Latest Updates
-
ஜூன் இறுதியில் உருவாகும் அங்காரக யோகம்: டிசம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்! -
1/2 கப் வேர்க்கடலை இருந்தா.. இப்படி சட்னி அரைங்க.. வீட்டுல எல்லாரும் எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 27 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
புதன் வக்ர பெயர்ச்சியால் ஜூன் இறுதியில் இந்த 3 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
சுக்கிரன்-கேதுவின் இணைப்பால் ஜூலை மாதம் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
அடர்த்தியான தலைமுடியை பெற உதவும் செம்பருத்தி எண்ணெய் - எப்படி தயாரிக்கணும் தெரியுமா? -
இறந்தவர்கள் கனவில் வருவது அதிர்ஷ்டமா? எச்சரிக்கையா? கனவு சாஸ்திரம் கூறும் உண்மை என்ன? -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. அடுத்த ஜென்மம் என்னவா பிறப்பீங்க-ன்னு சொல்றோம்.. -
4 தக்காளி இருந்தா கோயம்புத்தூர் ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு வேற லெவலில் இருக்கும் -
1 கப் உளுந்தும், 1/2 கப் பாசிப்பருப்பும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட்டை ட்ரை பண்ணுங்க..
உடைந்த கோப்பை
ஒரு ஊரில் ஒரு ஜென் துறவி இருந்தார். அவரிடம் சீடனாக ஒரு குறும்புக்கார பையன் இக்யூ சேர்ந்தான். அவன் மிகவும் புத்திசாலி. ஒரு நாள் அந்த சிறுவன் இக்யூ, துறவிக்குப் பிடித்த ஒரு கோப்பையை எடுத்து பார்த்தான். அப்போது எதிர்பாராத விதமாக கோப்பையானது உடைந்துவிட்டது. சொல்லப் போனால், அந்த கோப்பையானது மிகவும் விலைமதிப்பற்றது. அந்த கோப்பை துறவிக்கு மிகவும் விருப்பமானது.
அப்போது துறவி வரும் சத்தம் கேட்டது. உடனே அந்த சிறுவன் இக்யூ, கையில் இருந்த உடைந்த கோப்பையை பின்னால் மறைத்து வைத்தான். பின் அவன் துறவியிடம், "ஏன் மக்கள் அனைவருக்கும் இறப்பு ஏற்படுகிறது?" என்று கேட்டான்.
அதற்கு துறவி, "அது இயற்கையான ஒன்று. உலகில் பிறந்த அனைத்து உயிர்களுக்கும் இறப்பு என்பது உண்டு." என்று சொன்னார். அப்போது உடனே அந்த சிறுவன் அந்த உடைந்த கோப்பையை நீட்டி "உங்கள் கோப்பைக்கும் இறப்பு வந்துவிட்டது" என்று கூறினான்.



Click it and Unblock the Notifications