Latest Updates
-
செஃப் தீனா ஸ்டைல் பீன்ஸ் பருப்பு பொரியல் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
நாக பஞ்சமி அன்று சூரியன்-கேது இணைவதால் நஷ்டத்தையும், தோல்விகளையும் சந்திக்கப்போகும் 4 ராசிகள் -
ராகு-கேது தோஷம் நீங்கணுமா? அப்ப நாக பஞ்சமி அன்று உங்க ராசிக்கேற்ப இந்த பரிகாரங்களை செய்யுங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் புடலங்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும் -
நாக பஞ்சமியில் நடக்கும் சந்திர பெயர்ச்சி: இந்த 3 ராசிகளின் பணக்கஷ்டம் தீர்ந்து, பண வரவு அதிகரிக்கப்போகுது! -
தமிழ்நாட்டில் கள்ளக்காதல் அதிகமிருக்கும் டாப் மாவட்டங்கள் - முதலிடத்தில் எந்த மாவட்டம் இருக்கு தெரியுமா? -
ஹோட்டல் ஸ்டைல் ரவா தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 17 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கூரையை பிச்சுட்டு கொட்டப்போகுதாம் -
Avani 2026 Rasipalan: ஆவணி மாதம் இந்த 3 ராசிக்கு தொழில் ரீதியா அதிர்ஷ்டமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
கேரட்டும், ஜவ்வரிசியும் இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட் செய்யுங்க.. பிள்ளைங்க விரும்பி சாப்பிடுவாங்க..
அணுகுண்டு வெடித்து உலகமே அழிந்தாலும் இந்த உயிரினங்கள் அழியாதாம் - எந்தெந்த உயிரினங்கள் தெரியுமா?
இயற்கைப் பேரழிவுகளிலிருந்து தப்பிப் பிழைப்பதே மனிதர்களுக்கு மிகவும் கடினமானதாகும். இந்த நிலையில் அணுகுண்டு வெடிப்பு ஏற்பட்டால் அதிலிருந்து தப்பிப்பது எவ்வளவு கடினம் என்பதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. இருப்பினும், சில அசாதாரண உயிரினங்கள் கடுமையான வெப்பம், கதிர்வீச்சு மற்றும் அணு அழிவைத் தாங்கி உயிர்வாழ முடியும். சில விலங்குகள் முற்றிலும் உலர்ந்து, நிலைமைகள் சீராகும் வரை தங்கள் வளர்சிதை மாற்றத்தை நிறுத்தி வைக்கின்றன. சில விலங்குகள் விண்வெளியின் கடுமையான சூழ்நிலைகளைத் தாங்கி உயிர்வாழும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்த உயிரினங்கள் மனிதர்களால் தாங்கக்கூடிய அளவை விட மிக அதிகமான கதிர்வீச்சு அளவுகளை தாங்கிக்கொள்கின்றன. ஜப்பானில் அணுகுண்டு வெடித்த போது கூட சில விலங்குகள் அணுகுண்டு வெடிப்புகளில் இருந்து தப்பிப் பிழைத்துள்ளன. இது, இந்த விலங்குகள் உண்மையிலேயே இயற்கையின் மிகவும் வலிமையான உயிரினங்கள் என்பதை நிரூபிக்கிறது.
டார்டிகிரேடு
டார்டிகிரேடுகள், நீர் கரடிகள் அல்லது பாசிப் பன்றிக் குட்டிகள் என்றும் அழைக்கப்படுகின்றன, இவை நீரில் வாழும் நுண்ணிய விலங்குகள் ஆகும். நீர் கரடிகளால் கடும் வெப்பம், உறைபனி குளிர், புற ஊதா கதிர்வீச்சு ஆகியவற்றைத் தாங்கி உயிர்வாழ முடியும். அவை, "டன்ஸ்" எனப்படும் சிறிய உலர்ந்த பந்துகளுக்குள் தங்களைச் சுருக்கிக் கொள்வதன் மூலம் இதைச் செய்கின்றன. இதன் மூலம், மீண்டும் சுறுசுறுப்பாகச் செயல்படுவதற்குச் சூழல் அனுமதிக்கும் வரை அவற்றின் வளர்சிதை மாற்றத்தை இடைநிறுத்தி வைக்கின்றன. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின்படி, டார்டிகிரேடுகள் பூமியில் எஞ்சியிருக்கும் கடைசி உயிரினங்களில் ஒன்றாக இருக்கலாம்.
பெல்லாய்டு ரோட்டிஃபர்
பெல்லாய்டு ரோட்டிஃபர்கள் என்பவை குளங்கள், ஓடைகள் மற்றும் மண் போன்ற ஈரமான வாழ்விடங்களிலும், பாசிகள் மற்றும் லைக்கன்களிலும் வாழும் நுண்ணிய விலங்குகள் ஆகும். தேசிய உயிரித்தொழில்நுட்பத் தகவல் மையத்தால் செய்யப்பட்ட 'Extreme resistance of bdelloid rotifers to ionizing radiation' என்ற ஆய்வின்படி, அவை அதிக அளவிலான கதிர்வீச்சுத் தாக்குதல்களையும் நீண்டகால வறட்சியையும் தாங்கி உயிர்வாழ முடியும். சுவாரஸ்யமாக, பெல்லாய்டுகள் என்பவை 50 மில்லியன் ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வரும் பெண் விலங்குகள் மட்டுமே கொண்ட ஒரு குழுவாகும்.
தேள்
தேள்கள் 40 கோடி ஆண்டுகளுக்கும் மேலாக பூமியில் வாழ்ந்து வருகின்றன. அவை ஆயிரக்கணக்கான எரிமலை வெடிப்புகள் மற்றும் பல இயற்கைப் பேரழிவுகளையும் தாங்கி உயிர் பிழைத்துள்ளன. அவை கடுமையான வெப்பம், கதிர்வீச்சு ஆகியவற்றைத் தாங்கி, பல மாதங்கள் உணவு இல்லாமலும் வாழக்கூடியவை. தேள்கள் நெருப்பால் அழியக்கூடியவை என்றாலும், அதிக நச்சுத்தன்மை மற்றும் கதிரியக்கம் நிறைந்த சூழல்களைத் தாங்கிக்கொள்ளும் திறன் கொண்டவை.
ஈ
பழ ஈக்கள் மிக அதிக கதிர்வீச்சை தாங்கும் திறன் கொண்டவை, அவை 64,000 ராட்ஸ் வரையிலான கதிர்வீச்சைத் தாங்கி உயிர்வாழ்கின்றன. இருப்பினும், மிக அதிக அல்லது நீண்டகால கதிர்வீச்சு வெளிப்பாடு அவற்றைப் பாதிக்கக்கூடும். அவற்றின் குறுகிய வாழ்க்கைச் சுழற்சி, தனித்துவமான மரபியல் மற்றும் அவற்றை கையாளுவதில் உள்ள எளிமை ஆகியவை, கதிர்வீச்சின் விளைவுகளைப் பற்றி ஆய்வு செய்வதற்கு அவற்றை சிறந்த உயிரினங்களாக மாற்றுகின்றன.
கரப்பான் பூச்சி
இது நாம் அனைவரும் அறிந்ததுதான். பெரும்பாலான கரப்பான் பூச்சிகள் மிதமான கதிர்வீச்சைத் தாங்கி உயிர்வாழ முடியும். மேலும், சுமார் 20% கரப்பான் பூச்சிகள், மனிதர்கள் அல்லது பெரும்பாலான பிற விலங்குகளை விட மிக அதிகமாக, அணுகுண்டால் வெளிப்படும் தீவிர கதிர்வீச்சை தாங்கிக்கொள்ளும் திறன் கொண்டவை. கரப்பான் பூச்சிகள் அவற்றின் தடித்த தோல் மற்றும் தனித்துவமான வளர்சிதை மாற்றம் காரணமாக அதிக கதிர்வீச்சைத் தாங்கிக்கொள்ள முடியும், ஆனால் அவை அளிக்க முடியாதவை அல்ல. ஆச்சரியமளிக்கும் விதமாக, ஹிரோஷிமா மற்றும் நாகசாகி குண்டுவீச்சுகளிலும் கரப்பான் பூச்சிகள் உயிர் பிழைத்துள்ளன.



Click it and Unblock the Notifications
