Latest Updates
-
மழைக்காலத்தில் பார்லர் போக நேரமில்லையா? அப்ப இந்த 5 ஃபேஸ் ஸ்க்ரப்பை யூஸ் பண்ணுங்க.. -
ஆகஸ்ட் 11-ல் குரு-சந்திர சேர்க்கையால் நிகழும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
சேனைக்கிழங்கு வாங்குனா இந்த பக்குவத்தில் குழம்பு செய்யுங்க.. கறிக்குழம்பு ருசியில் இருக்கும்.. -
இந்த 5 பிரச்சனை இருந்தால் பப்பாளியை தொடாதீங்க.. இல்லன்னா உங்க நிலைமை மோசமாயிடும்.. -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் சூரியன்: ஆகஸ்ட் 17 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும்
உடைந்த கோப்பை
ஒரு ஊரில் ஒரு ஜென் துறவி இருந்தார். அவரிடம் சீடனாக ஒரு குறும்புக்கார பையன் இக்யூ சேர்ந்தான். அவன் மிகவும் புத்திசாலி. ஒரு நாள் அந்த சிறுவன் இக்யூ, துறவிக்குப் பிடித்த ஒரு கோப்பையை எடுத்து பார்த்தான். அப்போது எதிர்பாராத விதமாக கோப்பையானது உடைந்துவிட்டது. சொல்லப் போனால், அந்த கோப்பையானது மிகவும் விலைமதிப்பற்றது. அந்த கோப்பை துறவிக்கு மிகவும் விருப்பமானது.
அப்போது துறவி வரும் சத்தம் கேட்டது. உடனே அந்த சிறுவன் இக்யூ, கையில் இருந்த உடைந்த கோப்பையை பின்னால் மறைத்து வைத்தான். பின் அவன் துறவியிடம், "ஏன் மக்கள் அனைவருக்கும் இறப்பு ஏற்படுகிறது?" என்று கேட்டான்.
அதற்கு துறவி, "அது இயற்கையான ஒன்று. உலகில் பிறந்த அனைத்து உயிர்களுக்கும் இறப்பு என்பது உண்டு." என்று சொன்னார். அப்போது உடனே அந்த சிறுவன் அந்த உடைந்த கோப்பையை நீட்டி "உங்கள் கோப்பைக்கும் இறப்பு வந்துவிட்டது" என்று கூறினான்.



Click it and Unblock the Notifications