Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
16 வயதில் 100 கிலோ எடை... மரணத்தை எட்டிப் பார்த்து திரும்பிய சிறுவன்...
16 வயதில் 100 கிலோ எடையுடன் மரணத்தை எட்டிப் பார்த்து விட்டு வந்த சிறுவனைப் பற்றிய கதையைப் பற்றித் தான் இந்த கட்டுரையில் பார்க்கப் போகிறோம். படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
ஆரோக்கியமான உணவு பொருள்கள் எத்தனையோ இருந்தாலும், உடல் நலத்திற்கு ஒவ்வாத நொறுக்குத் தீனிகளையே சாப்பிடுகிறோம். ஆரோக்கியத்திற்கு உகந்ததல்லாத உணவுகளை சாப்பிடுவதால் நேரும் பின்விளைவுகளால் பலர் பாதிக்கப்படுகின்றனர்.

இதுபோன்ற உணவுகளை சாப்பிட்டதால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு தாறுமாறாக உயர்ந்து சாவின் விளிம்பு வரை சென்ற பதின்ம வயது இளைஞன் ஒருவன் அதிர்ஷ்டவசமாக மருத்துவர்களால் காப்பாற்றப்பட்டுள்ளான்.

குமட்டலும் வாந்தியும்
ஸியாவோ யிங் என்ற 16 வயது இளைஞனுக்கு அதிக தாகம் எடுத்தது. ஆகவே, அவன் தினமும் நான்கு பாட்டில் நீர் அருந்திவந்தான். தொடர்ந்து குமட்டல் ஏற்பட்டு வாந்தி பண்ணினான். அதிகமாக வாந்தியெடுத்தால் உடல் எடை குறைந்தது. இரண்டு மூன்று நாள்கள் இவ்வாறு வாந்தி இருந்தது. திடீரென நிலைகுலைந்து விழுந்தான் ஸியாவோ. உடனே அவனை ஸீஜாங் என்ற இடத்திலுள்ள மருத்துவமனைக்குத் தூக்கிக்கொண்டு சென்றார்கள்.

இருபது மடங்கு அதிக சர்க்கரை
மருத்துவமனையில் செய்யப்பட்ட பரிசோதனையில் ஸியாவோ யிங்கின் இரத்தத்தில் இயல்பை விட இருபது மடங்கு அதிக சர்க்கரை இருப்பது தெரிய வந்தது. 3.9 முதல் 6.1 mmol/L இருக்க வேண்டிய சர்க்கரை அளவு 124 mmol/L என்ற அளவில் உயர்ந்திருந்தது. சர்க்கரையின் அளவு தாறுமாறாக உயர்ந்ததால் அவனது உறுப்புகள் செயலிழக்க ஆரம்பித்திருந்தன. உடலின் வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸாக (102.2 பாரன்ஹீட்) உயர்ந்திருந்தது.

போராடிய மருத்துவர்கள்
மருத்துவர்கள் போராடி யிங்கின் உயரை காப்பாற்றினார்கள். அதிர்ஷ்டவசமாக அவன் உயிர்பிழைத்தான். பிறகு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
ஸியாவோ யிங்குக்கு நீரிழிவு பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. போதுமான அளவு இன்சுலின் சுரக்காததினால் ஏற்படும் டைப் 2 என்னும் இரண்டாவது வகை நீரிழிவு குறைபாடு அது. உடல், கொழுப்பினை அதிக வேகமாக பிரித்து, அதன் காரணமாக இரத்தமே அமில தன்மையுள்ளதாக மாறிவிடும் டயபடிக் கீட்டோஅஸிடோஸிஸ் என்ற குறைபாடும் அந்த இளைஞனுக்கு இருந்தது.

ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை
ஸியாவோ யிங்கின் உடலின் அளவுக்கதிகமான சர்க்கரை இருந்ததற்கு ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை அவன் கடைபிடிக்காததே காரணம் என்பது தெரிய வந்தது. மரவள்ளி போன்ற காசாவா என்ற வேர் வகை கிழங்கிலிருந்து எடுக்கப்பட்ட ஸ்டார்ச் உருண்டைகளை பயன்படுத்தி தயாரிக்கப்படும் பப்பிள் டீ, சோடா, உலோக கம்பி அடுப்பின் மீது சமைக்கப்படும் பாபிகியூ வகையில் செய்யப்பட்ட உணவு மற்றும் பொறித்த உணவு பொருள்களை அவன் தினமும் சாப்பிட்டு வந்ததாக கூறினான்.
மகன் அதிகம் பசிக்கிறது என்று அடிக்கடி சாப்பிட்டு வந்தது மட்டுமே ஸியாவோ யிங்கின் பெற்றோருக்கு தெரிந்திருந்தது. அவன் சாப்பிடும் பொருள்களால் உடல்நலத்திற்கு இவ்வளவு பெரிய கேடு நேரும் என்பது தெரிந்திருக்கவில்லை.
மரணத்தின் விளிம்பு வரை சென்று திரும்பிய ஸியாவோ, இனி ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைபிடிப்பதாகவும் ஒழுங்காக உடற்பயிற்சி செய்வதாகவும் உறுதி பூண்டுள்ளான்.



Click it and Unblock the Notifications











