Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
உங்க பூஜையறையில் ஒரு கிண்ணத்தில் தண்ணீரை அவசியம் வைக்கணுமாம்... ஏன் தெரியுமா?
Vastu tips for puja room: பெரும்பாலான இந்திய வீடுகளில் பூஜை அறை உள்ளது. பூஜையறை அமைதி மற்றும் நேர்மறை ஆற்றல் நிறைந்த இடமமாகும். கடவுள் சிலைகள், விளக்குகள், புனித நூல்கள், மலர்கள் போன்றவை, வாஸ்து சாத்திரத்தின் படி, ஒரு பூஜையறையில் வைக்கப்பட வேண்டிய அத்தியாவசிய பொருட்களாகும்.
மிக முக்கியமாக, பூஜையறையில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை வைத்திருப்பது அவசியம். கங்கை நீர் போன்ற புனித நதிகளில் இருந்து வந்தாலும் சரி அல்லது வீட்டில் உள்ள சாதாரண குழாய் நீராக இருந்தாலும் சரி, இந்து மதத்தில் தண்ணீர் புனிதமாக கருதப்படுகிறது. ஒவ்வொரு சடங்குக்கும் தண்ணீர் தேவை. பூஜையறையில் தண்ணீரை ஏன் வைக்க வேண்டுமென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

சுத்திகரிப்பு
வாஸ்து மற்றும் இந்து மரபுகளின்படி, தெய்வங்களை வழிபடுவதற்கு முன்பு, சிலைகளை தண்ணீரில் கழுவ வேண்டும் மற்றும் அதை சுத்தம் செய்ய அறையில் தண்ணீர் தெளிக்க வேண்டும்.
துளசி தண்ணீர்
ஒரு சில துளசி இலைகள் தண்ணீரில் வைக்கப்பட்டு பூஜையறையில் வைக்கப்பட வேண்டும், இது அந்த இடத்தை சுத்தப்படுத்துகிறது மற்றும் தெய்வங்களை மகிழ்விக்கிறது. பூஜை தொடங்கும் முன் தண்ணீர் பருகும் சடங்கு ஆச்சமன என்று அழைக்கப்படுகிறது, இதனை துளசி நீரால் செய்வது மிகவும் நல்லது. மேலும், துளசி அதன் மருத்துவ குணங்களுக்கு பெயர் பெற்றது மற்றும் துளசி நீரைக் குடிப்பது உடலையும் மனதையும் சுத்தப்படுத்துகிறது.
வருண பகவான்
இந்து மதத்தில், நீர் மற்றும் பெருங்கடல்களின் கடவுளான வருண பகவான் நீர் வடிவில் இருக்கிறார். பூஜையறையில் தண்ணீரை வைப்பது உலகத்தை காக்கும் வருண பகவானை மகிழ்விப்பதாக நம்பப்படுகிறது, இவ்வாறு செய்வது வீட்டிற்கு செழிப்பைக் கொண்டுவருகிறது.
நைவேத்தியம்
தினசரி பூஜைக்குப் பிறகு, தெய்வங்களுக்கு பழங்கள், இனிப்புகள் அல்லது பஞ்சாமிர்தம் போன்ற பிரசாதம் அல்லது நைவேத்தியத்தை வழங்குகிறோம். நைவேத்தியம் செய்த பிறகு, தெய்வங்களுக்கு நீர் பிரசாதமாக வழங்கப்படுகிறது, இது செழிப்பை அழைப்பதாக கருதப்படுகிறது.
ஆரத்தி
ஆரத்தி தட்டில் தண்ணீர் வைத்து நான்கு திசைகளிலும் தெளிக்கப்படுகிறது. தெய்வங்களின் பாதங்களைக் கழுவும் நீராகிய சரணாமிர்தமும் பூஜைக்குப் பிறகு அனைவருக்கும் வழங்கப்படுகிறது.
வாஸ்து படி பூஜையறையில் தண்ணீரை எப்படி வைக்க வேண்டும்?
வாஸ்து படி, வழிபாட்டு இடத்தில் ஒரு பானை தண்ணீரை வைத்திருப்பது செழிப்பை உறுதிப்படுத்துகிறது மற்றும் நேர்மறை ஆற்றல்களை மேம்படுத்துகிறது. பூஜை அறையில் தண்ணீர் வைக்கும் போது வாஸ்து கொள்கைகளை மனதில் கொள்ள வேண்டும்.
- வீட்டின் வடக்கு அல்லது வடகிழக்கு மூலையில் தண்ணீர் பாத்திரத்தை வைக்கவும்.
- தண்ணீரை சேமித்து வைக்க செம்பு அல்லது ஏதேனும் உலோக பாத்திரத்தை தேர்வு செய்யவும். தாமிரம் ஒரு சிறந்த தேர்வாகும், ஏனெனில் இது எதிர்மறையை உறிஞ்சுவதாகக் கருதப்படுகிறது. இது ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது என்று அறியப்படுகிறது.
- ஒவ்வொரு பூஜையின் போதும் தண்ணீரை மாற்றுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
- நேர்மறை ஆற்றலை கொண்டு வர வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் தண்ணீரை தெளிக்கவும்.



Click it and Unblock the Notifications
