Latest Updates
-
அடுத்த 6 மாதம் இந்த 3 ராசிக்காரங்க தொழில் மற்றும் பண விஷயத்தில் கவனமா இருக்கணும்.. -
Actor Bhagyaraj Death: வாக்கிங் சென்ற பின் காலமான நடிகர் பாக்யராஜ்! உண்மையில் வாக்கிங் மாரடைப்பை ஏற்படுத்துமா? -
சத்தான.. எலுமிச்சை இஞ்சி ரசம் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
வெறும் தோசையை விட முட்டை தோசை ஏன் சிறந்தது? - விளக்கும் டாக்டர்.பிரகாஷ்மூர்த்தி! -
ஜூன் இறுதியில் உருவாகும் அங்காரக யோகம்: டிசம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்! -
1/2 கப் வேர்க்கடலை இருந்தா.. இப்படி சட்னி அரைங்க.. வீட்டுல எல்லாரும் எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 27 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
புதன் வக்ர பெயர்ச்சியால் ஜூன் இறுதியில் இந்த 3 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
சுக்கிரன்-கேதுவின் இணைப்பால் ஜூலை மாதம் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
அடர்த்தியான தலைமுடியை பெற உதவும் செம்பருத்தி எண்ணெய் - எப்படி தயாரிக்கணும் தெரியுமா?
யானையும்...குருடர்களும்...
ஒரு ஊரில் வாழும் மக்கள் அனைவரும் கடவுள் மற்றும் வெவ்வேறு மதங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அது ஒரு பெரிய விவாதமாக மாறியது. அந்த விவாதம் "கடவுள் பார்க்க எப்படி இருப்பார்?" என்பதைப் பற்றியாகும். அங்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதிலைக் கூறினர். பின்னர் அதற்கு சரியான பதிலை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதால், ஒரு புத்தரை பார்த்து அவரிடம் அதற்கான பதிலை கேட்கச் சென்றனர்.
அங்கு அவரிடம் "கடவுள் பார்க்க எப்படி இருப்பார்? அதற்கு சரியான பதிலை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை" என்று கூறினார்கள். அப்போது புத்தர் அவர்களது சீடர்களிடம் "நான்கு குருடர்கள் மற்றும் ஒரு பெரிய யானையை கொண்டு வாருங்கள்" என்று கூறினார்.
அந்த சீடர்களும் கொண்டு வந்தனர். பின் புத்தர் அந்த நான்கு குருடர்களிடம், "நான் ஒரு பொருளை தருகிறேன், அது என்னவென்று கூறுங்கள்" என்று கூறினார். அவர்களும் சரி என்று கூறினார்.
முதலில் அந்த குருடர்களுள் ஒருவன் யானையின் கால்களை தொட்டுப் பார்த்து, அது "தூண்" போல் இருக்கிறது என்று கூறினான். மற்றொருவன் அதன் வயிற்றைத் தொட்டுப் பார்த்து, அது "சுவர்" போல் இருக்கிறது என்று கூறினான். மூன்றாமவன் அந்த யானையின் காதுகளைத் தொட்டுப் பார்த்து, "துணி" போல் இருக்கிறது என்று சொன்னான். அடுத்தவன் அதன் வாலைத் தொட்டுப் பார்த்து, "கயிறு" போல் உள்ளது என்றான்.
பின்னர் புத்தர் மக்களிடம் "இந்த குருடர்கள் யானையை தொட்டுப் பார்த்து, அவர்கள் உணர்ந்ததை வெவ்வேறு மாதிரி கூறினார்கள். இவற்றில் எது சரி?" என்று கேட்டு, அதேப்போல் தான் கடவுளும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி என்று கூறி உள்ளே சென்று விட்டார்.



Click it and Unblock the Notifications