Latest Updates
-
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது...
முகலாய அரசர் அக்பரின் வாரிசுகள் இப்ப என்ன பண்றாங்க தெரியுமா? இப்பவும் இந்தியால ராஜா மாதிரி வாழ்றாங்க...!
இந்தியா வரலாறு முழுவதும் பல வீரமிக்க அரசர்கள் தங்களின் இரத்தத்தால் தங்கள் பெயரை வரலாற்றில் எழுதியுள்ளனர். அவர்களின் வீரமும், தியாகமும் இந்தியாவை பல அந்நிய படையெடுப்பாளர்களிடம் இருந்து காப்பற்றியுள்ளது. அந்த வகையில் இந்திய வரலாற்றின் முக்கிய அரசர்களில் ஒருவர் மகாராணா பிரதாப்.
மகாராணா பிரதாப்பின் வீரம் உலகம் முழுவதும் புகழ் பெற்றது. அவர் தனது வீரத்தால் முகலாயர்களுக்கு கடுமையான போட்டியாளராக இருந்தார். அவரது வீரம் பற்றிய கதைகள் நன்கு அறியப்பட்டவை. முகலாய பேரரசர் அக்பர் இந்தியா முழுவதையும் கைப்பற்ற முயன்றபோது, மகாராணா பிரதாப் தனது ராஜ்ஜியத்தை காப்பாற்ற போராடி வெற்றி பெற்றார்.

மகாராணா பிரதாப்பின் மரணம் வில்லின் பின்னல் காரணமாக குடலில் ஏற்பட்ட காயத்தால் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. அவரைக் காப்பாற்ற முயற்சித்த போதிலும், அவர் 1597 இல், 57 வயதில் இறந்தார். அவர்கள் இருவருக்குள்ளும் பகை இருந்தபோதிலும், அக்பரே மகாராணா பிரதாப்பின் மரணத்தைக் கேள்விப்பட்டு கண்ணீர் விட்டதாக வரலாற்று பதிவுகள் கூறுகின்றன.
மகாராணா பிரதாப்பின் வீரத்திற்கான குறிப்பிடத்தக்க காட்சிகளில் ஒன்று 1576 இல் ஹல்திகாட்டி போரின் போது நிகழ்ந்தது. மகாராணா பிரதாப் வெறும் 3,000 குதிரைப்படை வீரர்களுடன்களுடன் கிட்டத்தட்ட 5,000 முதல் 10,000 வீரர்களை எதிர்கொண்டார். இந்தப் போரில் பலத்த காயம் அடைந்த அவர், பின்னர் காடுகளில் வசிக்க வேண்டியதாயிற்று. எனினும், அவர் தோல்வியை ஏற்கவில்லை மற்றும் மற்றொரு தாக்குதலுக்கு தனது இராணுவத்தை தயார் செய்தார். முறையான உணவுகள் இல்லாமல் பல நாட்கள் காட்டில் வாழ நேர்ந்தாலும் தன் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததாக கூறப்படுகிறது.
லக்ஷ்யராஜ் சிங் மேவார் ராஜஸ்தானின் உதய்பூரின் முன்னாள் அரச குடும்பத்தின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவர், மேலும் உதய்பூரில் உள்ள அவரது அரண்மனையில் வசிப்பதாக அறியப்படுகிறது. அவர் மகாராணா பிரதாப்பின் வழித்தோன்றல், பல்வேறு ஹோட்டல்களை நடத்தி வருவதுடன் அவ்வப்போது அரசியல் விவாதங்களில் ஈடுபட்ட வருகிறார்.
அவர் ஜனவரி 28, 1985 இல் பிறந்தார், அவருடைய தாத்தாவின் பெயர் பகவத் சிங் மேவார். இவர் அரவிந்த் சிங் மேவாரின் மகன். கார்கள் மீதான தனது தந்தையின் ஆர்வத்தை அவர் பகிர்ந்து கொள்கிறார் மற்றும் முக்கிய நிகழ்வுகளில் அடிக்கடி காணப்படுவார். உதய்பூரின் லக்ஷ்யராஜ் சிங் மேவார் தனது கல்வியை உதய்பூர் மகாராஜா மேவார் பள்ளி, அஜ்மீரில் உள்ள மாயோ கல்லூரி மற்றும் மும்பையில் உள்ள ஜிடி சோமானி கல்லூரியில் முடித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் உள்ள ப்ளூ மவுண்டன்ஸ் பள்ளியில் பட்டம் பெற்ற அவர் தற்போது HR குரூப் ஆஃப் ஹோட்டல்களின் நிர்வாக இயக்குனராக பணியாற்றுகிறார்.
இதற்கிடையில், யாகூப் ஹபிபுதீன் துசி என்பவர் பகதூர் ஷா ஜாபர் மற்றும் அக்பரின் வழித்தோன்றல் என்று தன்னைக் கூறிக்கொண்டு அடிக்கடி தலைப்புச் செய்திகளை உருவாக்குகிறார். யாகூப் ஹைதராபாத்தில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இளவரசர் யாகூப்பின் கூற்றுகளின் நம்பகத்தன்மை கேள்விக்குட்படுத்தப்பட்டாலும், அவர் ஒரு பேரரசரின் வாழ்க்கை முறையைப் போன்றே வாழ்கிறார். சில ஊடக அறிக்கைகளின்படி, யாகூப் பாதுகாப்புப் பணியாளர்களுடன் பயணம் செய்கிறார், தாஜ்மஹால் அல்லது வரலாற்றுத் தளத்திற்குச் செல்லும் போதெல்லாம் காவலர்களுடன் செல்வார்.



Click it and Unblock the Notifications












