Latest Updates
-
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்... -
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...!
குளித்து முடித்தவுடன் இந்த 8 விஷயங்களை தெரியாம கூட செஞ்சுராதீங்க... இல்லனா வீட்டில் பணக்கஷ்டம் வரும்...!
குளியலறை என்பது பொதுவாக பெரும்பாலான மக்களால் புறக்கணிக்கப்படும் இடமாகும். இந்த இடத்தின் தூய்மை பற்றி பொதுவாக மக்கள் அதிகம் சிந்திப்பதில்லை. வாஸ்து படி இது அதிகபட்ச எதிர்மறை ஆற்றலை உருவாக்கும் இடமாகும்.
இதன் காரணமாக நிதி இழப்புகள் மற்றும் வளர்ச்சிக்கு தடைகள் காணப்படுகின்றன. எனவே அதை தவிர்க்க சில முக்கியமான வாஸ்து குறிப்புகளை பின்பற்ற வேண்டும். வாஸ்து படி, குளித்து முடித்தபின் நீங்கள் செய்யும் சில செயல்கள் உங்களின் அதிர்ஷ்டத்தை பாதிப்பதுடன் உங்கள் வீட்டில் வாஸ்து தோஷத்தையும் ஏற்படுத்துமாம்.

வாளியில் நீரை மிச்சம் வைக்கக்கூடாது
குளித்த பின் வாளியில் தண்ணீர் விடக்கூடாது. அந்த எஞ்சிய நீரில் யாராவது குளித்தால், அது அந்த நபரின் வாழ்க்கையை பாதிக்கும் அதே நேரத்தில், அது உங்களுக்கும், அவர்களுக்கும் துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும்.
நீரை நிரப்பி வைக்க வேண்டும்
குளித்த பிறகு, வாளியை காலியாக வைக்க வேண்டாம். ஆனால் வாஸ்து படி வாளியில் சுத்தமான தண்ணீரை நிரப்ப வேண்டும். நீங்கள் தண்ணீரை நிரப்ப விரும்பவில்லை என்றால், வாளியை தலைகீழாக கவிழ்த்து வைக்கவும். இதனால் வாஸ்து தோஷம் ஏற்படாது.
குங்குமம் வைக்கக்கூடாது
குளித்த உடனேயே முடி ஈரமாக இருந்தால், திருமணமான பெண்கள் ஒருபோதும் குங்குமம் வைக்கக்கூடாது. இது அவர்கள் மீது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதோடு, அவர்களின் மனதில் எதிர்மறை எண்ணங்களும் வரும்.
நகம் வெட்டக்கூடாது
குளித்த உடனேயே கூர்மையான எந்தப் பொருளையும் பயன்படுத்தக் கூடாது. காய்கறி வெட்டுவது, நகம் வெட்டுவது போன்றவை எக்காரணம் கொண்டும் தவிர்க்கப்பட வேண்டும். குளிப்பதற்கு முன்னரே நகம் வெட்டுவது சிறந்தது.
நெருப்பைத் தொடக்கூடாது
குளித்து முடிந்தவுடன் நேராக சென்று நெருப்பைத் தொடக்கூடாது. முதலில் நீங்கள் ஏதாவது சாப்பிட்டுவிட்டு அதன்பின் சமையலறைக்குச் செல்ல வேண்டும்.
மேக்கப் போடக்கூடாது
குளித்த உடனேயே மேக்கப் போடாதீர்கள். உங்கள் தலைமுடி ஈரமாக இருந்தால், மேக்கப் செய்வது தடைசெய்யப்பட்டதாகக் கருதப்படுகிறது. இதனால் எதிர்மறை ஆற்றல் வெளிப்படும் முடியில் மிக விரைவாக நுழைகிறது. எனவே இந்த விஷயத்தை மனதில் கொண்டு கவனமாக இருப்பது நல்லது.
குளியலறையைத் துடைக்க வேண்டும்
குளித்த பிறகு குளியலறையை துடைக்கவும். அதை ஈரமாக வைக்க வேண்டாம். உங்கள் குளியலறையை ஒழுங்கற்றதாகவும், சுத்தமில்லாமலும் வைத்திருக்க வேண்டாம். இப்படிச் செய்வதால் வீட்டில் பணத் தட்டுப்பாடு ஏற்படும். குளித்த பிறகு, எப்போதும் குளியலறையை சரியாக சுத்தம் செய்து, பொருட்களை ஒழுங்கமைக்கவும், வைக்க வேண்டிய பொருட்களை வைக்கவும்.
ஈரமான துணிகளை விட்டுவிடக்கூடாது
ஈரமான துணிகளை குளியலறையிலேயே விட்டுவிடாதீர்கள். வாஸ்து படி, அவ்வாறு செய்வது உங்கள் வீட்டில் சூரியனின் நிலையைப் பலவீனப்படுத்துகிறது. எனவே, குளித்த பின் ஈரமான ஆடைகளை விட்டு விடாதீர்கள். மாறாக, குளிப்பதற்கு முன்னரே அதனைத் துவைக்க வேண்டும். இல்லையெனில், பலவீனமான சூரியனால், நபரின் மரியாதை மற்றும் கௌரவம் குறையும். இத்துடன் பண இழப்பையும், பல போராட்டங்களையும் சந்திக்க வேண்டியிருக்கும்.
குளியலறையை சுத்தம் செய்யுங்கள்
குளித்த உடனேயே குளியலறையை சுத்தம் செய்யுங்கள், இல்லையெனில் ராகு, கேது மற்றும் சனி கிரகங்கள் எரிச்சலடையும். இதனாலேயே இந்த மூன்று கிரகங்களின் தோஷங்கள் வேகமாக அதிகரிக்கின்றன. நீங்கள் நிதி இழப்பை சந்திக்க நேரிடும்.



Click it and Unblock the Notifications












