Latest Updates
-
ராஜஸ்தானி பஞ்சரத்ன பருப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
2050-ல் உலகம் சந்திக்கப்போகும் பேரழிவு - இந்தியாவிற்கு என்னென்ன பாதிப்புகள் வரப்போகுது தெரியுமா? -
செப்டம்பர் 01-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகம்: இந்த 3 ராசிகளுக்கு செல்வத்தை அள்ளிக் கொடுக்கப்போகிறது -
மெட்ராஸ் சிக்கன் தொக்கு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
என்னது ஒரு பசுவின் விலை 35 கோடியா? அப்படி என்ன ஸ்பெஷல் இந்த பசு மாட்டில்? ஷாக் ஆகாதீங்க -
பஞ்சாபி சிக்கன் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 30 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு சவால்கள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (30 August - 05 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களின் பண பிரச்சனை முடிவுக்கு வரும்! -
மூட்டு வலி அதிகமா இருக்கா? அப்ப இந்த உளுந்து கஞ்சியை தினமும் காபி, டீ-க்கு பதிலா குடிங்க.. -
செப்டம்பர் மாத சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டிப் பறக்கப்போறாங்க..
Vastu Tips: உங்க வீட்டில் பணம் கோடி கோடியாக கொட்டணுமா? வாஸ்து சொல்லும் இந்த ஓவியங்களில் ஒன்றை வீட்ல மாட்டுங்க!
Vastu Tips: வாஸ்து சாஸ்திரம் என்று அழைக்கப்படும் பழங்கால இந்திய கட்டிடக் கலையின் படி, சுற்றுப்புறங்கள் நமது ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதனால்தான் வீட்டைக் கட்டும்போது சரியான வாஸ்துவுடன் கட்டுவதற்கு பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில் வாஸ்து தோஷம் உள்ள வீட்டில் வசிப்பவர்களுக்கு துரதிர்ஷ்டமும், நிம்மதியின்மையும் வந்து சேரும்.
வாஸ்து சாஸ்திரம் வீட்டில் அதிர்ஷ்டம் மற்றும் மகிழ்ச்சியைக் கொண்டுவர சில கலை படைப்புகளை பரிந்துரைக்கிறது. கலை படைப்புகள் என்று வரும்போது அதில் ஓவியங்களும் அடங்கும். வீட்டில் சில ஓவியங்களை வைப்பது உங்கள் வீட்டின் பணக்கஷ்டத்தை போக்குவதோடு உங்கள் வாழ்க்கையில் நிம்மதியையும் கொடுக்கும். இந்த பதிவில் அதிர்ஷ்டத்துக்கு வீட்டில் வைக்க வேண்டிய ஓவியங்கள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.

விநாயகப் பெருமானின் ஓவியம்
இந்து மதத்தில் முழுமுதற் கடவுள் என்றால் அது விநாயகப் பெருமான்தான். வாஸ்துவால் அங்கீகரிக்கப்பட்ட, இணக்கமான தகவல்தொடர்புக்கும், அதிர்ஷ்டத்துக்கும் உங்கள் வீட்டில் மற்றும் அலுவலகத்தில் விநாயகர் ஓவியத்தை ஓட்டுவதன் மூலம் உங்கள் வெற்றிக்கான பாதையைத் தொடங்குங்கள். விநாயகப் பெருமானின் ஓவியம் உங்களுக்கு ஏற்படும் தடைகளை அழித்து உங்கள் வாழ்க்கையை செழுமையானதாக மாற்றுவார்.
பச்சை மூங்கில்
பச்சை மூங்கில் ஓவியத்தை உங்கள் வீட்டில் வைப்பது உங்கள் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. மூங்கில் தகவமைப்பு மற்றும் உறுதியின் சின்னமாகும், இது தொழில்முறை மற்றும் நிதி வளர்ச்சிக்கு தேவையான பண்புகளாகும். பச்சை மூங்கில் ஓவியத்தை உங்கள் அலுவலகத்தில் வைப்பது உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவும்.
மயில் இறகுகள்
வாஸ்து பரிந்துரைக்கும் மயில் இறகு ஓவியத்தால் சுவரை அலங்கரிப்பதன் மூலம் உங்கள் பணியிடத்தில் அதிர்ஷ்டத்தையும், படைப்பாற்றலையும் ஊக்குவிக்கவும். மயில் இறகுகள், அவற்றின் தெளிவான சாயல்களால் வேறுபடுகின்றன, அவை அசல் தன்மை மற்றும் கலை வெளிப்பாட்டைக் குறிக்கின்றன. கூடுதலாக, மயில் இறகுகள் வாஸ்து சாஸ்திரம் மற்றும் இந்து மதத்தில் மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது.
பாய்ந்து செல்லும் குதிரைகள் ஓவியம்
வாஸ்து சாஸ்திரத்தின் பண்டைய வேதக் கருத்துக்கள் குதிரைகளின் படங்கள் அல்லது ஓவியங்களுக்கு மகத்தான மதிப்பைக் கூறுகின்றன. குதிரைகள் சக்தி, செழிப்பு, நல்லிணக்கம் மற்றும் முன்னேற்றத்தின் சின்னமாக இருக்கிறது, குறிப்பாக பாய்ந்து செல்லும் குதிரைகள் வெற்றியைக் குறிக்கிறது. எனவே வீட்டில் அல்லது பணியிடத்தில் ஏழு குதிரைகளின் ஓவியம் அல்லது அதைப் போன்றவற்றை வைப்பது உங்கள் வாழ்க்கையில் நேர்மறை ஆற்றலை ஈர்க்க ஒரு சிறந்த அணுகுமுறையாகும்.
சூரிய உதய ஓவியம்
வாஸ்துவால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு காலையின் அமைதியை சித்தரிக்கும் ஒரு ஓவியம் உங்கள் வீடு அல்லது பணியிடத்தில் இனிமையான ஆற்றலைக் கொண்டுவரும். உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் நீங்கள் சந்திக்கும் இடத்தில் இந்த கலைப்படைப்பை வைக்கவும். ஒரு விடியல் ஓவியத்தின் நிதானமான சாயல்கள் மகிழ்ச்சியை ஊக்குவிக்கும் மற்றும் செழிப்பைக் கொண்டுவரும் நேர்மறையான சூழலை உருவாக்கலாம்.
புத்தர் ஓவியங்கள்
வீட்டில் புத்தர் ஓவியங்களை மாட்டுவது வீட்டில் அமைதியான, நேர்மறை ஆற்றல்களை ஈர்க்கின்றன. இந்த ஓவியங்கள் வீடுகள் மற்றும் பணியிடங்களில் அதிர்ஷ்டம் மற்றும் செழிப்பை ஈர்க்க பரவலாக பிரபலமாக உள்ளன. வாஸ்து சாஸ்திரத்தின் படி, தியானம் செய்யும் நிலையில் புத்தரின் ஓவியத்தை வீட்டில் மாட்ட வேண்டும், இது அமைதி மற்றும் செழிப்பை உறுதி செய்கிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
