிக பெண் நடுவர்களை நியமித்து செயல்படும். இணையத்தில் செல்வாக்கு செலுத்துபவர்கள் தங்களுடைய ஆதிக்கத்தை இழக்க நேரிடும், ஏனெனில் மக்கள் தாங்கள் வாழும் உண்மையான உலகம் தான் முக்கியம் என்பதை உணருவார்கள்.
ஈட்டி வடிவிலான அஸ்பாரகஸை தூக்கி எறியும் போது, அது தரையில் விழும் போது கண்ணில் தெரியும் வடிவங்களைப் பொறுத்து 70-95 சதவிதம் வரை துல்லியமாக கணிக்க முடியும் என்றும் கூறுகிறார்.
இப்படி இவர் வெறும் அஸ்பாரகஸை தூக்கி எறிந்து கூறும் கணிப்புக்களைப் பார்க்கும் போது, மனதில் பலவிதமான சந்தேகங்கள் எழுந்தாலும், அவரது கணிப்புக்களுள் சில நடந்துள்ளதால், இவர் கூறுவதை அசால்ட்டாகவும் எடுத்துக் கொள்ள முடியாது என்று பலரும் நினைக்கின்றனர்.



Click it and Unblock the Notifications











