Latest Updates
-
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
உங்க பூஜையறையில் ஒரு கிண்ணத்தில் தண்ணீரை அவசியம் வைக்கணுமாம்... ஏன் தெரியுமா?
Vastu tips for puja room: பெரும்பாலான இந்திய வீடுகளில் பூஜை அறை உள்ளது. பூஜையறை அமைதி மற்றும் நேர்மறை ஆற்றல் நிறைந்த இடமமாகும். கடவுள் சிலைகள், விளக்குகள், புனித நூல்கள், மலர்கள் போன்றவை, வாஸ்து சாத்திரத்தின் படி, ஒரு பூஜையறையில் வைக்கப்பட வேண்டிய அத்தியாவசிய பொருட்களாகும்.
மிக முக்கியமாக, பூஜையறையில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை வைத்திருப்பது அவசியம். கங்கை நீர் போன்ற புனித நதிகளில் இருந்து வந்தாலும் சரி அல்லது வீட்டில் உள்ள சாதாரண குழாய் நீராக இருந்தாலும் சரி, இந்து மதத்தில் தண்ணீர் புனிதமாக கருதப்படுகிறது. ஒவ்வொரு சடங்குக்கும் தண்ணீர் தேவை. பூஜையறையில் தண்ணீரை ஏன் வைக்க வேண்டுமென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

சுத்திகரிப்பு
வாஸ்து மற்றும் இந்து மரபுகளின்படி, தெய்வங்களை வழிபடுவதற்கு முன்பு, சிலைகளை தண்ணீரில் கழுவ வேண்டும் மற்றும் அதை சுத்தம் செய்ய அறையில் தண்ணீர் தெளிக்க வேண்டும்.
துளசி தண்ணீர்
ஒரு சில துளசி இலைகள் தண்ணீரில் வைக்கப்பட்டு பூஜையறையில் வைக்கப்பட வேண்டும், இது அந்த இடத்தை சுத்தப்படுத்துகிறது மற்றும் தெய்வங்களை மகிழ்விக்கிறது. பூஜை தொடங்கும் முன் தண்ணீர் பருகும் சடங்கு ஆச்சமன என்று அழைக்கப்படுகிறது, இதனை துளசி நீரால் செய்வது மிகவும் நல்லது. மேலும், துளசி அதன் மருத்துவ குணங்களுக்கு பெயர் பெற்றது மற்றும் துளசி நீரைக் குடிப்பது உடலையும் மனதையும் சுத்தப்படுத்துகிறது.
வருண பகவான்
இந்து மதத்தில், நீர் மற்றும் பெருங்கடல்களின் கடவுளான வருண பகவான் நீர் வடிவில் இருக்கிறார். பூஜையறையில் தண்ணீரை வைப்பது உலகத்தை காக்கும் வருண பகவானை மகிழ்விப்பதாக நம்பப்படுகிறது, இவ்வாறு செய்வது வீட்டிற்கு செழிப்பைக் கொண்டுவருகிறது.
நைவேத்தியம்
தினசரி பூஜைக்குப் பிறகு, தெய்வங்களுக்கு பழங்கள், இனிப்புகள் அல்லது பஞ்சாமிர்தம் போன்ற பிரசாதம் அல்லது நைவேத்தியத்தை வழங்குகிறோம். நைவேத்தியம் செய்த பிறகு, தெய்வங்களுக்கு நீர் பிரசாதமாக வழங்கப்படுகிறது, இது செழிப்பை அழைப்பதாக கருதப்படுகிறது.
ஆரத்தி
ஆரத்தி தட்டில் தண்ணீர் வைத்து நான்கு திசைகளிலும் தெளிக்கப்படுகிறது. தெய்வங்களின் பாதங்களைக் கழுவும் நீராகிய சரணாமிர்தமும் பூஜைக்குப் பிறகு அனைவருக்கும் வழங்கப்படுகிறது.
வாஸ்து படி பூஜையறையில் தண்ணீரை எப்படி வைக்க வேண்டும்?
வாஸ்து படி, வழிபாட்டு இடத்தில் ஒரு பானை தண்ணீரை வைத்திருப்பது செழிப்பை உறுதிப்படுத்துகிறது மற்றும் நேர்மறை ஆற்றல்களை மேம்படுத்துகிறது. பூஜை அறையில் தண்ணீர் வைக்கும் போது வாஸ்து கொள்கைகளை மனதில் கொள்ள வேண்டும்.
- வீட்டின் வடக்கு அல்லது வடகிழக்கு மூலையில் தண்ணீர் பாத்திரத்தை வைக்கவும்.
- தண்ணீரை சேமித்து வைக்க செம்பு அல்லது ஏதேனும் உலோக பாத்திரத்தை தேர்வு செய்யவும். தாமிரம் ஒரு சிறந்த தேர்வாகும், ஏனெனில் இது எதிர்மறையை உறிஞ்சுவதாகக் கருதப்படுகிறது. இது ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது என்று அறியப்படுகிறது.
- ஒவ்வொரு பூஜையின் போதும் தண்ணீரை மாற்றுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
- நேர்மறை ஆற்றலை கொண்டு வர வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் தண்ணீரை தெளிக்கவும்.



Click it and Unblock the Notifications
