Latest Updates
-
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
வீட்டில் பணவரவு அதிகரிக்கணுமா? அமேசான் சேலில் இந்த வாஸ்து பொருட்களை மிஸ் பண்ணாதீங்க! -
செஃப் வாணி அவர்களின் முருங்கைக்காய் பொரியல் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... செமயா இருக்கும்.. -
Hanta Virus: கோவிட்-19 விட அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் ஹன்டா வைரஸ் - இதன் அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? -
இன்றைய அபிஜித் முகூர்த்தத்தில் இந்த வாஸ்து மாற்றங்களைச் செய்யுங்க… பணவரவு தானாக அதிகரிக்கும்! -
செவ்வாய் உருவாக்கும் விபரீத ராஜயோகம்: மே 11 முதல் இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
வெள்ளை குழி பணியாரமும், கார சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 மே 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுதாம் -
மேஷ ராசியில் உருவாகும் மகாலட்சுமி யோகத்தால் பணமழையில் நனையப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
ராகு-கேதுவால் உருவாகும் கால சர்ப்ப யோகம்: மே 11 முதல் இந்த 4 ராசிக்காரர்கள் மிகவும் கவனமா இருக்கணும்!
யானையும்...குருடர்களும்...
ஒரு ஊரில் வாழும் மக்கள் அனைவரும் கடவுள் மற்றும் வெவ்வேறு மதங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அது ஒரு பெரிய விவாதமாக மாறியது. அந்த விவாதம் "கடவுள் பார்க்க எப்படி இருப்பார்?" என்பதைப் பற்றியாகும். அங்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதிலைக் கூறினர். பின்னர் அதற்கு சரியான பதிலை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதால், ஒரு புத்தரை பார்த்து அவரிடம் அதற்கான பதிலை கேட்கச் சென்றனர்.
அங்கு அவரிடம் "கடவுள் பார்க்க எப்படி இருப்பார்? அதற்கு சரியான பதிலை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை" என்று கூறினார்கள். அப்போது புத்தர் அவர்களது சீடர்களிடம் "நான்கு குருடர்கள் மற்றும் ஒரு பெரிய யானையை கொண்டு வாருங்கள்" என்று கூறினார்.
அந்த சீடர்களும் கொண்டு வந்தனர். பின் புத்தர் அந்த நான்கு குருடர்களிடம், "நான் ஒரு பொருளை தருகிறேன், அது என்னவென்று கூறுங்கள்" என்று கூறினார். அவர்களும் சரி என்று கூறினார்.
முதலில் அந்த குருடர்களுள் ஒருவன் யானையின் கால்களை தொட்டுப் பார்த்து, அது "தூண்" போல் இருக்கிறது என்று கூறினான். மற்றொருவன் அதன் வயிற்றைத் தொட்டுப் பார்த்து, அது "சுவர்" போல் இருக்கிறது என்று கூறினான். மூன்றாமவன் அந்த யானையின் காதுகளைத் தொட்டுப் பார்த்து, "துணி" போல் இருக்கிறது என்று சொன்னான். அடுத்தவன் அதன் வாலைத் தொட்டுப் பார்த்து, "கயிறு" போல் உள்ளது என்றான்.
பின்னர் புத்தர் மக்களிடம் "இந்த குருடர்கள் யானையை தொட்டுப் பார்த்து, அவர்கள் உணர்ந்ததை வெவ்வேறு மாதிரி கூறினார்கள். இவற்றில் எது சரி?" என்று கேட்டு, அதேப்போல் தான் கடவுளும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி என்று கூறி உள்ளே சென்று விட்டார்.



Click it and Unblock the Notifications