Latest Updates
-
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம் -
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும்
யானையும்...குருடர்களும்...
ஒரு ஊரில் வாழும் மக்கள் அனைவரும் கடவுள் மற்றும் வெவ்வேறு மதங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அது ஒரு பெரிய விவாதமாக மாறியது. அந்த விவாதம் "கடவுள் பார்க்க எப்படி இருப்பார்?" என்பதைப் பற்றியாகும். அங்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதிலைக் கூறினர். பின்னர் அதற்கு சரியான பதிலை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதால், ஒரு புத்தரை பார்த்து அவரிடம் அதற்கான பதிலை கேட்கச் சென்றனர்.
அங்கு அவரிடம் "கடவுள் பார்க்க எப்படி இருப்பார்? அதற்கு சரியான பதிலை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை" என்று கூறினார்கள். அப்போது புத்தர் அவர்களது சீடர்களிடம் "நான்கு குருடர்கள் மற்றும் ஒரு பெரிய யானையை கொண்டு வாருங்கள்" என்று கூறினார்.
அந்த சீடர்களும் கொண்டு வந்தனர். பின் புத்தர் அந்த நான்கு குருடர்களிடம், "நான் ஒரு பொருளை தருகிறேன், அது என்னவென்று கூறுங்கள்" என்று கூறினார். அவர்களும் சரி என்று கூறினார்.
முதலில் அந்த குருடர்களுள் ஒருவன் யானையின் கால்களை தொட்டுப் பார்த்து, அது "தூண்" போல் இருக்கிறது என்று கூறினான். மற்றொருவன் அதன் வயிற்றைத் தொட்டுப் பார்த்து, அது "சுவர்" போல் இருக்கிறது என்று கூறினான். மூன்றாமவன் அந்த யானையின் காதுகளைத் தொட்டுப் பார்த்து, "துணி" போல் இருக்கிறது என்று சொன்னான். அடுத்தவன் அதன் வாலைத் தொட்டுப் பார்த்து, "கயிறு" போல் உள்ளது என்றான்.
பின்னர் புத்தர் மக்களிடம் "இந்த குருடர்கள் யானையை தொட்டுப் பார்த்து, அவர்கள் உணர்ந்ததை வெவ்வேறு மாதிரி கூறினார்கள். இவற்றில் எது சரி?" என்று கேட்டு, அதேப்போல் தான் கடவுளும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி என்று கூறி உள்ளே சென்று விட்டார்.



Click it and Unblock the Notifications